மேலும் அறிய

Amar Jawan Jyoti: பலரையும் வியக்க வைக்கும் அமர் ஜவான் ஜோதி.. வரலாறு அறிவோமா?

அமர் ஜவான் ஜோதி, டெல்லி இந்தியா கேட்டில் கடந்த 50 ஆண்டுகளாக போரில் உயிர்நீத்த வீரர்களின் நினைவாக ஒளிரும் ஜோதி. ஆனால் இந்த ஜோதி இன்னும் சற்று நேரத்தில் அணைக்கப்பட்டு தேசிய போர் நினைவுச் சின்னத்துடன் இணைக்கப்படுகிறது.

அமர் ஜவான் ஜோதி, டெல்லி இந்தியா கேட்டில் கடந்த 50 ஆண்டுகளாக போரில் உயிர்நீத்த வீரர்களின் நினைவாக ஒளிரும் ஜோதி. ஆனால் இந்த ஜோதி இன்னும் சற்று நேரத்தில் அணைக்கப்பட்டு தேசிய போர் நினைவுச் சின்னத்துடன் இணைக்கப்படுகிறது.

இந்தத் தருணத்தில் நாம் அமர் ஜவான் ஜோதியின் வரலாற்றை சற்று அறிந்து கொள்வோம்! "அமர் ஜவான்" என்றால் அழிவில்லாத படை வீரன் என்று பொருள். அந்தப் நினைவுச் சின்னத்தின் நான்கு பக்கங்களிலும் அமர் ஜவான் என்று தங்கத்தால் செதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அதன் உச்சியின் மீது எல் 1 ரக துப்பாக்கி நின்ற நிலையில் காணப்படுகிறது. அதில் அடையாளம் காணமுடியாத படை வீரர் ஒருவரின் தலைக்கவசமும் காணப்படுகிறது. இந்த பீடம் நான்கு அடுப்புகளால் பிணைக்கப்பட்ட நிலையில் அமைந்துள்ளது, அவற்றில் ஒன்று தொடர்ந்து எரியும் சுடரைக் கொண்டுள்ளது.

இன்னும் சற்று நேரத்தில் அந்த அணையா ஜோதி அணைக்கப்படவிருக்கிறது.  இந்த நிகழ்வு பாதுகாப்புத் துறையால் நடத்தப்படவுள்ளது. சீஃப் ஆஃப் டிஃபன்ஸ் ஸ்டாஃபின் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் பாலபத்ர ராதா கிருஷ்ணா தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. அமர் ஜவானின் ஜோதி, தேசிய நினைவுச் சின்ன ஜோதியில் இணைக்கப்படும்.

இது தான் வரலாறு:

1971 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றி கண்டது. இந்தப் போர் தான் வங்கதேசம் உருவாகக் காரணமாக இருந்தது. இந்தப் போரில் உயிர் நீத்த வீரர்களின் நினைவாக அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் இந்த நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டது. 1972ல் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின நாளன்று இந்திரா காந்தி இந்த அமர் ஜவான் நினைவுச் சின்னத்தை நிறுவினார். இந்த பீடம் நான்கு அடுப்புகளால் பிணைக்கப்பட்ட நிலையில் அமைந்துள்ளது. அவற்றில் ஒன்று தொடர்ந்து எரியும் சுடரைக் கொண்டுள்ளது. சுதந்திரம் தினம், குடியரசு தின நாளன்று இங்கு மற்ற ஜோதிகளும் ஏற்றப்படும். 2006 ஆம் ஆண்டுவரை எல்பிஜி கேஸ் மூலம் இந்த ஜோதி எரியச் செய்யப்பட்டது. அதன் பின்னர் இன்றுவரை பைப் மூலமாக இயற்கை எரிவாயு செலுத்தப்படுகிறது.

அணைக்கவில்லை..இணைக்கிறோம்:

அமர் ஜவான் ஜோதி அணைக்கப்படுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், ஜோதி அணைக்கவில்லை, இணைக்கப்படுகிறது என அரசு வட்டாரம் தெரிவிக்கின்றது. தேசிய போர் நினைவுச் சின்னம் 2019ல் நிறுவப்பட்டது. இதில் 1971 போர் மட்டுமல்ல அதற்கு முந்தைய போரில் உயிர் நீத்த அனைத்து வீரர்களின் பெயரும் பொரிக்கப்பட்டுள்ளது. இரண்டு அணையா ஜோதிகளை தொடர்ந்து பாதுகாப்பதில் உள்ள நடைமுறை சிக்கலாலேயே ஒரே ஜோதியாக ஐக்கியமாக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தின விழாவின்போது அமர் ஜவானில் பிரதமர் அஞ்சலி செலுத்துவது மரவு. ஆனால் கடந்த ஆண்டே பிரதமர் மோடி இந்த மரபை மாற்றிவிட்டார். இந்நிலையில் இந்த ஆண்டு குடியரசு நாளுக்கு முன்னதாகவே அமர் ஜவான் ஜோதி, போர் நினைவுச் சின்ன ஜோதியுடன் இணைக்கப்படுகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Embed widget