மேலும் அறிய

Crime: கொலை...கொள்ளை...பயங்கரவாதம்..! மோஸ்ட் வான்டட் தீவிரவாதி மர்ம மரணம்...! என்ன நடந்தது..?

கடந்த 2008ம் ஆண்டு, டர்ன் தரனில் தனிப்பட்ட பகை காரணமாக ஒருவரை கொலை செய்ததன் மூலம் குற்ற உலகுக்கு அவர் அறிமுகம் ஆனார்.

பஞ்சாப் காவல்துறையின் உளவுத்துறை தலைமையகத்தில் கடந்த மே மாதம் ராக்கெட் லாஞ்சர் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் உள்பட பல்வேறு பயங்கரவாத சம்பவங்களில் தொடர்புடையவர் காலிஸ்தானி தீவிரவாதியான ஹர்விந்தர் சிங் ரிண்டா.

இவர், பாகிஸ்தானில் சந்தேகத்திற்குரிய வகையில் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மரணத்திற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்றாலும், அவர் லாகூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 

காலிஸ்தான்:

தடைசெய்யப்பட்ட காலிஸ்தானி அமைப்பான பாபர் கல்சா இன்டர்நேஷனலில் உறுப்பினராக இருந்துள்ளார் ஹர்விந்தர் சிங். பஞ்சாபில் தேசவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளூர் கும்பல்களின் உதவியைப் பெற்று பாகிஸ்தானில் வசித்து வந்ததாக நம்பப்பட்டு வந்தது.

இந்த ஆண்டு மே மாதம் மொஹாலியில் உள்ள பஞ்சாப் போலீஸ் உளவுத்துறை தலைமையகத்தில் ராக்கெட் மூலம் இயக்கப்படும் கையெறி குண்டு (RPG) தாக்குதல் வழக்கில் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது. அதே மாதத்தில், ஹரியானாவில் வாகனத்தில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான வழக்கிலும் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

கடந்த நவம்பரில் நவன்ஷஹரில் உள்ள குற்றப் புலனாய்வு முகமை அலுவலகத்தில் கையெறி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் இவர் ஈடுபட்டிருப்பது பின்னர் கண்டறியப்பட்டது. குண்டர்கள் மற்றும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத குழுக்களுக்கு இடையேயான முக்கிய இணைப்பாக ஹர்விந்தர் சிங் கருதப்படுகிறார்.

மோஸ்ட் வாண்டட் தீவிரவாதி:

போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை எல்லை தாண்டி கடத்தி சென்றதில் அவருக்கு தொடர்பு இருப்பதால் தேசிய பாதுகாப்புக்கு அவரால் அச்சுறுத்தல் இருப்பதாக விசாரணை அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றன.

பஞ்சாபில் "மோஸ்ட் வாண்டட் 'ஏ' பிளஸ் பிரிவு" குண்டராக அவர் கருதப்படுகிறார். மகாராஷ்டிரா, சண்டிகர், ஹரியானா மற்றும் மேற்கு வங்கம் போன்ற பல இடங்களில் காவல்துறையால் தேடப்பட்டு வருகிறார். பல ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாபில் உள்ள டர்ன் தரன் மாவட்டத்தில் உள்ள சர்ஹாலி கிராமத்தில் இருந்து மகாராஷ்டிராவில் உள்ள நாந்தேடுக்கு அவர் குடிபெயர்ந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

கடந்த 2008ஆம் ஆண்டு, டர்ன் தரனில் தனிப்பட்ட பகை காரணமாக ஒருவரை கொலை செய்ததன் மூலம் குற்ற உலகுக்கு அவர் அறிமுகம் ஆனார். சண்டிகரில் பட்டப்பகலில் ஹோஷியார்பூர் பஞ்சாயத்து தலைவரை ஹர்விந்தர் சிங் கொலை செய்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

தனது கும்பலுடன் சேர்ந்து கொலை, கொள்ளை, மிரட்டி பணம் பறித்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டுள்ளார். 30க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்து அவர் தலைமறைவாக இருந்து வந்தார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

SC on Menstrual Leave: ”இப்படிலாம் பண்ண பொண்ணுங்கள யாரும் வேலைக்கு எடுக்கமாட்டாங்க” - உச்சநீதிமன்றம் அட்வைஸ்
SC on Menstrual Leave: ”இப்படிலாம் பண்ண பொண்ணுங்கள யாரும் வேலைக்கு எடுக்கமாட்டாங்க” - உச்சநீதிமன்றம் அட்வைஸ்
Fuel Shortage: எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என மத்திய அரசு உறுதி
Fuel Shortage: எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என மத்திய அரசு உறுதி
Crude Oil Products: பெட்ரோல் முதல் தார் வரை.. கச்சா எண்ணெயில் இருந்து இவ்ளோ எடுக்குறாங்களா?
Crude Oil Products: பெட்ரோல் முதல் தார் வரை.. கச்சா எண்ணெயில் இருந்து இவ்ளோ எடுக்குறாங்களா?
Top 10 News Headlines: சிலிண்டர் பிரச்னையில் தீர்வு.. பாஜகவுக்கு எச்சரிக்கை.. 11 மணி செய்திகள் இதோ!
Top 10 News Headlines: சிலிண்டர் பிரச்னையில் தீர்வு.. பாஜகவுக்கு எச்சரிக்கை.. 11 மணி செய்திகள் இதோ!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Government Employees : இன்று அரசு அதிகாரிகள் கட்டாயம் அலுவலகத்திற்கு வரனும்.! தமிழக அரசு முக்கிய உத்தரவு- காரணம் என்ன.?
இன்று அரசு அதிகாரிகள் கட்டாயம் அலுவலகத்திற்கு வரனும்.! தமிழக அரசு முக்கிய உத்தரவு- காரணம் என்ன.?
SC Menstrual: ”இப்படிலாம் பண்ண பொண்ணுங்கள யாரும் வேலைக்கு எடுக்கமாட்டாங்க” - உச்சநீதிமன்றம் அட்வைஸ்
SC Menstrual: ”இப்படிலாம் பண்ண பொண்ணுங்கள யாரும் வேலைக்கு எடுக்கமாட்டாங்க” - உச்சநீதிமன்றம் அட்வைஸ்
CM Stalin: ”கண்ண திறக்கனும் சாமி” சாதனை பட்டியலில் இதை மறந்துட்டீங்க - சிஎம் போஸ்டில் நெட்டிசன்கள் ஆவேசம்
CM Stalin: ”கண்ண திறக்கனும் சாமி” சாதனை பட்டியலில் இதை மறந்துட்டீங்க - சிஎம் போஸ்டில் நெட்டிசன்கள் ஆவேசம்
கேங்ஸ்டர் மாப்பிள்ளையை தூக்கிய போலீசார்.. ”கல்யாணம் முடிக்கணும்” போலீஸ் ஸ்டேஷனில் கதறிய மணமகள்
கேங்ஸ்டர் மாப்பிள்ளையை தூக்கிய போலீசார்.. ”கல்யாணம் முடிக்கணும்” போலீஸ் ஸ்டேஷனில் கதறிய மணமகள்
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
Embed widget