மேலும் அறிய

Sabarimala Ayyappan temple: பம்பை ஆற்றில் அசரடிக்கும் வெள்ளம்.. சபரிமலை ஐயப்பன் கோயில் கட்டுப்பாடுகள் இவை..

சபரிமலை ஐயப்பன் கோயில் பகுதியில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் பக்தர்களுக்கு கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவிலுள்ள மிகவும் பிரபலம் வாய்ந்த கோயில்களில் ஒன்று சபரிமலை ஐயப்பன் கோயில். இங்கு சிறப்பு பூஜை காலங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். அந்தவகையில் இன்று நிறபுதாரி பூஜை நடைபெற உள்ளது. இதற்காக அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்று கணிக்கப்பட்டது. எனினும் கேரளாவில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. 

இந்நிலையில் சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் இன்று பிற்பகல் 3 மணிக்கு மேல் பக்தர்கள் மலையேற அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தற்போது கோயிலில் உள்ள பக்தர்கள் அனைவரும் மாலை 6 மணிக்குள் திரும்பிவிட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பத்தனாம்திட்டா, பம்பை, சபரிமலை பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மாவட்ட நிர்வாகம் இதை வலியுறுத்தியுள்ளது. மேலும் கனமழை காரணமாக ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் பேரிடர் மீட்பு படையினரை தயாராக வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக இந்த நிகழ்வு தொடர்பாக கோயில் நிர்வாகிகளுடன் மாவட்ட ஆட்சியர் திவ்யா ஐயர் ஆலோசனை நடத்தினார். அதில் திட்டமிட்டப்படி கோயில் திருவிழா நடைபெறும் என்று முடிவு எடுக்கப்பட்டது. அத்துடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் பம்பை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக பக்தர்களுக்கு அங்கு புனித நீராட தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்தக் கூடத்தில் கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். மேலும் இந்த திருவிழாவிற்கு பக்தர்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் பத்தனாம்திட்டா முதல் எருமேலி வரையிலான சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டது. கேரள போக்குவரத்து கழகம் சார்பில் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துங்களும் விடப்பட்டிருந்தன.

கேரளாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு உள்ள பல ஆறுகளில் நீர் வறத்து மிகவும் அதிகமாகியுள்ளது. குறிப்பாக சாலக்குடி ஆற்றிற்கு நீர் வறத்து மிகவும் அதிகமாக உள்ளதால் ஏர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னையில் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவருக்கு அரிவாள் வெட்டு! பரபரப்பு
சென்னையில் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவருக்கு அரிவாள் வெட்டு! பரபரப்பு
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னையில் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவருக்கு அரிவாள் வெட்டு! பரபரப்பு
சென்னையில் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவருக்கு அரிவாள் வெட்டு! பரபரப்பு
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Robot Suicide: 9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
Breaking News LIVE, July 5:பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கிற்கு அரிவாள் வெட்டு - மருத்துவமனையில் அனுமதி
Breaking News LIVE, July 5: பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கிற்கு அரிவாள் வெட்டு - மருத்துவமனையில் அனுமதி
Watch Video: ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Embed widget