மேலும் அறிய

Kerala | திறக்கப்பட்டது கேரள குதிரன் சுரங்கப் பாதை ; வாகன ஓட்டிகளே செல்லத் தயாரா?

கேரளா மற்றும் தென்னிந்தியாவின் முதல் சாலை சுரங்கப் பாதையாக, மத்திய அரசின் நிதியில் கடந்த 2016 ம் ஆண்டு குதிரன் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டது.

கேரளா மாநிலத்தின் முக்கிய நுழைவாயிலாக கோவை மாவட்டம் வாளையார் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் பயணிக்காமல், சமவெளி பகுதி வழியாக அம்மாநிலத்திற்கு செல்ல உள்ள ஒரே வழி இது தான். பாலக்காடு கணவாயில் அமைந்துள்ள இந்த பாதையில், சேலம் - கொச்சி புறவழிச் சாலை அமைந்துள்ளது. கேரளா மாநிலத்தில் உள்ள முக்கியத் துறைமுகங்களுக்கு செல்ல எளிதான வழி இது தான் என்பதால், பல மாநிலங்களில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள் இந்த வழி வழியாக கேரளா சென்று வருகின்றன. 

இந்த வழித்தடத்தில் திருச்சூர் மாவட்டத்தில் பாலக்காடு - திருச்சூர் சாலையில் குதிரன் என்ற இடத்தில் மலைகளை குடைந்து சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மன்னுத்தி - வடக்கன்சேரி பகுதிகளை இணைக்கும் இப்பகுதி, மலைப் பாங்கான பகுதியாக உள்ளது. இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருகின்றன. கனரக சரக்கு வாகனங்கள் மெதுவான வேகத்தில் செல்வதால், போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படுகின்றன. சாலையின் இடையே குறுக்கிடும் மலையை கடக்க 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. அரை மணி நேரத்திற்கும் மேலாக கால விரயம் ஏற்படுகிறது. இவற்றை தவிர்க்கும் வகையில் மலையை குடைந்து சுரங்கப் பாதை அமைக்க திட்டமிடப்பட்டது.


Kerala  | திறக்கப்பட்டது கேரள குதிரன் சுரங்கப் பாதை ; வாகன ஓட்டிகளே செல்லத் தயாரா?

கேரளா மற்றும் தென்னிந்தியாவின் முதல் சாலை சுரங்கப் பாதையாக, மத்திய அரசின் நிதியில் கடந்த 2016 ம் ஆண்டு குதிரன் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டது. பீச்சி - வாசஹனி வன விலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதியில் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் பணிகள் செய்யப்பட்டன. பாலக்காடு - திருச்சூர் சாலை மற்றும் திருச்சூர் - பாலக்காடு சாலை ஆகிய இரண்டு பாதைகளில் இரண்டு சுரங்கப் பாதைகள் அமைக்கப்படுகின்றன. இரண்டிலும் சேர்த்து 6 வழிச் சாலையாக 1.6 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்படுகிறது. இதனால் இரண்டு நிமிடங்களில் அந்த மலையை கடந்து செல்ல முடியும். சுமார் 1300 கோடி ரூபாய் செலவில் இந்த சுரங்கப் பாதை பணிகள் செயல்படுத்தப்பட்டு வந்தது. எனினும் பணிகள் மெதுவாக நடந்து வந்ததால், வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வந்தனர். 

இந்நிலையில் பாலக்காடு - திருச்சூர் சாலையில் உள்ள சுரங்கப் பாதை பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு வழி பாதை திறக்கப்பட்டது. இதையடுத்து வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 964 மீட்டர் தூரம் மலைக்குள் சுரங்கப் பாதை செல்கிறது. 14 மீட்டர் அகலமும், 10 மீட்டர் உயரமும் கொண்டதாக சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இப்பாதையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 1200 எல்.இ.டி. விளக்குகள் மற்றும் 100 மீட்டருக்கு ஒன்று என்ற வீதத்தில் சிசிடிவி கேமராக்கள், இரண்டு எமர்ஜென்சி போன்கள் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன. 

We will open one side of the Kuthiran Tunnel in Kerala today. This is the first road tunnel in the state and will drastically improve connectivity to Tamil Nadu and Karnataka. The 1.6 km long tunnel is designed through Peechi- Vazahani wildlife sanctuary. pic.twitter.com/9yG0VhrsLq

— Nitin Gadkari (@nitin_gadkari) July 31, 2021

">

கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, குதிரன் சுரங்கப் பாதை திறக்கப்படும் என டிவிட்டரில் பதிவிட்டார். இதன் திறப்பு விழா எளிமையாக நடத்தப்பட்டது. அன்று மாலை பாலக்காடு - திருச்சூர் சாலையில் உள்ள சுரங்கப் பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. அதேசமயம் எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் யாருக்கும் அழைப்பு விடுக்காமல் புறக்கணித்ததாக புகாரும் எழுந்துள்ளது. திருச்சூர் - பாலக்காடு சாலையில் சுரங்கப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு அப்பாதையும் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 :  ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம்: 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம்: 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?BSP Armstrong death | ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 :  ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம்: 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம்: 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி
Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்.. நீதிமன்றம் அனுமதி!
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!
Embed widget