மேலும் அறிய

HC Denies Abortion : சகோதரருடன் உறவு.. கருவுற்ற 12 வயது சிறுமி.. கருவை கலைக்க அனுமதி மறுத்த கேரள உயர்நீதிமன்றம்

kerala HC: கேரளாவில் தகாத உறவால் கருவுற்ற 12 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய, மாநில உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.

Kerala HC: கேரளாவில் தகாத உறவால் கருவுற்ற 12 வயது சிறுமியின் வயிற்றில் உள்ள கரு, 34 வாரங்களை கடந்துவிட்டதால், அபாயங்களை கருத்தில்கொண்டு அதனை கலைக்க கூடாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

12 வயது சிறுமியின் கருவை கலைக்க அனுமதி மறுப்பு:

18 வயதை கூட பூர்த்தி செய்யாத தனது சகோதரருடன், பாலியல் உறவில் ஈடுபட்டதால்,  12 வயது சிறுமியின் கருவை மருத்துவ ரீதியாக கலைக்க கேரள உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. கரு ஏற்கனவே 34 வார கர்ப்பத்தை அடைந்து முழுமையாக வளர்ச்சியடைந்துவிட்டதால், மருத்துவ ரீதியாக அதனை கலைக்க வாய்ப்பில்லை என்று கூறி, கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. இதுதொடர்பான தீர்ப்பில், “கரு முழுமையாக வளர்ச்சியடைந்துள்ளதோடு, கருப்பைக்கு வெளியே அதன் வாழ்க்கைக்குத் தயாராகிறது. இந்த கட்டத்தில் கருவை கலைப்பது சாத்தியமற்றது.  எனவே, குழந்தை பிறக்க அனுமதிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியை பெற்றோர்களின் காவலில் இருக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி,  குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட அவரது சகோதரர் சிறுமியை எந்த சூழலிலும் அணுக முடியாததை உறுதி செய்யுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 36 வாரங்களுக்குப் பிறகு அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுகி, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் இயற்கையான முறையிலோ அல்லது அறுவை சிகிச்சை அடிப்படையிலோ குழந்தை பிறப்பதை உறுதி செய்யவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். 

வழக்கு விவரம்:

12 வயது சிறுமியின் 34 வார கர்ப்பத்தை மருத்துவ ரீதியாக கலைக்கக் கோரி அவரது பெற்றோர் நீதிமன்றத்தை அணுகினர். தற்போது கருவுற்று இருப்பது சிறுமிக்கு உடலியல் மற்றும் உளவியல் ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று மனுதாரர்கள் வாதிட்டனர். அதோடு சமீப காலம் வரை சிறுமியின் கர்ப்பம் குறித்து தங்களுக்கு தெரியாது என்று நீதிமன்றத்தில் வாதிட்டனர். 

மருத்துவக்குழு பரிந்துரை:

சிறுமியின் இளமை வயது மற்றும் உளவியல் அதிர்ச்சியைக் கருத்தில் கொண்டு 34 வார கருவை கலைக்கலாம் என முதலில் மருத்துவ குழு பரிந்துரைத்தது. அதேநேரம் நீதிமன்ற விசாரணையின்போது, அந்த சிறுமி தனது கருவை அதன் முழு காலத்திற்கு சுமக்கும் அளவுக்கு ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர். ஆனால், மருத்துவக் குழுவின் அறிக்கைகள் போதுமானதாக இல்லாததால், சிறுமி மற்றும் கருவை மறுமதிப்பீடு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதில்,  கர்ப்பம் முழுவதையும் இன்னும் 2 வாரங்களுக்குத் தொடர்வது, சிறுமியின் மீது கடுமையான உளவியல் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்று மருத்துவக் குழு பரிந்துரைத்தது. அதனை ஏற்ற நீதிமன்றம் சிறுமியின் கருவை கலைக்க அனுமதி மறுத்துள்ளது.

முன்னதாக, கடந்த ஆண்டு ஏப்ர மாதம் கொல்கத்தா உயர்நீதிமன்ற்த்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதில்,  கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் 12 வயது சிறுமியின் கருவை மருத்துவ ரீதியாக கலைக்க அனுமதி கோரப்பட்டது. ஆனால்,  குறிப்பிட்ட வாரங்களுக்குப் பிறகு கருவை கலைப்பது தாய் மரணம் அடையும் அபாயத்தை உள்ளடக்கியது என்று கூறி, அந்த கோரிக்கையை கொல்கத்தா உயர்நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Heavy Rain: சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
சென்னையில் கனமழை ; அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்த சோகம் !! சிக்கியவர்கள் நிலை என்ன ?
சென்னையில் கனமழை ; அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்த சோகம் !! சிக்கியவர்கள் நிலை என்ன ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

AKS Vijayan House Theft | திமுக பிரமுகர் வீட்டில்300 சவரன் கொள்ளை?தஞ்சையில் பரபரப்பு | Tanjore
சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Heavy Rain: சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
சென்னையில் கனமழை ; அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்த சோகம் !! சிக்கியவர்கள் நிலை என்ன ?
சென்னையில் கனமழை ; அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்த சோகம் !! சிக்கியவர்கள் நிலை என்ன ?
90ஸ் கிட்ஸ் வாழ்க்கையில் விளையாடிய இன்ஸ்டா காதலி.. நாமக்கல்லில் நடந்தது என்ன?
90ஸ் கிட்ஸ் வாழ்க்கையில் விளையாடிய இன்ஸ்டா காதலி.. நாமக்கல்லில் நடந்தது என்ன?
OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: கனமழை எச்சரிக்கை! பாதிப்புகள் என்ன? வானிலை அறிக்கை பரபரப்பு!
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: கனமழை எச்சரிக்கை! பாதிப்புகள் என்ன? வானிலை அறிக்கை பரபரப்பு!
IND vs SA: இன்று 2வது போட்டி.. தொடரை வெல்லுமா இந்தியா? ரோ-கோ மீண்டும் ஜொலிப்பார்களா?
IND vs SA: இன்று 2வது போட்டி.. தொடரை வெல்லுமா இந்தியா? ரோ-கோ மீண்டும் ஜொலிப்பார்களா?
Embed widget