மேலும் அறிய

கேரளாவில் சாதி சான்றிதழ் சிக்கல்: 50 லட்சம் தமிழர்களின் எதிர்காலம் கேள்விக்குறியா?

1870-களில் மூணார் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக, தேனி, திருநெல்வேலி, மதுரைப் பகுதிகளில் இருந்த தமிழ் மக்களை ஆங்கிலேயர்கள் அழைத்துச் சென்றனர்.

கேரளாவின் டுக்கி மாவட்டத்திலுள்ள தேவிகுளம், பீர்மேடு, உடும்பன் சோலை உள்ளிட்ட பகுதிகளில் கிட்டத்தட்ட 50 லட்சம் தமிழர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள், தங்களின் குழந்தைகளை பள்ளி, கல்லூரிகளில் சேர்ப்பதற்கு கேரள அரசிடம் சாதிச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தால், 1950-ல் இங்கு பிறந்ததற்கான ஆவணங்களைக் கொண்டு வாருங்கள், தருகிறோம் என்று இல்லாத ஆவணங்களைக் கேட்டு அதிகாரிகள் தட்டிக்கழிப்பதாக வேதனைப்படுகின்றனர். அங்கு வாழ்ந்துவரும் தமிழர்கள் 1870-களில் மூணார் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக, தேனி, திருநெல்வேலி, மதுரைப் பகுதிகளில் இருந்த தமிழ் மக்களை ஆங்கிலேயர்கள் அழைத்துச் சென்றனர்.

குறைந்த ஊதியம், அதிக வேலை, பாதுகாப்பில்லாத இருப்பிடம் என்று கொத்தடிமைகளாகக் கூட்டிச் செல்லப்பட்ட இந்த மக்கள்தான், காடுகளாக இருந்த மலையைத் தங்களின் கடும் உழைப்பால் தேயிலை தோட்டங்களாக மாற்றி, தற்போது பெரும் வருவாய் கொடுக்கும் மாவட்டமாக மாற்றியிருக்கிறார்கள். காலம் முழுக்க உழைத்து, உருக்குலைந்துபோன இவர்கள், தங்களின் பிள்ளைகளைப் படிக்கவைத்து நல்ல அந்தஸ்துடன் வாழ வேண்டும் என நினைக்கும் நிலையில், அவர்களுக்குச் சாதிச் சான்றிதழ் கொடுக்க மறுப்பதால், அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்கிறது.

இந்த நிலையில், கேரளாவுக்கு புலம்பெயர்ந்த தமிழ் பேசும் சிறுபான்மையின மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்குவதற்கான திருத்தத்தை விரைவாக மேற்கொள்ளும்படி, மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்படும்,'' என, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உறுதி அளித்துள்ளார். பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கேரளாவுக்கு குடிபெயர்ந்து பல ஆண்டுகளாக அங்கு வசித்து வருகின்றனர். கடந்த 1950க்கு முன்பாக கேரளாவுக்கு புலம்பெயர்ந்தவர்களுக்கு மட்டுமே ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற விதியை மத்திய அரசு வகுத்து இருக்கிறது. இதன் காரணமாக, கேரளாவில் வசிக்கும் தமிழ் பேசும் மொழி ரீதியிலான சிறுபான்மையினருக்கு ஜாதி சான்றிதழ் பெறுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இந்த விதியில் திருத்தம் கொண்டு வரக்கோரி, நடுவட்டம் கோபாலா கிருஷ்ணன் குழு அறிக்கை சமர்ப்பித்தது. அதில், 1950க்கு பதில், 1970, ஜன1 வரை புலம்பெயர் காலத்தை நீட்டிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரள சட்டசபையில் இந்த விவகாரம் குறித்து எம்.எல்.ஏ., ராஜா கேள்வி எழுப்பினார்.

அதற்கு முதல்வர், கடந்த, 1950க்கு முன்பாக பிற மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு நிரந்தரமாக புலம் பெயர்ந்த தமிழ் பேசும் சிறுபான்மையினருக்கு மட்டுமே, தற்போதுள்ள விதிகளின் படி ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. திருவிதாங்கூர், கொச்சின் மற்றும் மதராஸ் மாகாணங்களாக இருந்தபோது, அதாவது 1950க்கு முன்பாக யாரெல்லாம் கேரளாவுக்கு புலம் பெயர்ந்து நிரந்தரமாக குடிபெயர்ந்தனர் என்பதற்கான அதிகாரப்பூர்வ ஆவணங்கள் எதுவும் இல்லை. எனவே, தற்போதுள்ள ஷரத்துகளை திருத்த விரிவாக சரிபார்க்க வேண்டி இருக்கிறது. மேலும், புலம்பெயர் விவகாரம் மத்திய அரசின் பட்டியலுக்குள் இருக்கிறது.

எனவே, குறிப்பிட்ட ஷரத்தை மத்திய அரசு மட்டுமே திருத்த முடியும். இது தொடர்பாக ஏப்16ல் நடந்த அமைச்சரவை கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. தற்போதுள்ள விதிகளில் திருத்தம் கொண்டு வருவதற்கான கருத்துருவை ஏற்படுத்த, அப்போது முடிவு செய்யப்பட்டது. அதன்படி விரிவான கருத்துரு மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மீண்டும், ஆக., 26ல் இது குறித்து அமைச்சரவையில் விவாதித்தோம். அப்போது தமிழ் பேசும் சிறுபான்மை மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்குவது குறித்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தருவது என முடிவு எடுத்துள்ளோம். அதன்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: LPG சிலிண்டர் தட்டுப்பாடு முதல் தேர்தல் தேதி தாமதம் வரை.. முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?பரபரப்பான செய்திகள்!
Top 10 News Headlines: LPG சிலிண்டர் தட்டுப்பாடு முதல் தேர்தல் தேதி தாமதம் வரை.. முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?பரபரப்பான செய்திகள்!
SC on Menstrual Leave: ”இப்படிலாம் பண்ண பொண்ணுங்கள யாரும் வேலைக்கு எடுக்கமாட்டாங்க” - உச்சநீதிமன்றம் அட்வைஸ்
SC on Menstrual Leave: ”இப்படிலாம் பண்ண பொண்ணுங்கள யாரும் வேலைக்கு எடுக்கமாட்டாங்க” - உச்சநீதிமன்றம் அட்வைஸ்
Fuel Shortage: எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என மத்திய அரசு உறுதி
Fuel Shortage: எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என மத்திய அரசு உறுதி
Crude Oil Products: பெட்ரோல் முதல் தார் வரை.. கச்சா எண்ணெயில் இருந்து இவ்ளோ எடுக்குறாங்களா?
Crude Oil Products: பெட்ரோல் முதல் தார் வரை.. கச்சா எண்ணெயில் இருந்து இவ்ளோ எடுக்குறாங்களா?
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026: திமுகவின் கஞ்சத்தனம்.. கையில் புரளும் தொகுதிகள், ஜாக்பாட் விசிக? தேமுதிக? கமல், கம்யூ.,?
TN Election 2026: திமுகவின் கஞ்சத்தனம்.. கையில் புரளும் தொகுதிகள், ஜாக்பாட் விசிக? தேமுதிக? கமல், கம்யூ.,?
TN Government Employees : இன்று அரசு அதிகாரிகள் கட்டாயம் அலுவலகத்திற்கு வரனும்.! தமிழக அரசு முக்கிய உத்தரவு- காரணம் என்ன.?
இன்று அரசு அதிகாரிகள் கட்டாயம் அலுவலகத்திற்கு வரனும்.! தமிழக அரசு முக்கிய உத்தரவு- காரணம் என்ன.?
SC on Menstrual Leave: ”இப்படிலாம் பண்ண பொண்ணுங்கள யாரும் வேலைக்கு எடுக்கமாட்டாங்க” - உச்சநீதிமன்றம் அட்வைஸ்
SC on Menstrual Leave: ”இப்படிலாம் பண்ண பொண்ணுங்கள யாரும் வேலைக்கு எடுக்கமாட்டாங்க” - உச்சநீதிமன்றம் அட்வைஸ்
CM Stalin: ”கண்ண திறக்கனும் சாமி” சாதனை பட்டியலில் இதை மறந்துட்டீங்க - சிஎம் போஸ்டில் நெட்டிசன்கள் ஆவேசம்
CM Stalin: ”கண்ண திறக்கனும் சாமி” சாதனை பட்டியலில் இதை மறந்துட்டீங்க - சிஎம் போஸ்டில் நெட்டிசன்கள் ஆவேசம்
கேங்ஸ்டர் மாப்பிள்ளையை தூக்கிய போலீசார்.. ”கல்யாணம் முடிக்கணும்” போலீஸ் ஸ்டேஷனில் கதறிய மணமகள்
கேங்ஸ்டர் மாப்பிள்ளையை தூக்கிய போலீசார்.. ”கல்யாணம் முடிக்கணும்” போலீஸ் ஸ்டேஷனில் கதறிய மணமகள்
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
Embed widget