மேலும் அறிய

இனி சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளில் மூன்றாம் மொழி கட்டாயம்: வெளியான புதிய அறிவிப்பு

3ஆம் மொழி மதிப்பீட்டில் ஒரு மாணவர் தோல்வி அடைந்தால், இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகும் முன், சம்பந்தப்பட்ட பள்ளி மீண்டும் மறு மதிப்பீடு நடத்த வேண்டியது கட்டாயம்.

சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளில் மூன்றாம் மொழி கட்டாயம் என்று அகமதிப்பீடு குறித்து புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சிபிஎஸ்இ வாரியம் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் மூன்றாம் மொழியை கட்டாயமாக்கியுள்ளது. தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்தும் பன்மொழி கற்றலை மாணவர்களிடையே ஊக்குவிக்கும் நோக்கில், 2027- 2028 கல்வியாண்டு முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வரவுள்ளது.

தேர்வு முறை மற்றும் மதிப்பெண்கள்

இந்த மூன்றாம் மொழிப் பாடத்திற்கு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு நடத்தப்படாது. மாறாக, மாணவர் படிக்கும் பள்ளிகளிலேயே அகமதிப்பீடு முறையில் 100 மதிப்பெண்களுக்கு இப்பாடம் மதிப்பீடு செய்யப்படும். பள்ளிகள் நடத்தும் இந்தத் தேர்வில் மாணவர்கள் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.

மறு மதிப்பீடு

ஜூலை 10ஆம் தேதி சிபிஎஸ்இ வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, 10ஆம் வகுப்பின்போது 3ஆம் மொழி மதிப்பீட்டில் ஒரு மாணவர் தோல்வி அடைந்தால், இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகும் முன், சம்பந்தப்பட்ட பள்ளி மீண்டும் மறு மதிப்பீடு நடத்த வேண்டியது கட்டாயம்.

9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த விதி அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வர உள்ளது. 9ஆம் வகுப்பு 3ஆம் மொழி மதிப்பீட்டில் தோல்வி அடைந்தாலும் அவர்கள் 10ஆம் வகுப்புத் தேர்ச்சி பெறுவர். ஆனாலும் 10ஆம் வகுப்பு படிக்கும்போது மீதமுள்ள மதிப்பீட்டில் தேர்ச்சி பெற வேண்டும்.

மொழித் தேர்வு விதிமுறைகள்

மாணவர்கள் இந்திய அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள மொழிகளில் ஒன்றை தங்களின் மூன்றாம் மொழியாகத் தேர்வு செய்து கொள்ளலாம். எனினும், அவர்கள் தேர்வு செய்யும் இந்த மூன்றாம் மொழியானது, அவர்கள் ஏற்கனவே படிக்கும் முதல் மற்றும் இரண்டாம் மொழிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்க வேண்டும்.

மதிப்பெண் சான்றிதழில் இடம்பெறும் விதம்

இந்த மூன்றாம் மொழி அகமதிப்பீட்டில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள், அவர்களின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதத்தையோ அல்லது இறுதி மொத்த மதிப்பெண்களையோ கணக்கிட சேர்க்கப்படாது.

ஆனால், இப்பாடத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்பதோடு, இதில் அவர்கள் பெறும் தரநிலைகள் மாணவர்களின் இறுதி மதிப்பெண் சான்றிதழில் பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு மாணவர்களுக்கு விலக்கு

இந்தக் கட்டாய மூன்றாம் மொழி நடைமுறையில் இருந்து, சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளுக்கு  முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

இனி சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளில் மூன்றாம் மொழி கட்டாயம்: வெளியான புதிய அறிவிப்பு
இனி சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளில் மூன்றாம் மொழி கட்டாயம்: வெளியான புதிய அறிவிப்பு
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணியிட மாறுதல் கலந்தாய்வு.! விண்ணப்பிக்க அழைப்பு- கடைசி தேதி எப்போது.?
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணியிட மாறுதல் கலந்தாய்வு.! விண்ணப்பிக்க அழைப்பு- கடைசி தேதி எப்போது.?
YUVA AI: மத்திய அரசின் இலவச ஏஐ படிப்பு- சான்றிதழுடன் வேலைவாய்ப்புக்கு வழி! விண்ணப்பிப்பது எப்படி?
YUVA AI: மத்திய அரசின் இலவச ஏஐ படிப்பு- சான்றிதழுடன் வேலைவாய்ப்புக்கு வழி! விண்ணப்பிப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்
Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs ADMK:
TVK vs ADMK: "திமுக-வுடன் கூட்டுக்களவாணி ஆட்சி.. கொடநாடைப் பேசினால் நடுங்குபவர்.." இபிஎஸ்-ஐ விளாசிய தவெக!
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
India Condemn Hormuz Attack: ஹார்முஸில் டேங்க்கரை தாக்கிய ஈரான்; பலியான இந்திய மாலுமி; தாக்குதலை நிறுத்தக்கூறி இந்தியா கண்டனம்
ஹார்முஸில் டேங்க்கரை தாக்கிய ஈரான்; பலியான இந்திய மாலுமி; தாக்குதலை நிறுத்தக்கூறி இந்தியா கண்டனம்
Senthil Balaji: விசாரணைக்கு வந்தா என்னை கைது செய்யக்கூடாது.! போலீசாருக்கு செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்
விசாரணைக்கு வந்தா என்னை கைது செய்யக்கூடாது.! போலீசாருக்கு செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 vs புல்லட் 350: மைலேஜ், விலை,டிசைன்- எது பெஸ்ட்? முழு ஒப்பீடு
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 vs புல்லட் 350: மைலேஜ், விலை,டிசைன்- எது பெஸ்ட்? முழு ஒப்பீடு
Innova Hycross Facelift: அடி சக்க.! இன்னோவா ஹைக்ராஸை ஃப்ளெக்ஸ்-ஃப்யூயல் அவதாரத்தில் இறக்கும் டோயோட்டா; சிறப்பம்சம் என்ன.?
அடி சக்க.! இன்னோவா ஹைக்ராஸை ஃப்ளெக்ஸ்-ஃப்யூயல் அவதாரத்தில் இறக்கும் டோயோட்டா; சிறப்பம்சம் என்ன.?
EPS:
EPS: "விஜய்தான் களவாணி.." தவெக ஆட்சியை தாறுமாறாக விமர்சித்த இபிஎஸ்!
மக்கள் சொத்தை காப்பத்த முடியல.. உங்களுக்கு எதுக்கு அமைச்சர் பதவி.? திமுகவிடம் சிக்கிய அமைச்சர் ரமேஷ்
மக்கள் சொத்தை காப்பத்த முடியல.. உங்களுக்கு எதுக்கு அமைச்சர் பதவி.? திமுகவிடம் சிக்கிய அமைச்சர் ரமேஷ்
Embed widget