Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள் "நிலத்தை புடுங்க பார்க்குறியா"
நிலம் கையகப்படுத்துவதற்காக சர்வே எடுக்க வந்த அதிகாரிகள் மீது விவசாயிகள் துடைப்பத்தை வைத்து தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடும் கோபத்தில் இருந்த மக்கள் அதிகாரிகளின் வாகனத்தையும் சேதப்படுத்தினர்.
கர்நாடக அரசு AI சிட்டி என்ற நவீன செயற்கை நுண்ணறிவு நகரத்தை அமைக்கும் முயற்சியில் பிடாடி டவுன்ஷிப் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதாக அரசு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் மண்டலஹள்ளியில் நிலத்தை அளவீடு செய்ய அதிகாரிகள் வந்த போது மக்கள் ஆத்திரமடைந்தனர். நிலத்தை அளவிட உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது? மாவட்ட ஆட்சியரின் எழுத்துப்பூர்வமான உத்தரவுக் கடிதம் எங்கே? அதை எங்களிடம் காட்டுங்கள் மக்கள் அதிகாரிகளிடம் கேள்விகளை அடுக்கினர். மேலும் எங்கள் வாழ்வாதாரமாக இருக்கும் இந்த விளைநிலங்களை அழித்து பிடாடி டவுன்ஷிப் திட்டத்தைக் கொண்டு வர எக்காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டோம் என விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அதிகாரி ஒருவர் அலட்சியமாக பதிலளித்ததால் மோதலாக மாறியதாக கூறப்படுகிறது. நிலத்தை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை விவசாயிகள் குறிப்பாக பெண்கள் துடைப்பத்தை வைத்து அடித்து துரத்தினர். இந்த தாக்குதலில் அரசு வாகனங்களும் சேதமடைந்துள்ளன. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிகாரிகளையும் பத்திரமாக அந்த இடத்தில் இருந்து அனுப்பிவைத்தனர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















