மேலும் அறிய

கணவர், மகன் வீட்டில் இல்லாத சமயம்.. பெண் அரசு அதிகாரக்கு நேர்ந்த கொடூரம்.. கர்நாடகாவில் ஷாக்

பெங்களூருவில் பெண் அதிகாரி கொல்லப்பட்ட சம்பவம் மாநிலகத்தை உலுக்கியுள்ளது.

கர்நாடக அரசில் பணிபுரியும் பெண் அதிகாரி ஒருவர் பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம், நேற்று இரவு நடந்துள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்ணான பிரதீமாவுக்கு 45 வயதாகிறது.
கர்நாடகாவின் சுரங்கம் மற்றும் புவியியல் துறையில் துணை இயக்குநராகப் பணியாற்றி வந்துள்ளார். 

சுப்ரமணியபோராவில் உள்ள அவரது வீட்டில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் அவர் இறந்து கிடந்ததாக காவல்துறை தரப்பு தகவல் தெரிவிக்கிறது. வேலை முடிந்தவுடன் பிரதீமாவை அவரது வீட்டில் விட்டுவிட்டு ஓட்டுநர் சென்றுள்ளார். இரவு 8.30 மணியளவில் கணவனும் மகனும் இல்லாத நேரத்தில் அவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

கர்நாடகாவை உலுக்கிய பெண் அதிகாரி கொலை:

இன்று அதிகாலை பிரதீமாவின் சகோதரர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, ​​அவர் இறந்து கிடந்துள்ளார். நேற்று இரவே பிரதீமாவை அவரது சகோதரர் தொலைப்பேசியில் தொடர்புகொள்ள முயற்சித்துள்ளார். ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. அவர், உடனடியாக காவல்துறையை தொடர்பு கொண்டார்.

பெங்களூரு நகர தெற்கு மண்டல டி.சி.பி. ராகுல் குமார், இதுகுறித்து பேசுகையில், "வழக்கம்போல் சனிக்கிழமை இரவு 8 மணியளவில் பிரதீமா வீடு திரும்பினார். நேற்று இரவும், இன்று காலையும் அவரது மூத்த சகோதரர் போன் செய்தும் அவர் பதிலளிக்காததால், அவரது வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். ​​​​அவர் கொலை செய்யப்பட்டதை அறிந்து போலிசாருக்குத் தகவல் தெரிவித்தார்.

தடயவியல் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று, ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விசாரணைக்காக மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொண்டவுடன், மேலும் தகவலை சொல்ல முடியும்" என்றார்.

அதிரடி காட்டி முதலமைச்சர் சித்தராமையா:

அரசின் உயர் அதிகாரி கொல்லப்பட்ட சம்பவம் கர்நாடக மாநிலத்தை உலுக்கியுள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

"இப்போதுதான், இது பற்றி தகவல் எனக்கு கிடைத்தது. கொலை தொடர்பாக கடுமையான விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். அவரது கணவர் சொந்த கிராமத்தில் வசித்து வருகிறார். ​​அவர் தனியாக (பெங்களூருவில்) தங்கியிருந்ததாக தெரிகிறது. கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. அதை விசாரிப்போம்.

கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை, அனைத்து கோணங்களிலும் விசாரணை செய்து வருகின்றனர். தெரிந்த நபரால் கொலை செய்யப்பட்டிருக்கலாமா என்ற கோணத்தில் கூட விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க: Delhi Dog Attack: வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்.. பிட்புல் நாயை விட்டு கடிக்க வைத்த நபர் - டெல்லியில் கொடூரம்

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
TVS Star City Plus: பெத்த மைலேஜ்! 800 கி.மீ ரேஞ்ச்! டிஸ்க் பிரேக் வசதியுடன் TVS Star City Plus-ஐ மிஸ் பண்ணாதீங்க! முழு விவரம்
TVS Star City Plus: பெத்த மைலேஜ்! 800 கி.மீ ரேஞ்ச்! டிஸ்க் பிரேக் வசதியுடன் TVS Star City Plus-ஐ மிஸ் பண்ணாதீங்க! முழு விவரம்
Embed widget