மேலும் அறிய

கணவர், மகன் வீட்டில் இல்லாத சமயம்.. பெண் அரசு அதிகாரக்கு நேர்ந்த கொடூரம்.. கர்நாடகாவில் ஷாக்

பெங்களூருவில் பெண் அதிகாரி கொல்லப்பட்ட சம்பவம் மாநிலகத்தை உலுக்கியுள்ளது.

கர்நாடக அரசில் பணிபுரியும் பெண் அதிகாரி ஒருவர் பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம், நேற்று இரவு நடந்துள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்ணான பிரதீமாவுக்கு 45 வயதாகிறது.
கர்நாடகாவின் சுரங்கம் மற்றும் புவியியல் துறையில் துணை இயக்குநராகப் பணியாற்றி வந்துள்ளார். 

சுப்ரமணியபோராவில் உள்ள அவரது வீட்டில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் அவர் இறந்து கிடந்ததாக காவல்துறை தரப்பு தகவல் தெரிவிக்கிறது. வேலை முடிந்தவுடன் பிரதீமாவை அவரது வீட்டில் விட்டுவிட்டு ஓட்டுநர் சென்றுள்ளார். இரவு 8.30 மணியளவில் கணவனும் மகனும் இல்லாத நேரத்தில் அவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

கர்நாடகாவை உலுக்கிய பெண் அதிகாரி கொலை:

இன்று அதிகாலை பிரதீமாவின் சகோதரர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, ​​அவர் இறந்து கிடந்துள்ளார். நேற்று இரவே பிரதீமாவை அவரது சகோதரர் தொலைப்பேசியில் தொடர்புகொள்ள முயற்சித்துள்ளார். ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. அவர், உடனடியாக காவல்துறையை தொடர்பு கொண்டார்.

பெங்களூரு நகர தெற்கு மண்டல டி.சி.பி. ராகுல் குமார், இதுகுறித்து பேசுகையில், "வழக்கம்போல் சனிக்கிழமை இரவு 8 மணியளவில் பிரதீமா வீடு திரும்பினார். நேற்று இரவும், இன்று காலையும் அவரது மூத்த சகோதரர் போன் செய்தும் அவர் பதிலளிக்காததால், அவரது வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். ​​​​அவர் கொலை செய்யப்பட்டதை அறிந்து போலிசாருக்குத் தகவல் தெரிவித்தார்.

தடயவியல் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று, ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விசாரணைக்காக மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொண்டவுடன், மேலும் தகவலை சொல்ல முடியும்" என்றார்.

அதிரடி காட்டி முதலமைச்சர் சித்தராமையா:

அரசின் உயர் அதிகாரி கொல்லப்பட்ட சம்பவம் கர்நாடக மாநிலத்தை உலுக்கியுள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

"இப்போதுதான், இது பற்றி தகவல் எனக்கு கிடைத்தது. கொலை தொடர்பாக கடுமையான விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். அவரது கணவர் சொந்த கிராமத்தில் வசித்து வருகிறார். ​​அவர் தனியாக (பெங்களூருவில்) தங்கியிருந்ததாக தெரிகிறது. கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. அதை விசாரிப்போம்.

கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை, அனைத்து கோணங்களிலும் விசாரணை செய்து வருகின்றனர். தெரிந்த நபரால் கொலை செய்யப்பட்டிருக்கலாமா என்ற கோணத்தில் கூட விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க: Delhi Dog Attack: வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்.. பிட்புல் நாயை விட்டு கடிக்க வைத்த நபர் - டெல்லியில் கொடூரம்

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: முதல்வர் விஜய் அவசர ஆலோசனை.. பிரதமர் மோடியின் சாதனை.. 11 மணி வரை நடந்த நிகழ்வுகள்!
Top 10 News Headlines: முதல்வர் விஜய் அவசர ஆலோசனை.. பிரதமர் மோடியின் சாதனை.. 11 மணி வரை நடந்த நிகழ்வுகள்!
Fire Accident: மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து..! 4 பேர் உடல் கருகி பலி - ICU வார்டில் நடந்தது என்ன?
மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து..! 4 பேர் உடல் கருகி பலி - ICU வார்டில் நடந்தது என்ன?
உடலில் 51 காயங்கள்,. சிகரெட்டால் சூடு வைத்தும் சித்ரவதை! ஒன்றரை வயது குழந்தை உயிரப்பு!..
உடலில் 51 காயங்கள்,. சிகரெட்டால் சூடு வைத்தும் சித்ரவதை! ஒன்றரை வயது குழந்தை உயிரப்பு!..
Central Minister on Aviation: 2 ஆண்டுகளில் மேலும் பல விமான நிறுவனங்கள் வர வாய்ப்பு; ஏபிபி மாநாட்டில் மத்திய அமைச்சர் தகவல்
2 ஆண்டுகளில் மேலும் பல விமான நிறுவனங்கள் வர வாய்ப்பு; ஏபிபி மாநாட்டில் மத்திய அமைச்சர் தகவல்

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt MoU: அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Peddi Twitter Review: ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
Alisa Abdullah: பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
TVK Vijay: காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
Tamilnadu Round Up: நாளை அமைச்சரவை கூட்டம், அரசுக்கு எதிராக வழக்கு,சிறுமிக்கு பாலியல் தொல்லை - தமிழ்நாட்டில் இதுவரை
நாளை அமைச்சரவை கூட்டம், அரசுக்கு எதிராக வழக்கு,சிறுமிக்கு பாலியல் தொல்லை - தமிழ்நாட்டில் இதுவரை
TNEB-யில் திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்குகள் - டெண்டர், கொள்முதல், விசாரணை ஆவணங்கள் எங்கே? சிக்குவது யார்?
TNEB-யில் திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்குகள் - டெண்டர், கொள்முதல், விசாரணை ஆவணங்கள் எங்கே? சிக்குவது யார்?
TN Weather Update: இன்று பள்ளிகள் திறப்பு.. எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? வெயில் சுட்டெரிக்கும் - வானிலை அறிக்கை
இன்று பள்ளிகள் திறப்பு.. எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? வெயில் சுட்டெரிக்கும் - வானிலை அறிக்கை
Embed widget