மேலும் அறிய

கணவர், மகன் வீட்டில் இல்லாத சமயம்.. பெண் அரசு அதிகாரக்கு நேர்ந்த கொடூரம்.. கர்நாடகாவில் ஷாக்

பெங்களூருவில் பெண் அதிகாரி கொல்லப்பட்ட சம்பவம் மாநிலகத்தை உலுக்கியுள்ளது.

கர்நாடக அரசில் பணிபுரியும் பெண் அதிகாரி ஒருவர் பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம், நேற்று இரவு நடந்துள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்ணான பிரதீமாவுக்கு 45 வயதாகிறது.
கர்நாடகாவின் சுரங்கம் மற்றும் புவியியல் துறையில் துணை இயக்குநராகப் பணியாற்றி வந்துள்ளார். 

சுப்ரமணியபோராவில் உள்ள அவரது வீட்டில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் அவர் இறந்து கிடந்ததாக காவல்துறை தரப்பு தகவல் தெரிவிக்கிறது. வேலை முடிந்தவுடன் பிரதீமாவை அவரது வீட்டில் விட்டுவிட்டு ஓட்டுநர் சென்றுள்ளார். இரவு 8.30 மணியளவில் கணவனும் மகனும் இல்லாத நேரத்தில் அவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

கர்நாடகாவை உலுக்கிய பெண் அதிகாரி கொலை:

இன்று அதிகாலை பிரதீமாவின் சகோதரர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, ​​அவர் இறந்து கிடந்துள்ளார். நேற்று இரவே பிரதீமாவை அவரது சகோதரர் தொலைப்பேசியில் தொடர்புகொள்ள முயற்சித்துள்ளார். ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. அவர், உடனடியாக காவல்துறையை தொடர்பு கொண்டார்.

பெங்களூரு நகர தெற்கு மண்டல டி.சி.பி. ராகுல் குமார், இதுகுறித்து பேசுகையில், "வழக்கம்போல் சனிக்கிழமை இரவு 8 மணியளவில் பிரதீமா வீடு திரும்பினார். நேற்று இரவும், இன்று காலையும் அவரது மூத்த சகோதரர் போன் செய்தும் அவர் பதிலளிக்காததால், அவரது வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். ​​​​அவர் கொலை செய்யப்பட்டதை அறிந்து போலிசாருக்குத் தகவல் தெரிவித்தார்.

தடயவியல் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று, ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விசாரணைக்காக மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொண்டவுடன், மேலும் தகவலை சொல்ல முடியும்" என்றார்.

அதிரடி காட்டி முதலமைச்சர் சித்தராமையா:

அரசின் உயர் அதிகாரி கொல்லப்பட்ட சம்பவம் கர்நாடக மாநிலத்தை உலுக்கியுள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

"இப்போதுதான், இது பற்றி தகவல் எனக்கு கிடைத்தது. கொலை தொடர்பாக கடுமையான விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். அவரது கணவர் சொந்த கிராமத்தில் வசித்து வருகிறார். ​​அவர் தனியாக (பெங்களூருவில்) தங்கியிருந்ததாக தெரிகிறது. கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. அதை விசாரிப்போம்.

கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை, அனைத்து கோணங்களிலும் விசாரணை செய்து வருகின்றனர். தெரிந்த நபரால் கொலை செய்யப்பட்டிருக்கலாமா என்ற கோணத்தில் கூட விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க: Delhi Dog Attack: வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்.. பிட்புல் நாயை விட்டு கடிக்க வைத்த நபர் - டெல்லியில் கொடூரம்

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
Sivakarthikeyan: ”ஜனநாயகனை கொண்டாடுங்க, அண்ணன் -தம்பி பொங்கல்” பராசக்தி ஆடியோ லாஞ்ச் - சிவகார்த்திகேயன் பேச்சு
Sivakarthikeyan: ”ஜனநாயகனை கொண்டாடுங்க, அண்ணன் -தம்பி பொங்கல்” பராசக்தி ஆடியோ லாஞ்ச் - சிவகார்த்திகேயன் பேச்சு
Tata Punch: விட்டதை பிடிக்கணும்.. அப்க்ரேடாகி வரும் டாடா பஞ்ச் - டிசைன் டூ அம்சங்கள், புதுசா என்னெல்லாம் இருக்கு?
Tata Punch: விட்டதை பிடிக்கணும்.. அப்க்ரேடாகி வரும் டாடா பஞ்ச் - டிசைன் டூ அம்சங்கள், புதுசா என்னெல்லாம் இருக்கு?
Jana Nayagan: ஜனநாயகன் பார்க்கும் முன்.. பகவந்த் கேசரி படத்தை மிஸ் பண்ணாம பாருங்க.. எந்த ஓடிடி தெரியுமா?
Jana Nayagan: ஜனநாயகன் பார்க்கும் முன்.. பகவந்த் கேசரி படத்தை மிஸ் பண்ணாம பாருங்க.. எந்த ஓடிடி தெரியுமா?
ABP Premium

வீடியோ

MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
Sivakarthikeyan: ”ஜனநாயகனை கொண்டாடுங்க, அண்ணன் -தம்பி பொங்கல்” பராசக்தி ஆடியோ லாஞ்ச் - சிவகார்த்திகேயன் பேச்சு
Sivakarthikeyan: ”ஜனநாயகனை கொண்டாடுங்க, அண்ணன் -தம்பி பொங்கல்” பராசக்தி ஆடியோ லாஞ்ச் - சிவகார்த்திகேயன் பேச்சு
Tata Punch: விட்டதை பிடிக்கணும்.. அப்க்ரேடாகி வரும் டாடா பஞ்ச் - டிசைன் டூ அம்சங்கள், புதுசா என்னெல்லாம் இருக்கு?
Tata Punch: விட்டதை பிடிக்கணும்.. அப்க்ரேடாகி வரும் டாடா பஞ்ச் - டிசைன் டூ அம்சங்கள், புதுசா என்னெல்லாம் இருக்கு?
Jana Nayagan: ஜனநாயகன் பார்க்கும் முன்.. பகவந்த் கேசரி படத்தை மிஸ் பண்ணாம பாருங்க.. எந்த ஓடிடி தெரியுமா?
Jana Nayagan: ஜனநாயகன் பார்க்கும் முன்.. பகவந்த் கேசரி படத்தை மிஸ் பண்ணாம பாருங்க.. எந்த ஓடிடி தெரியுமா?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
Embed widget