மேலும் அறிய

"தமிழ்நாட்டுக்கு 8,000 கன அடி காவிரிநீர் திறக்கப்படும்" கர்நாடக அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு

கர்நாடகாவில் இன்று நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, நாளை முதல் இந்த மாத இறுதி வரை 8,000 கன அடி காவிரிநீர் திறக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டுக்கு நாளை முதல் 8,000 கன அடி காவிரிநீர் திறக்க கர்நாடக அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்துக்கட்சி கூட்டத்தில் முக்கிய முடிவு: வரும் ஜூலை 31ஆம் தேதி வரை, பிலிகுண்டுலுவில் தமிழ்நாட்டுக்காக தினமும் 11,500 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தது. ஆனால், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நாளை முதல் 8,000 கன அடி காவிரிநீர் மட்டுமே திறக்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை தொடர்ந்து அவசர கூட்டத்திற்கு சித்தராமையா அழைப்பு விடுத்திருந்தார்.

அவசர கூட்டத்தில் அனைத்துக்க்கட்சி கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இன்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்கள், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கர்நாடக முதலமைச்சர் விளக்கம்: இந்த கூட்டத்தில்தான், தமிழ்நாட்டுக்கு காவிரிநீர் திறந்துவிடும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பரிந்துரைக்கப்பட்ட அளவை விட குறைவான அளவில் தண்ணீரை திறந்து விட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அனைத்துக்கட்சி கூட்டத்தை தொடர்ந்து பேசிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, "இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், பாஜக தலைவர்கள் மற்றும் மைசூரு படுகையில் உள்ள தலைவர்கள் கலந்து கொண்டனர்.

தண்ணீர் விடக்கூடாது என்றும், காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர். தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு 8,000 கனஅடி தண்ணீர் திறந்து விடலாம் என்றும், மழை பெய்தால் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வோம் என்றும் சட்டக்குழு குழு உறுப்பினர் மோகன் கட்டார்கி கருத்து தெரிவித்தார். அதையே முடிவாக எடுத்துள்ளோம்" என்றார்.

பின்னர் பேசிய கர்நாடக துணை முதலமைச்சர் டி. கே. சிவகுமார், "மிக ஆரம்ப நிலையில், ஒழுங்குமுறை ஆணையம் கூட்டம் நடத்தி ஒரு டிஎம்சி தண்ணீர் தர வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். எங்களுக்கு 30% தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. கண்காணிப்பு குழுவிடம் முறையிடுவோம்" என்றார்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
Stalin on EPS Delhi Trip: இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Edappadi Palaniswami : ராஜ்யசபா சீட் யாருக்கு? OPS, TTV-க்கு  செக்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்Savukku Sankar: சவுக்கு வீட்டில் சாக்கடை.. அடித்து உடைத்த கும்பல்! வெளியான பகீர் காட்சி | CCTVPuducherry Assembly | திமுக MLA-க்கள் ஆவேசம் குண்டுக்கட்டாக வெளியேற்றம் சட்டப்பேரவையில் பரபரப்புMadurai Police Murder | மதுரையில் துப்பாக்கிச் சூடு குற்றவாளியை பிடித்த போலீஸ் காவலர் எரித்துக் கொன்ற விவகாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
Stalin on EPS Delhi Trip: இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Vijay: குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
Embed widget