மேலும் அறிய

"தமிழ்நாட்டுக்கு 8,000 கன அடி காவிரிநீர் திறக்கப்படும்" கர்நாடக அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு

கர்நாடகாவில் இன்று நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, நாளை முதல் இந்த மாத இறுதி வரை 8,000 கன அடி காவிரிநீர் திறக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டுக்கு நாளை முதல் 8,000 கன அடி காவிரிநீர் திறக்க கர்நாடக அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்துக்கட்சி கூட்டத்தில் முக்கிய முடிவு: வரும் ஜூலை 31ஆம் தேதி வரை, பிலிகுண்டுலுவில் தமிழ்நாட்டுக்காக தினமும் 11,500 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தது. ஆனால், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நாளை முதல் 8,000 கன அடி காவிரிநீர் மட்டுமே திறக்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை தொடர்ந்து அவசர கூட்டத்திற்கு சித்தராமையா அழைப்பு விடுத்திருந்தார்.

அவசர கூட்டத்தில் அனைத்துக்க்கட்சி கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இன்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்கள், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கர்நாடக முதலமைச்சர் விளக்கம்: இந்த கூட்டத்தில்தான், தமிழ்நாட்டுக்கு காவிரிநீர் திறந்துவிடும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பரிந்துரைக்கப்பட்ட அளவை விட குறைவான அளவில் தண்ணீரை திறந்து விட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அனைத்துக்கட்சி கூட்டத்தை தொடர்ந்து பேசிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, "இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், பாஜக தலைவர்கள் மற்றும் மைசூரு படுகையில் உள்ள தலைவர்கள் கலந்து கொண்டனர்.

தண்ணீர் விடக்கூடாது என்றும், காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர். தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு 8,000 கனஅடி தண்ணீர் திறந்து விடலாம் என்றும், மழை பெய்தால் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வோம் என்றும் சட்டக்குழு குழு உறுப்பினர் மோகன் கட்டார்கி கருத்து தெரிவித்தார். அதையே முடிவாக எடுத்துள்ளோம்" என்றார்.

பின்னர் பேசிய கர்நாடக துணை முதலமைச்சர் டி. கே. சிவகுமார், "மிக ஆரம்ப நிலையில், ஒழுங்குமுறை ஆணையம் கூட்டம் நடத்தி ஒரு டிஎம்சி தண்ணீர் தர வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். எங்களுக்கு 30% தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. கண்காணிப்பு குழுவிடம் முறையிடுவோம்" என்றார்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

முத்தமிழ் முருகன் மாநாடு; ஒரு லட்சம் பேருக்கு உணவு... பழனியில் ஏற்பாடுகள் தீவிரம்
முத்தமிழ் முருகன் மாநாடு; ஒரு லட்சம் பேருக்கு உணவு... பழனியில் ஏற்பாடுகள் தீவிரம்
இந்த பயத்தால்தான் திமுக முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்துகிறது - எல்.முருகன்
இந்த பயத்தால்தான் திமுக முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்துகிறது - எல்.முருகன்
LIVE | Kerala Lottery Result Today (20.08.2024): கேரளா லாட்டரி : ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-429.. முதல் பரிசு ரூ. 75 லட்சத்தை தட்டித்தூக்கிய நெம்பர் இதோ!
கேரளா லாட்டரி : ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-429.. முதல் பரிசு ரூ. 75 லட்சத்தை தட்டித்தூக்கிய நெம்பர் இதோ!
Yuvraj Singh: உச்சகட்ட எதிர்பார்ப்பு! திரைப்படமாகிறது  உலகக்கோப்பை நாயகன் யுவராஜ்சிங் வாழ்க்கை! ஹீரோ யாரு?
உச்சகட்ட எதிர்பார்ப்பு! திரைப்படமாகிறது உலகக்கோப்பை நாயகன் யுவராஜ்சிங் வாழ்க்கை! ஹீரோ யாரு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Murder : கொலையாளியுடன் தொடர்பு? ரேடாரில் நெல்சன் மனைவி! சுற்றி வளைக்கும் போலீஸ்Rahul with driver | ராகுலின் TAXI RIDE ட்ரைவர் குடும்பத்துடன் LUNCH IAS Transfer | 37 IAS அதிகாரிகள் மாற்றம்..ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்! பின்னணி என்ன?Siddaramaiah MUDA Scam | சித்தராமையா ராஜினாமா? டென்ஷனில் ராகுல்! காங்கிரஸின் ப்ளான் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முத்தமிழ் முருகன் மாநாடு; ஒரு லட்சம் பேருக்கு உணவு... பழனியில் ஏற்பாடுகள் தீவிரம்
முத்தமிழ் முருகன் மாநாடு; ஒரு லட்சம் பேருக்கு உணவு... பழனியில் ஏற்பாடுகள் தீவிரம்
இந்த பயத்தால்தான் திமுக முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்துகிறது - எல்.முருகன்
இந்த பயத்தால்தான் திமுக முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்துகிறது - எல்.முருகன்
LIVE | Kerala Lottery Result Today (20.08.2024): கேரளா லாட்டரி : ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-429.. முதல் பரிசு ரூ. 75 லட்சத்தை தட்டித்தூக்கிய நெம்பர் இதோ!
கேரளா லாட்டரி : ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-429.. முதல் பரிசு ரூ. 75 லட்சத்தை தட்டித்தூக்கிய நெம்பர் இதோ!
Yuvraj Singh: உச்சகட்ட எதிர்பார்ப்பு! திரைப்படமாகிறது  உலகக்கோப்பை நாயகன் யுவராஜ்சிங் வாழ்க்கை! ஹீரோ யாரு?
உச்சகட்ட எதிர்பார்ப்பு! திரைப்படமாகிறது உலகக்கோப்பை நாயகன் யுவராஜ்சிங் வாழ்க்கை! ஹீரோ யாரு?
Sunny Leone: சகோதரருக்கு ராக்கி! சன்னி லியோன் ஹேப்பி! ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டம்! வைரல் போட்டோ!
Sunny Leone: சகோதரருக்கு ராக்கி! சன்னி லியோன் ஹேப்பி! ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டம்! வைரல் போட்டோ!
அனைவருக்கும் சான்றிதழ்; பள்ளி மாணவர்களுக்கு நடன, இசை, ஓவிய போட்டிகள்- பங்கேற்பது எப்படி?
அனைவருக்கும் சான்றிதழ்; பள்ளி மாணவர்களுக்கு நடன, இசை, ஓவிய போட்டிகள்- பங்கேற்பது எப்படி?
Lateral Entry: லேட்ரல் என்ட்ரி மூலம் நேரடியாக அதிகாரிகளை நியமிக்கும் நடைமுறை ரத்து- மத்திய அரசு அறிவிப்பு
Lateral Entry: லேட்ரல் என்ட்ரி மூலம் நேரடியாக அதிகாரிகளை நியமிக்கும் நடைமுறை ரத்து- மத்திய அரசு அறிவிப்பு
முதலமைச்சரின் புதிய முதன்மை தனிச்செயலாளராக உமாநாத் நியமனம் - தலைமைச் செயலாளர் அதிரடி
முதலமைச்சரின் புதிய முதன்மை தனிச்செயலாளராக உமாநாத் நியமனம் - தலைமைச் செயலாளர் அதிரடி
Embed widget