மேலும் அறிய

"தமிழ்நாட்டுக்கு 8,000 கன அடி காவிரிநீர் திறக்கப்படும்" கர்நாடக அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு

கர்நாடகாவில் இன்று நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, நாளை முதல் இந்த மாத இறுதி வரை 8,000 கன அடி காவிரிநீர் திறக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டுக்கு நாளை முதல் 8,000 கன அடி காவிரிநீர் திறக்க கர்நாடக அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்துக்கட்சி கூட்டத்தில் முக்கிய முடிவு: வரும் ஜூலை 31ஆம் தேதி வரை, பிலிகுண்டுலுவில் தமிழ்நாட்டுக்காக தினமும் 11,500 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தது. ஆனால், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நாளை முதல் 8,000 கன அடி காவிரிநீர் மட்டுமே திறக்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை தொடர்ந்து அவசர கூட்டத்திற்கு சித்தராமையா அழைப்பு விடுத்திருந்தார்.

அவசர கூட்டத்தில் அனைத்துக்க்கட்சி கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இன்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்கள், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கர்நாடக முதலமைச்சர் விளக்கம்: இந்த கூட்டத்தில்தான், தமிழ்நாட்டுக்கு காவிரிநீர் திறந்துவிடும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பரிந்துரைக்கப்பட்ட அளவை விட குறைவான அளவில் தண்ணீரை திறந்து விட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அனைத்துக்கட்சி கூட்டத்தை தொடர்ந்து பேசிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, "இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், பாஜக தலைவர்கள் மற்றும் மைசூரு படுகையில் உள்ள தலைவர்கள் கலந்து கொண்டனர்.

தண்ணீர் விடக்கூடாது என்றும், காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர். தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு 8,000 கனஅடி தண்ணீர் திறந்து விடலாம் என்றும், மழை பெய்தால் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வோம் என்றும் சட்டக்குழு குழு உறுப்பினர் மோகன் கட்டார்கி கருத்து தெரிவித்தார். அதையே முடிவாக எடுத்துள்ளோம்" என்றார்.

பின்னர் பேசிய கர்நாடக துணை முதலமைச்சர் டி. கே. சிவகுமார், "மிக ஆரம்ப நிலையில், ஒழுங்குமுறை ஆணையம் கூட்டம் நடத்தி ஒரு டிஎம்சி தண்ணீர் தர வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். எங்களுக்கு 30% தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. கண்காணிப்பு குழுவிடம் முறையிடுவோம்" என்றார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Red Alert: டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
Cyclone Ditwah: வங்கக் கடலில் உருவானது ‘டிட்வா‘ புயல்; தமிழகத்தை நோக்கி நகரும் என வானிலை மையம் அறிவிப்பு
வங்கக் கடலில் உருவானது ‘டிட்வா‘ புயல்; தமிழகத்தை நோக்கி நகரும் என வானிலை மையம் அறிவிப்பு
TN RED ALERT: ரெட் அலர்ட்... உடனே இந்த 12 மாவட்டங்களுக்கு செல்லுங்க- ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
ரெட் அலர்ட்... உடனே இந்த 12 மாவட்டங்களுக்கு செல்லுங்க- ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
அடி தூள்... ECR மற்றும் OMR ஐ இணைக்க ரூ.204 கோடியில் இரும்பு மேம்பாலம்- வெளியான அசத்தல் அறிவிப்பு
அடி தூள்... ECR மற்றும் OMR ஐ இணைக்க ரூ.204 கோடியில் இரும்பு மேம்பாலம்- வெளியான அசத்தல் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report
செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva
ஒரே நொடியில் பறிபோன உயிர் இந்திய வீரர் உயிரிழப்பு பரபரப்பு CCTV காட்சி | Volley Ball Player Hardik Death
தவெகவில் செங்கோட்டையன் பாஜகவின் SLEEPER CELL விஜய்யை காலி செய்ய திட்டமா? | Sengottaiyan Vs TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Red Alert: டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
Cyclone Ditwah: வங்கக் கடலில் உருவானது ‘டிட்வா‘ புயல்; தமிழகத்தை நோக்கி நகரும் என வானிலை மையம் அறிவிப்பு
வங்கக் கடலில் உருவானது ‘டிட்வா‘ புயல்; தமிழகத்தை நோக்கி நகரும் என வானிலை மையம் அறிவிப்பு
TN RED ALERT: ரெட் அலர்ட்... உடனே இந்த 12 மாவட்டங்களுக்கு செல்லுங்க- ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
ரெட் அலர்ட்... உடனே இந்த 12 மாவட்டங்களுக்கு செல்லுங்க- ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
அடி தூள்... ECR மற்றும் OMR ஐ இணைக்க ரூ.204 கோடியில் இரும்பு மேம்பாலம்- வெளியான அசத்தல் அறிவிப்பு
அடி தூள்... ECR மற்றும் OMR ஐ இணைக்க ரூ.204 கோடியில் இரும்பு மேம்பாலம்- வெளியான அசத்தல் அறிவிப்பு
Sengottaiyan: தவெகவில் இணைந்ததற்கு இது தான் காரணம்.! இளவல் விஜய் தலைமையில் ஆட்சி- செங்கோட்டையன் அதிரடி
தவெகவில் இணைந்ததற்கு இது தான் காரணம்.! இளவல் விஜய் தலைமையில் ஆட்சி- செங்கோட்டையன் அதிரடி
Karthigai Deepam: ரேவதியை காப்பாற்றிய கெளசல்யா.. கார்த்தியை மிரட்டும் காளியம்மாள் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதியை காப்பாற்றிய கெளசல்யா.. கார்த்தியை மிரட்டும் காளியம்மாள் - கார்த்திகை தீபத்தில் இன்று
Sengottaiyan joined TVK: ஜெ. படத்தை தூக்கி போட்ட செங்கோட்டையன்.? பாக்கெட்டில் ஜொலிக்கும் விஜய் படம்
ஜெ. படத்தை தூக்கி போட்ட செங்கோட்டையன்.? பாக்கெட்டில் ஜொலிக்கும் விஜய் படம்
Parijatham: இசையைத் தீர்த்துக்கட்ட ஸ்ரீஜா தந்தை திட்டமா? பாரிஜாதத்தில் இன்று
Parijatham: இசையைத் தீர்த்துக்கட்ட ஸ்ரீஜா தந்தை திட்டமா? பாரிஜாதத்தில் இன்று
Embed widget