மேலும் அறிய

Kangana Ranaut Tweets on Corona | Calm down முட்டாள்களே.. கங்கனா ரனாவத்தின் ட்வீட்டால் கடுப்பான ட்விட்டர்வாசிகள்..

"ஆக்சிஜன் குறைவை நிரந்தரமாக போக்க அதிக மரங்களை நடவேண்டும்' என்று பதிவிட்டிருக்கிறார் கங்கனா ரனாவத்.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் மிகவும் தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக டெல்லி,மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று பல மடங்கு அதிகரித்து வருகிறது. இரண்டாவது அலையில் பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு வருவதால் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. என்ன வேண்டுமென்றாலும் செய்து ஆக்சிஜன் கிடைப்பதை  உறுதிப்படுத்துங்கள் என உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், “யாருக்கெல்லாம் தற்போது ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ளதோ அவர்கள் இந்த மூச்சு பயிற்சியை செய்யுங்கள். இது ஒரு தற்காலிக தீர்வு மட்டுமே. ஆக்சிஜன் குறைவை நிரந்தரமாக போக்க அதிக மரங்களை நடவேண்டும். மரத்தை நட முடியாது என்றால் அதனை வெட்டக் கூடாது” எனப் பதிவிட்டுள்ளார். 

கொரோனா நோய் தொற்று உள்ளவர்களுக்கு ஆக்சிஜன் குறைபாடு ஏற்பட்டால் மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டும். அங்கு அவர்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பதே மருத்துவர்களின் கருத்தாக உள்ளது. மேலும் ஆக்சிஜன் குறைபாடு தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு, “மனிதர்களின் உயிர் அரசு முக்கியமானதாக தெரியவில்லையா? பிச்சை எடுங்கள், கடன் வாங்குகள் அல்லது திருடுங்கள்..ஆனால் உயிருக்கு போராடும் நபர்களுக்கு எப்படியாவது ஆக்சிஜன் சிலிண்டர் கிடைப்பதை உறுதி செய்யுங்கள்” என்று மத்திய அரசுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. 

இந்த சூழலில் கங்கனா ரனாவாத்தின் அடுத்த பதிவு,”தற்போதைய நிலையை கண்டு கோபமாகவும் பதற்றமாகவும் உள்ளவர்கள் சிறுகுழந்தை போன்றவர்கள். நாளைக்கே சூரியன் தனது ஒளியை தரவில்லை என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள். நாம் வாழ்வதற்கு ஏதுவான சூழல்  பூமியில் இல்லாவிட்டால் என்ன செய்யமுடியும். பதற்றப்படாமல் இருங்கள்.


Kangana Ranaut Tweets on Corona | Calm down முட்டாள்களே.. கங்கனா ரனாவத்தின் ட்வீட்டால் கடுப்பான ட்விட்டர்வாசிகள்..

பூமி தன்னுடைய பாதையில்தான் சுற்றும் உங்களுடைய பணத்திற்கு ஏற்றவாறு சுற்றாது” எனப் பதிவிட்டுள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

18 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை; தேர்தல் நெருங்கும் நேரத்தில் சத்தீஸ்கரில் பெரும் பதற்றம்
18 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை; தேர்தல் நெருங்கும் நேரத்தில் சத்தீஸ்கரில் பெரும் பதற்றம்
JP Nadda: திமுகவினருக்கு ஜூன் 4க்கு பிறகு ஜெயில் அல்லது பெயில் - பீதியை கிளப்பிய ஜே.பி. நட்டா..!
திமுகவினருக்கு ஜூன் 4க்கு பிறகு ஜெயில் அல்லது பெயில் - பீதியை கிளப்பிய ஜே.பி. நட்டா..!
ராகுல் காந்தி சாலை தடுப்பை தாண்டி சென்றது அப்பட்டமான போக்குவரத்து விதி மீறல் - அண்ணாமலை
ராகுல் காந்தி சாலை தடுப்பை தாண்டி சென்றது அப்பட்டமான போக்குவரத்து விதி மீறல் - அண்ணாமலை
UPSC Result TN Topper: யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த புவனேஷ் ராம் - விவரம்!
UPSC Result TN Topper: யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த புவனேஷ் ராம் - விவரம்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Sivapriyan Interview | Jothimani | ’’மோடி பற்றி பேசினால்..விஜயபாஸ்கருக்கு சிறை தான்’’ ஜோதிமணி ATTACKH Raja speech | ’’ஸ்டாலின் உயிரை காப்பாற்றியவர் மோடி’’ உடைத்து பேசிய ஹெச்.ராஜாSelvaperunthagai Speech | ’’மோடி சொன்னாரு..எடப்பாடி முடிச்சாரு’’செல்வப்பெருந்தகை விளாசல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
18 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை; தேர்தல் நெருங்கும் நேரத்தில் சத்தீஸ்கரில் பெரும் பதற்றம்
18 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை; தேர்தல் நெருங்கும் நேரத்தில் சத்தீஸ்கரில் பெரும் பதற்றம்
JP Nadda: திமுகவினருக்கு ஜூன் 4க்கு பிறகு ஜெயில் அல்லது பெயில் - பீதியை கிளப்பிய ஜே.பி. நட்டா..!
திமுகவினருக்கு ஜூன் 4க்கு பிறகு ஜெயில் அல்லது பெயில் - பீதியை கிளப்பிய ஜே.பி. நட்டா..!
ராகுல் காந்தி சாலை தடுப்பை தாண்டி சென்றது அப்பட்டமான போக்குவரத்து விதி மீறல் - அண்ணாமலை
ராகுல் காந்தி சாலை தடுப்பை தாண்டி சென்றது அப்பட்டமான போக்குவரத்து விதி மீறல் - அண்ணாமலை
UPSC Result TN Topper: யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த புவனேஷ் ராம் - விவரம்!
UPSC Result TN Topper: யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த புவனேஷ் ராம் - விவரம்!
கோவைக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட திமுக ; சிறப்பம்சங்கள் என்னென்ன?
கோவைக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட திமுக ; சிறப்பம்சங்கள் என்னென்ன?
"அம்பேத்கரே நினைச்சாலும் அரசியல் சாசனத்தை மாத்த முடியாது" எதிர்கட்சிகளுக்கு பிரதமர் மோடி பதிலடி!
Breaking Tamil LIVE: சத்தீஸ்கரில் 18 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை - பெரும் பதற்றம்
Breaking Tamil LIVE: சத்தீஸ்கரில் 18 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை - பெரும் பதற்றம்
தமிழ்நாட்டின் உரிமைகளை பறித்தவர் மோடி! பறிகொடுக்க துணைபோனவர் இபிஎஸ் - செல்வப் பெருந்தகை
தமிழ்நாட்டின் உரிமைகளை பறித்தவர் மோடி! பறிகொடுக்க துணைபோனவர் இபிஎஸ் - செல்வப் பெருந்தகை
Embed widget