மேலும் அறிய

Violence On Journalists : மரத்தில் கட்டி வைக்கப்பட்ட பத்திரிகையாளர்.. சரமாரியாக தாக்கிய கும்பல்.. நடந்தது என்ன?

மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 25 வயது பத்திரிக்கையாளரை சிலர் மரத்தில் கட்டிவைத்து தாக்கியுள்ளனர்.

பத்திரிகையாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாவது தொடர் கதையாகி வருகிறது. சமீப காலமாக, பத்திரிகையாளர் மீது நடத்தப்படும் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வண்ணம் உள்ளது. அதன் தொடர்ச்சியாக, மத்திய பிரதேசத்தில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி 25ஆம் தேதி, ஹோஷங்காபாத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 25 வயது பத்திரிக்கையாளரை சிலர் மரத்தில் கட்டிவைத்து தாக்கியுள்ளனர். சமீபத்தில், அந்த கும்பலுக்கும் பத்திரிகையாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, கோபமடைந்த அந்த கும்பல் பத்திரிகையாளரை கட்டி வைத்த அறைந்துள்ளது.

இந்த சம்பவம் வீடியோவாக எடுக்கப்பட்ட நிலையில், சமூக வலைதளங்களில் அது வைரலாகி வருகிறது. இச்சூழலில், பத்திரிகையாளரை தாக்கிய 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொலைக்காட்சி மற்றும் செய்தி இணையதளத்தில் பத்திரிகையாளராக பணிபுரிந்து வரும் பிரகாஷ் யாதவ், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், "மனகானில் இருந்து விளம்பர முன்பதிவு செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் கோட்கான் என்ற எனது கிராமத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தேன்.

அந்த சமயத்தில், ​​நாராயண் யாதவ் என்ற நபர் என்னை வழிமறித்தார். ஜனவரி 1 ஆம் தேதி எங்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் என்னை மோசமான வார்த்தைகளில் திட்டினர்.

அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்த போது, ​​அவரது சகோதரர் நரேந்திர யாதவும், ஓம் பிரகாஷ் என்ற மற்றொரு நபரும் சேர்ந்து, என்னைத் தாக்கினர்" என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு, ரைசிங் காஷ்மீர்' (Rising Kashmir) இதழின் ஆசிரியர் சுஜாத் புஹாரி மற்றும் அவரது பாதுகாவலர் ஒருவர், ஜம்மு காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டார்.

பெங்களூருவில் பெண் பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

 

உலகம் முழுவதும் 2018 ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் 32 செய்தியாளர்கள் கொல்லப்பட்டனர். அதில் எல்சால்வாடோரை சேர்ந்த ஒரு பெண் செய்தியாளரும் அடங்குவார்.

கடந்தாண்டு, அதிகபட்சமாக மெக்சிகோவில் மட்டும் 11 செய்தியாளர்கள் கொல்லப்பட்டனர். உக்ரைனில் எட்டு செய்தியாளர்கள் கொல்லப்பட்டனர். பல்வேறு நாடுகளில், பத்திரிகையாளர்களை தாக்கும் போக்கு அதிகரித்திருப்பது கவலை அளிக்கம் விதமாக உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
ABP Premium

வீடியோ

Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
Donald Trump: புகைப்படத்துடன் ஆணுறை.. பெண்களுடன் ஜாலி போஸ்.. பிளேபாய் ட்ரம்ப்!
Donald Trump: புகைப்படத்துடன் ஆணுறை.. பெண்களுடன் ஜாலி போஸ்.. பிளேபாய் ட்ரம்ப்!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Embed widget