மேலும் அறிய

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?

ஜம்மு காஷ்மீரில் ராணுவம் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. தெற்கு காஷ்மீரில் உள்ள குல்கமில் இரண்டு வெவ்வேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் இரண்டு வெவ்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச்சூடும் சம்பவங்கள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு காஷ்மீரில் உள்ள குல்கமில்தான் இந்த இரண்டு சம்பவங்களும் நடந்துள்ளன. இரண்டு இடங்களிலும் ராணுவ அதிகாரிகள் அதிரடியில் இறங்கினர்.

ஜம்மு காஷ்மீரில் பதற்றம்: இரண்டு துப்பாக்கிச் சண்டைகளும் ஒன்றன்பின் ஒன்றாக நடந்திருக்கின்றன. முதலில் மோட்டர்காமிலும் பின்னர் சினிகம் கிராமத்திலும் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இரண்டு ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்த நிலையில், நான்கு தீவிரவாதிகள் நேற்று கொல்லப்பட்டனர்.

இன்று காலை இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதுகுறித்து டிஜிபி ஆர்.ஆர். ஸ்வைன் கூறுகையில், "தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதை மைல்கல்லாக கருதுகிறோம். தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தை மக்களின் ஆதரவுடன் அதன் தர்க்கரீதியான முடிவுக்கு கொண்டு செல்வோம்.

உடல்களை பரிசோதனை செய்ததில் ஆறு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக எங்களிடம் தகவல்கள் கிடைத்துள்ளன. இது ஒரு பெரிய மைல்கல். கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளோம்" என்றார்.

ராணுவம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை: மோட்டர்காம் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத் தகவல் கிடைத்ததையடுத்து ஜம்மு காஷ்மீர் காவல்துறை, ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளின் கூட்டுக் குழு நேற்று கிராமத்தை சுற்றி வளைத்தது.

இலக்கை நோக்கி அவர்கள் சென்றபோது, ​​அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடத்தியதால், ராணுவத்தினர் பதிலடி கொடுக்க நேர்ந்தது என பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இந்த துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

இதற்கிடையில், இதேபோன்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் சினிகம் கிராமத்திலும் நடந்தது. உளவுத்துறை அளித்த தகவல்களின் அடிப்படையில் அப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டது. இங்கும், பாதுகாப்புப் படையினர் உள்ளே நுழைந்தபோது, ​​தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தத் தொடங்கினர். துப்பாக்கிச்சூட்டில் 4 தீவிரவாதிகளும், ஒரு ராணுவ வீரரும் கொல்லப்பட்டனர்.

நேற்று தொடங்கிய துப்பாக்கிச்சூடு ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் தொடங்கியது. மோட்டர்காமில் இன்னும் துப்பாக்கிச் சண்டை நடந்து கொண்டிருப்பதால், அதன் முழு விவரம் அது முடிந்த பின்னரே தெரியவரும்.

சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களும் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. 

ஜம்மு காஷ்மீருக்கு சட்டப்பேரவை இருந்துபோதிலும், அதற்கு இன்னும் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, காஷ்மீரில் பயங்கரவாதம் குறைந்துவிட்டதாக மத்திய அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், பயங்கரவாத தாக்குதல்கள் நின்றபாடில்லை என்றும் முன்பைவிட தற்போது அதிக எண்ணிக்கையில் நிகழ்கிறது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EX MLA Kathiravan: ”EX MLA கிட்டயே கட்டணமா?” போலீசாருடன் வாக்குவாதம் காரை குறுக்கே நிறுத்தி சண்டைPrashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
அப்பா இந்து.. அம்மா முஸ்லிம்..கிறஸ்துமஸில் பிறந்த பிரபலம்! யாரு அந்த ஹீரோயின்?
அப்பா இந்து.. அம்மா முஸ்லிம்..கிறஸ்துமஸில் பிறந்த பிரபலம்! யாரு அந்த ஹீரோயின்?
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
Pakistan Train Hijack: ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
Embed widget