மேலும் அறிய

"குழந்தைகளுக்கு வேதங்கள், புராணங்களை கற்பிக்க வேண்டும்" ஜெகதீப் தன்கர் வேண்டுகோள்

நாட்டின் வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், வரலாறு போன்ற அனைத்தையும் நமது குழந்தைகளுக்கு பிறந்தது முதல் கற்பிக்கப்பட வேண்டும் என குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பண்டைய கால நூல்களை எளிதில் பயன்படுத்தக் கூடியதாகவும், சமகால சவால்களுக்குப் பொருந்தக்கூடியதாகவும் மாற்ற வேண்டும் என்றும் மாற்று மருத்துவ முறைகளில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் என்றும் தெரிவித்துள்ளார்.

குடியரசு துணைத்தலைவர் என்ன பேசினார்?

கோவாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், “பல்வேறு வேறுபாடுகளைக் கொண்டுள்ள தேசமாக நமது நாடு உள்ளது. நாட்டில் ஆழமாக வேரூன்றியுள்ள மருத்துவ முறைகளை மீண்டும் கண்டறிந்து, அவற்றை உறுதியாக பின்பற்ற வேண்டும்.

மாற்று மருத்துவ முறையின் தாயகமாக இந்தியா இருப்பதால், மாற்று மருத்துவத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த மாற்று மருத்துவ முறைகள் தற்போது மிகவும் விரிவாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது" என்றார்.

நாட்டின் பண்டைய கால நூல்களை, நூலகங்களுக்குள் அடைத்து வைக்காமல், அவற்றை பரவலாகப் பயன்படுத்தும் நடைமுறைகளை விரிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். நவீன அறிவியல் கருவிகளைப் பயன்படுத்தி ஆராய்ச்சி, புதுமை, மறு விளக்கம் போன்ற செயல்பாடுகள் மூலம் காலத்தால் அழியாத கருத்துக்களை உயிர்ப்புடன் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

"வேதங்கள், புராணங்களை கற்று தர வேண்டும்"

இத்தகைய விலை மதிப்பற்ற பொக்கிஷங்களை எளிதில் பயன்படுத்தக் கூடியதாகவும், சமகால சவால்களுக்குப் பொருந்தக்கூடிய முறையில் மாற்ற வேண்டும் என்றும் ஆதார அடிப்படையில் சரிபார்ப்பு, டிஜிட்டல் மயமாக்கல், மொழிபெயர்ப்புகள் மற்றும் பல்துறை ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “நாட்டின் வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், வரலாறு போன்ற அனைத்தையும் நமது குழந்தைகளுக்கு பிறந்தது முதல் கற்பிக்கப்பட வேண்டும். நமது நாட்டின் வலுவான நாகரிக அறிவு குறித்து எடுத்துக் கூற வேண்டிய தருணம் இது" என்றார்.

மஹரிஷி சுஷ்ருதா மற்றும் ஆசார்ய சரிகா ஆகியோரின் உருவச் சிலைகளை திறந்து வைத்த பின்னர், அங்கு கூடியிருந்தவர்களிடம் உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர், “அறிவை உருவகப்படுத்துபவர்களை இன்று நாம் கொண்டாடுகிறோம்.

சிரகா குஷான் அரசாட்சியில் சரகா ஒரு அரச மருத்துவராக இருந்தார். சரகா மருத்துவத்தின் தந்தை என்றும், அவர் சரகா சம்ருதா என்ற மருத்துவம் குறித்த நூலை எழுதியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நூல் ஆயுர்வேத மருத்துவ முறைக்கான ஒரு  அடிப்படை நூலாகும்.

மற்றொன்று, அறுவை சிகிச்சையின் தந்தையாகக் கருதப்படும் சுஷ்ருதா ஆவார். அவர் வரைந்துள்ள ஓவியங்களைக் காண எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த காலங்களில் அறுவை சிகிச்சைக்கான கருவிகள், மிகவும் முற்போக்கான தன்மை கொண்டதாகவும், அதனை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

சுஷ்ருதா தன்வந்தரியின் சீடராவார். தன்வந்திரி என்பவர் மற்றொரு புகழ்பெற்ற மருத்துவர் ஆவார். சரகா, சுஷ்ருதா ஆகியோரின் வாழ்க்கை மற்றும் படைப்புகள் நம் அனைவருக்கும், குறிப்பாக, எளிதில் ஈர்க்கக்கூடியதாகவும், மனதிற்கு உத்வேகம் அளிப்பதாகவும்  உள்ளன என்றும் துணை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Gift: 2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
Gold Rate Today: குஷியோ குஷி.! தங்கம் விலை சரசரவென குறைந்தது- ஒரு சவரனுக்கு இவ்வளவா.!!!
குஷியோ குஷி.! தங்கம் விலை சரசரவென குறைந்தது- ஒரு சவரனுக்கு இவ்வளவா.!!!
EPS ADMK: திமுக கூட்டணியில் குழப்பம்.! 210 தொகுதிகளை அதிமுக கைப்பற்றும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
திமுக கூட்டணியில் குழப்பம்.! 210 தொகுதிகளை அதிமுக கைப்பற்றும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Magnus Carlsen: இந்தியரிடம் தோற்றதும் கடுப்பான மேக்னஸ் கார்ல்சன் - ஆத்திரத்தில் செய்த செயலின் வீடியோ வைரல்
Magnus Carlsen: இந்தியரிடம் தோற்றதும் கடுப்பான மேக்னஸ் கார்ல்சன் - ஆத்திரத்தில் செய்த செயலின் வீடியோ வைரல்
ABP Premium

வீடியோ

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift: 2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
Gold Rate Today: குஷியோ குஷி.! தங்கம் விலை சரசரவென குறைந்தது- ஒரு சவரனுக்கு இவ்வளவா.!!!
குஷியோ குஷி.! தங்கம் விலை சரசரவென குறைந்தது- ஒரு சவரனுக்கு இவ்வளவா.!!!
EPS ADMK: திமுக கூட்டணியில் குழப்பம்.! 210 தொகுதிகளை அதிமுக கைப்பற்றும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
திமுக கூட்டணியில் குழப்பம்.! 210 தொகுதிகளை அதிமுக கைப்பற்றும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Magnus Carlsen: இந்தியரிடம் தோற்றதும் கடுப்பான மேக்னஸ் கார்ல்சன் - ஆத்திரத்தில் செய்த செயலின் வீடியோ வைரல்
Magnus Carlsen: இந்தியரிடம் தோற்றதும் கடுப்பான மேக்னஸ் கார்ல்சன் - ஆத்திரத்தில் செய்த செயலின் வீடியோ வைரல்
Chennai Metro: மீண்டுமா..! சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, ஏர்போர்ட் - கோயம்பேடு வழித்தட மக்கள் தவிப்பு
Chennai Metro: மீண்டுமா..! சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, ஏர்போர்ட் - கோயம்பேடு வழித்தட மக்கள் தவிப்பு
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Ajithkumar: சூப்பர் அப்டேட்.. அஜித்தின் அடுத்த பட ரிலீஸ் தேதி இதோ.. குழப்பத்தில் ரசிகர்கள்!
Ajithkumar: சூப்பர் அப்டேட்.. அஜித்தின் அடுத்த பட ரிலீஸ் தேதி இதோ.. குழப்பத்தில் ரசிகர்கள்!
புத்தாண்டை Skoda Slavia கார் வாங்கி கொண்டாடலமா? மைலேஜ், விலை என்ன?
புத்தாண்டை Skoda Slavia கார் வாங்கி கொண்டாடலமா? மைலேஜ், விலை என்ன?
Embed widget