மேலும் அறிய

அம்பேத்கர், பூலேவை அவமதித்தாரா பாஜக அமைச்சர்? திடீரென முகத்தில் கருப்பு மை வீசிய நபர்...நடந்தது என்ன?

பிம்ப்ரி நகரத்திற்கு சென்ற பாஜக அமைச்சர் மீது மர்ம நபர் ஒருவர் கறுப்பு மை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் சமூக அளவில் மிக பெரிய தாக்கங்களை ஏற்படுத்திய தலைவர்கள் பி.ஆர். அம்பேத்கர் மற்றும் ஜோதிராவ் புலே. இவர்களை அவமதிக்கும் விதமாக மகாராஷ்டிர அமைச்சரும் பாஜக மாநில தலைவருமான சந்திரகாந்த் பாட்டீல் பேசியதாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து, பிம்ப்ரி நகரத்திற்கு சென்ற அவர் மீது கறுப்பு மை வீசப்பட்டுள்ளது. மை வீசிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக பிம்ப்ரி-சின்ச்வாட் போலீஸ் கமிஷனர் அங்குஷ் ஷிண்டே தெரிவித்தார்.

கட்டிடத்திற்கு சென்றுவிட்டு வெளியே வரும் பாட்டீல் மீது கறுப்பு மை வீசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சம்பவம் நடந்த உடனேயே அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை மடக்கி பிடித்தனர். மை வீச்சு சம்பவத்திற்கு முன்பே, சில போராட்டக்காரர்கள் அமைச்சரின் கான்வாய் மீது கருப்புக் கொடி காட்ட முயன்றனர்.

அவுரங்காபாத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மராத்தியில் பேசிய மகாராஷ்டிர உயர் மற்றும் தொழில்நுட்பத்துறை கல்வி அமைச்சரான பாட்டீல், "அம்பேத்கரும், பூலேவும் கல்வி நிறுவனங்களுக்கு அரசு மானியத்தை நாடவில்லை என்றும், பள்ளி, கல்லூரிகளை தொடங்குவதற்கு நிதியை மக்களிடம் பிச்சையாக கேட்டதாக" கூறினார்.

 

இதில், அம்பேத்கரும், பூலேவும் பிச்சை எடுத்ததாக அமைச்சர் தெரிவித்தது சர்ச்சையை கிளப்பியது. சந்திரகாந்த் பாட்டீல் பேசியது குறித்து விளக்கம் அளித்துள்ள மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், "பாட்டீலின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "பிம்ப்ரியில் நடந்த சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. பாட்டீல் தவறான வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தாலும், அவர் எதை அர்த்தப்படுத்தினார் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.

டாக்டர் அம்பேத்கர் மற்றும் கல்வியாளர் பௌராவ் பாட்டீல் போன்றவர்கள் கல்வி நிறுவனங்களை நடத்துவதற்கு அரசாங்கத்திடம் இருந்து பணம் வாங்கவில்லை என்பதையே அவர் தெரிவிக்க முயன்றார்" என்றார்.

தான் பேசியதற்கு தெளிவுப்படுத்திய பாட்டீல், "டாக்டர் அம்பேத்கர், மகாத்மா பூலே ஆகியோரை நான் எப்போது விமர்சித்தேன்? அவர்கள் அரசின் உதவிக்காக காத்திருக்கவில்லை, பள்ளிகளைத் தொடங்க பிச்சை எடுத்தார்கள் என சொன்னேன்.

நீதிமன்றத்தில் யாரேனும் 'நீதிக்காக மன்றாடுகிறேன்' என்று சொன்னால், 'பிச்சை' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது தவறா? மை வீசுவதால் ஒன்றும் ஆகாது. எனவே, சட்டையை மாற்றிக்கொண்டு நகர்ந்தேன்" என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
ABP Premium

வீடியோ

TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |
தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
America Offer illegal Immigrants: இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
Embed widget