மேலும் அறிய

Indore Temple Tragedy: இந்தூர் கோயில் விபத்து; பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு - ஒருவர் மட்டும் மிஸ்ஸிங்..! சோகத்தில் மக்கள்

மத்திய பிரதேசம், இந்தூரில் உள்ள கோயிலில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் நகரில் அமைந்துள்ளது பாலேஷ்வர் மகாதேவ் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று ராமநவமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், ராமநவமி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் இந்த கோயிலில் நடைபெற்றது. இதையடுத்து, ஏராளமான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்திருந்தனர்.

35 ஆக அதிகரித்த உயிரிழப்பு:

இந்த நிலையில், கோயிலில் இருந்த கிணறு ஒன்று முழுவதும் ஸ்லாப் எனப்படும் சிமெண்ட் கற்களால் கூரையாக மூடப்பட்டு இருந்தது. அந்த ஸ்லாப் கற்கள் மீது ஏராளமான பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர். அப்போது பாரம் தாங்காமல் அந்த சிலாப்கற்கள் உடைந்து விழுந்ததில் கிணற்றுக்குள் ஏராளமான பக்தர்கள் விழுந்தனர்.

திடீரென நிகழ்ந்த இந்த அசம்பாவிதத்தில் நேற்றே 18 பேர் உயிரிழந்த நிலையில், இன்று காலை உயிரிழப்பு எண்ணிக்கை 35 ஆக உயிரிழந்துள்ளது.  18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 2 பேர் வீடு திரும்பியுள்ளனர். இன்னும் ஒருவர் மட்டும் காணவில்லை என்று கூறப்படுகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  

இழப்பீடு:

மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் இந்த விபத்து சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 5 லட்சம் இழப்பீடும், கயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இந்த விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விபத்து சம்பவம் தொடர்பாக மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகானிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆம்புலன்ஸ் தாமதம்:

விபத்து நடைபெற்ற கோயில் அமைந்துள்ள படேல்நகரின் குடியிருப்பு சங்கத் தலைவர் காந்திபாய் படேல் கூறும்போது, விபத்து நடைபெற்று 1 மணி நேரமாகியும் முறையாக தகவல் தெரிவித்தும் சம்பவ இடத்திற்கு எந்த ஆம்புலன்சும் வரவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். தற்போது விபத்து நடந்துள்ள பாலேஷ்வர் ஆலயம் அந்த பகுதியில் அமைந்துள்ள மிகவும் பழமைவாய்ந்த கோயில் ஆகும்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், ஒருவரது நிலை பற்றி எந்த தகவலும் இதுவரை ஏதும் தெரியாததால் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து கோயில் பகுதிகளில் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறி வருவதால் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க: Ram Navami clash: ராம நவமி கொண்டாட்டத்தில் பயங்கர கலவரம்..! வாகனங்களுக்கு தீ வைப்பு..! பதற்றத்தில் மே.வங்கம்..!

மேலும் படிக்க: PM Modi TN Visit: பிரதமர் மோடி 9-ந் தேதி முதுமலைக்கு பயணம்...! ஆஸ்கர் பிரபலங்கள் பொம்மன், பெள்ளியுடன் நேரில் சந்திப்பு..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
Embed widget