மேலும் அறிய

நடுவானில் உயிருக்கு போராடிய பயணி...இந்திய விமானம் பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு..!

ஏறக்குறைய ஐந்து மணிநேரம் கராச்சி விமான நிலையத்தில்  A320-271N விமானம் நிறுத்தப்பட்டிருந்தது. அனைத்து சம்பிரதாயங்களும் முடிக்கப்பட்டு விமானம் டெல்லி திரும்பியது.

டெல்லியில் இருந்து தோஹா சென்ற இண்டிகோ விமானம், மருத்துவ அவசரம் ஏற்பட்டதை தொடர்ந்து, பாகிஸ்தானின் கராச்சிக்கு திருப்பி விடப்பட்டது. விமானத்தில் பயணித்த பயணி ஒருவருக்கு நோய்வாய் ஏற்பட்டதையடுத்து, விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

தரையிறங்கிய பின்னர், விமான நிலைய மருத்துவக் குழுவால், அந்த பயணி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

நடுவானில் உயிருக்கு போராடிய பயணி:

ஆனால், ஏற்கனவே, அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இறந்த பயணி, 60 வயதான நைஜீரிய நாட்டவரான அப்துல்லா என்பது பின்னர் தெரிய வந்தது. விமானம் கராச்சியில் இருந்து புறப்பட அனுமதிக்கப்பட்டு, இறந்த பயணியின் உடலுடன் டெல்லிக்கு திரும்பியது. 

இதுகுறித்து கராச்சி விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், "ஏறக்குறைய ஐந்து மணிநேரம் கராச்சி விமான நிலையத்தில்  A320-271N விமானம் நிறுத்தப்பட்டிருந்தது. கராச்சியில் உள்ள அதிகாரிகள் பயணிக்கு இறப்புச் சான்றிதழை வழங்கியதும், அனைத்து சம்பிரதாயங்களும் முடிக்கப்பட்டு விமானம் டெல்லி திரும்பியது"

இண்டிகோ விமான நிறுவனம் இரங்கல்:

இதுகுறித்து இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தச் செய்தியால் நாங்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளோம். இறந்த பயணியின் குடும்பத்தாருக்கும் அன்பானவர்களுக்காகவும் பிரார்த்திக்கிறோம்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, விமானத்தின் மற்ற பயணிகளை மாற்றுவதற்கான ஏற்பாடுகளை தற்போது செய்து வருகிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா தலைநகர் டெல்லியில் இருந்து கத்தார் தலைநகர் தோஹாவுக்கு சென்ற விமானம், பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஏனெனில், இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான உறவில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், இந்தியாவில் இருந்து கிளம்பிய விமானம் பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்டது முக்கியத்துவம் பெறுகிறது. இருப்பினும், அவசர நோக்கங்களுக்காக விமானம் திட்டமிடப்படாத பகுதியில் தரையிறக்கப்படுவது வழக்கமான நிகழ்வுதான்.

முந்தைய சம்பவம்:

சமீபத்தில், இதேபோல, டெல்லியில் இருந்து மும்பை வழியாக  138 பயணிகளுடன் துபாய் சென்ற போயிங் 737 விமானம் பாதியிலேயே தரையிறக்கப்பட்டது. விமானம் மும்பையில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் இடது புற இறக்கையில் , எரிபொருள் குறைவாக இருப்பதாக விமானிக்கு இண்டிகேஷன் வந்திருக்கிறது.

இதனால் சுதாரித்த விமானி,  பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் அந்த விமானத்தை பத்திரமாக தரையிறக்கியிருக்கிறார். 

தரையிறங்கிய பின் விமானத்தை சோதனை செய்தபோது, எரிபொருள் டேங்கில் எந்தவெளிப்புற கசிவும் இல்லை என தெரிந்தது. அது இண்டிகேஷன் லைட்டில் ஏற்பட்ட கோளாறு என கண்டறியப்பட்டது. ஆனாலும் உடனடியாக சரி செய்ய முடியாது என பொறியாளர்கள் கூறியதால் ,  அதன் பின்னர் ஸ்பைஸ்ஜெட், மும்பையில் இருந்து SG 9911 என்ற மாற்று விமானத்தை அனுப்பி, பயணிகளை துபாய்க்கு அழைத்துச் சென்றது. 

தலைப்பு செய்திகள்

புற்றுநோயாளிகளுக்கு கன்ஃபார்ம் ரயில் டிக்கெட்டுகள்.. பெறுவது எப்படி? - அமைச்சர் தகவல்!
புற்றுநோயாளிகளுக்கு கன்ஃபார்ம் ரயில் டிக்கெட்டுகள்.. பெறுவது எப்படி? - அமைச்சர் தகவல்!
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
40 ஆயிரம் கிலோ நெய், 550 ஆண்டுகளாகியும் கரையாத கோயில், வடியும் வெண்ணெய் - முழு விவரம்
40 ஆயிரம் கிலோ நெய், 550 ஆண்டுகளாகியும் கரையாத கோயில், வடியும் வெண்ணெய் - முழு விவரம்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Udhayanidhi : உதயநிதியை விடுவிக்க சொன்ன நீதிபதி.! நடந்தது என்ன.? நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்
உதயநிதியை விடுவிக்க சொன்ன நீதிபதி.! நடந்தது என்ன.? நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 5-ம் தேதி ஒரே ஒரு இடத்துல தான் மின்சாரத் தடை இருக்கு; அது உங்க ஏரியாவா பாருங்க.?
சென்னைல ஆகஸ்ட் 5-ம் தேதி ஒரே ஒரு இடத்துல தான் மின்சாரத் தடை இருக்கு; அது உங்க ஏரியாவா பாருங்க.?
Embed widget