மேலும் அறிய

இதுக்கு வேற எங்கேயும் உதாரணத்தை பாக்க முடியாது.. இந்தியாதான் டாப்...பிரதமர் மோடி பெருமிதம்

சர்வதேச பால் கூட்டமைப்பின் உலக பால் உச்சி மாநாடு 2022-ஐ பிரதமர் மோடி, திங்களன்று கிரேட்டர் நொய்டாவில் தொடங்கி வைத்தார்.

சர்வதேச பால் கூட்டமைப்பின் உலக பால் உச்சி மாநாடு 2022-ஐ பிரதமர் மோடி, திங்களன்று கிரேட்டர் நொய்டாவில் தொடங்கி வைத்தார். நான்கு நாள் உச்சி மாநாட்டில் தொழில்துறை தலைவர்கள், வல்லுநர்கள், விவசாயிகள், கொள்கை திட்டமிடுபவர்கள் உள்பட உலகளாவிய மற்றும் இந்திய பால் பங்குதாரர்கள் கலந்து கொண்டனர். 

‘ஊட்டச்சத்து மற்றும் வாழ்வாதாரத்தில் பாலின் அங்கம்’ என கருப்பொருளில் உச்சிமாநாடு நடைபெற்றது. இந்தியா எக்ஸ்போ சென்டர் & மார்ட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேசுகையில், உலகின் மற்ற வளர்ந்த நாடுகளைப் போலல்லாமல், இந்தியாவில் பால் துறையின் உந்து சக்தி சிறு விவசாயிகள்தான் என்று கூறினார். 

"இந்தியாவின் பால் துறையானது பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை விட வெகுஜனம் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது என வகைப்படுத்தலாம்" என மோடி கூறினார். விரிவாக பேசிய அவர், "பால்வளத் துறையின் ஆற்றல் கிராமப்புறப் பொருளாதாரத்திற்கு உத்வேகம் அளிப்பது மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தின் முக்கிய ஆதாரமாகவும் உள்ளது.

உலகில் இதுபோன்ற மற்றொரு உதாரணத்தைக் கண்டுபிடிப்பது கடினம். இன்று இந்தியாவில் இவ்வளவு பெரிய பால் கூட்டுறவு நெட்வொர்க் உள்ளது. இதுபோன்ற உதாரணத்தை உலகில் வேறு எங்கு கண்டுபிடிப்பது கடினம். இந்த பால் கூட்டுறவு சங்கங்கள், நாட்டின் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள சுமார் இரண்டு கோடி விவசாயிகளிடம் இருந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை பால் சேகரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன.

இந்த மொத்த செயல்பாட்டிலும் இடைத்தரகர் இல்லை. வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் பணத்தில் 70 சதவீதத்திற்கும் மேல் விவசாயிகளின் பாக்கெட்டுகளுக்கு செல்கிறது. உலகில் வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு உயர்ந்த விகிதம் இல்லை. நாட்டின் பால் உற்பத்தித் துறை 70 சதவீத பெண் தொழிலாளர்களைக் கொண்டுள்ளது. இந்தியாவின் பால் துறையின் உண்மையான தலைவர்கள் பெண்கள்தான். இது மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள பால் கூட்டுறவு சங்கங்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் பெண்கள்" என்றார்.

நாடு முழுவதும் கால்நடைகள் மூலம் பரவும் சமீபத்திய தோல் கழலை நோய் பற்றிப் பேசிய பிரதமர், பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாகவும், மேலும் உள்நாட்டு தடுப்பூசியையும் உருவாக்கி வருவதாகவும் கூறினார். 

இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "சமீப காலமாக, இந்தியாவில் பல மாநிலங்களில் தோல் கழலை நோய் காரணமாக கால்நடைகள் பலியாகியுள்ளன. இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் இணைந்து முயற்சித்து வருகின்றன. நமது விஞ்ஞானிகள் இந்நோய்க்கான உள்நாட்டு தடுப்பூசியையும் தயாரித்துள்ளனர்" என்றார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி சாத்தியம்?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Embed widget