மேலும் அறிய

இதுக்கு வேற எங்கேயும் உதாரணத்தை பாக்க முடியாது.. இந்தியாதான் டாப்...பிரதமர் மோடி பெருமிதம்

சர்வதேச பால் கூட்டமைப்பின் உலக பால் உச்சி மாநாடு 2022-ஐ பிரதமர் மோடி, திங்களன்று கிரேட்டர் நொய்டாவில் தொடங்கி வைத்தார்.

சர்வதேச பால் கூட்டமைப்பின் உலக பால் உச்சி மாநாடு 2022-ஐ பிரதமர் மோடி, திங்களன்று கிரேட்டர் நொய்டாவில் தொடங்கி வைத்தார். நான்கு நாள் உச்சி மாநாட்டில் தொழில்துறை தலைவர்கள், வல்லுநர்கள், விவசாயிகள், கொள்கை திட்டமிடுபவர்கள் உள்பட உலகளாவிய மற்றும் இந்திய பால் பங்குதாரர்கள் கலந்து கொண்டனர். 

‘ஊட்டச்சத்து மற்றும் வாழ்வாதாரத்தில் பாலின் அங்கம்’ என கருப்பொருளில் உச்சிமாநாடு நடைபெற்றது. இந்தியா எக்ஸ்போ சென்டர் & மார்ட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேசுகையில், உலகின் மற்ற வளர்ந்த நாடுகளைப் போலல்லாமல், இந்தியாவில் பால் துறையின் உந்து சக்தி சிறு விவசாயிகள்தான் என்று கூறினார். 

"இந்தியாவின் பால் துறையானது பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை விட வெகுஜனம் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது என வகைப்படுத்தலாம்" என மோடி கூறினார். விரிவாக பேசிய அவர், "பால்வளத் துறையின் ஆற்றல் கிராமப்புறப் பொருளாதாரத்திற்கு உத்வேகம் அளிப்பது மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தின் முக்கிய ஆதாரமாகவும் உள்ளது.

உலகில் இதுபோன்ற மற்றொரு உதாரணத்தைக் கண்டுபிடிப்பது கடினம். இன்று இந்தியாவில் இவ்வளவு பெரிய பால் கூட்டுறவு நெட்வொர்க் உள்ளது. இதுபோன்ற உதாரணத்தை உலகில் வேறு எங்கு கண்டுபிடிப்பது கடினம். இந்த பால் கூட்டுறவு சங்கங்கள், நாட்டின் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள சுமார் இரண்டு கோடி விவசாயிகளிடம் இருந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை பால் சேகரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன.

இந்த மொத்த செயல்பாட்டிலும் இடைத்தரகர் இல்லை. வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் பணத்தில் 70 சதவீதத்திற்கும் மேல் விவசாயிகளின் பாக்கெட்டுகளுக்கு செல்கிறது. உலகில் வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு உயர்ந்த விகிதம் இல்லை. நாட்டின் பால் உற்பத்தித் துறை 70 சதவீத பெண் தொழிலாளர்களைக் கொண்டுள்ளது. இந்தியாவின் பால் துறையின் உண்மையான தலைவர்கள் பெண்கள்தான். இது மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள பால் கூட்டுறவு சங்கங்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் பெண்கள்" என்றார்.

நாடு முழுவதும் கால்நடைகள் மூலம் பரவும் சமீபத்திய தோல் கழலை நோய் பற்றிப் பேசிய பிரதமர், பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாகவும், மேலும் உள்நாட்டு தடுப்பூசியையும் உருவாக்கி வருவதாகவும் கூறினார். 

இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "சமீப காலமாக, இந்தியாவில் பல மாநிலங்களில் தோல் கழலை நோய் காரணமாக கால்நடைகள் பலியாகியுள்ளன. இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் இணைந்து முயற்சித்து வருகின்றன. நமது விஞ்ஞானிகள் இந்நோய்க்கான உள்நாட்டு தடுப்பூசியையும் தயாரித்துள்ளனர்" என்றார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
Embed widget