Covid-19 Cases in India: இந்தியாவில் ஒருநாள் கொரோனா உயிரிழப்பு 4 ஆயிரத்தை தாண்டியது
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் கொரோனா பாதிப்பால் 4,187 பேர் உயிரிழந்துள்ளனர்.
![Covid-19 Cases in India: இந்தியாவில் ஒருநாள் கொரோனா உயிரிழப்பு 4 ஆயிரத்தை தாண்டியது India Coronavirus Updates 8 May 401078 New COVID-19 Cases 4187 Deaths in Last 24 Hours Reported Covid-19 Cases in India: இந்தியாவில் ஒருநாள் கொரோனா உயிரிழப்பு 4 ஆயிரத்தை தாண்டியது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/08/1c901e0cfc8c8ff0ee19d52981e60510_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, பல உலக நாடுகளுக்கு இந்த வைரஸ் வேகமாக பரவியது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. இந்த தொற்றால் ஏராளாமான மக்கள் பாதிக்கப்பட்டனர். பல நாடுகளுக்கு பொருளாதார பிரச்னை ஏற்பட்டது.
கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், தொற்று பரவல் குறையாமல் அதிகமாகி வருகிறது. தற்போது, பல நாடுகளில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரதாண்டவம் ஆடி வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் தடுப்பூசிகள் போடப்படும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றனது.
மேலும், தொற்று பரலவை கட்டுப்படுத்த சில மாநிலங்களில் இரவு நேரம் மற்றும் பகுதி நேர ஊரடங்கு, ஞாயிறு அன்று முழு ஊரடங்கு என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்து ஆயிரத்து 78 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. நேற்று முன்தினம் 4.12 லட்சம், நேற்று 4.14 லட்சமாக இருந்த பாதிப்பு இன்று 4.10 லட்சமாக குறைந்துள்ளது. ஆனால், ஒருநாள் உயிரிழப்பு 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டில் ஒரே நாளில் 4 லட்சத்து ஆயிரத்து 78 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியே 14 லட்சத்து 91 ஆயிரத்து 598-இல் இருந்து 2 கோடியே 18 லட்சத்து 92 ஆயிரத்து 676- ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 4 ஆயிரத்து 187 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 34 ஆயிரத்து 83-ல் இருந்து 2 லட்சத்து 38 ஆயிரத்து 270-ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 3 லட்சத்து 18 ஆயிரத்து 609 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம், குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 76 லட்சத்து 12 ஆயிரத்து 351-இல் இருந்து ஒரு கோடியே 79 லட்சத்து 30 ஆயிரத்து 960 ஆக உள்ளது.
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">India reports 4,01,078 new <a href="https://twitter.com/hashtag/COVID19?src=hash&ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>#COVID19</a> cases, 3,18,609 discharges, and 4,187 deaths in the last 24 hours, as per Union Health Ministry <br><br>Total cases: 2,18,92,676<br>Total discharges: 1,79,30,960<br>Death toll: 2,38,270 <br>Active cases: 37,23,446<br><br>Total vaccination: 16,73,46,544 <a href="https://t.co/QRK5bnwMkO" rel='nofollow'>pic.twitter.com/QRK5bnwMkO</a></p>— ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/1390878995110006784?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>May 8, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 81.77 சதவீதம் மற்றும் உயிரிழப்பு விகிதம் 1.10 சதவிகிதமாக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 37 லட்சத்து 23 ஆயிரத்து 446-ஆக உயர்ந்துள்ளது. ஒரேநாளில் 78 ஆயிரத்து 282 பேர் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதுவரை 16 கோடியே 73 லட்சத்து 46 ஆயிரத்து 544 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் முககவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, தேவையில்லாமல் வெளியில் செல்லாமல் இருப்பது, சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கையாண்டால் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)