மேலும் அறிய

Independence Day 2022:  பிரதமர் தேசியக் கொடியேற்றும் நிகழ்வை எங்கு, எப்படிப் பார்க்கலாம்?

நாடு முழுவதும் நாளை சுதந்திர தினம் உற்சாகமாகக் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழா என்ற பெயரில் மத்திய அரசு பெருமளவில் கொண்டாட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகிறது. 

நாடு முழுவதும் நாளை சுதந்திர தினம் உற்சாகமாகக் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழா என்ற பெயரில் மத்திய அரசு பெருமளவில் கொண்டாட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகிறது. 

வீடுதோறும் தேசியக் கொடியை ஏற்றவும், சமூக வலைதள புரொஃபைல் பிக்சரில் தேசியக் கொடியை வைக்கவும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார். இதனால் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மக்கள் சுதந்திர தினத்தை பலநூறு மடங்கு உற்சாகத்துடன் கொண்டாடத் தயாராகியுள்ளனர்.

பிரதமர் உரையை எங்கு கேட்கலாம்?

சுதந்திர தின விழாவை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் சிறப்புரை ஆற்றுவார். நாளை (ஆகஸ்ட் 15) காலை 7.30 மணியளவில் செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றப்படும். இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றுவார்.

நிகழ்ச்சியை நேரலையில் எங்கு பார்க்கலாம்?

ஆகஸ்ட் 15 சுதந்திர தின நிகழ்ச்சியை தேசிய ஊடகமான தூர்தர்ஷன் நேரலையில் ஒளிபரப்புகிறது. அதுமட்டுமல்லாமல் பிஐபி எனப்படும் பிரஸ் இன்ஃபர்மேஷன் பியூரோவின் யூடியூப் சேனல் மற்றும் ட்விட்டர் ஹேண்டிலில் இந்த உரை லைவ் ஸ்ட்ரீம் செய்யப்படும். பிரதமர் அலுவலக ட்விட்டர் ஹேண்டிலிலும் சிறப்புரை நேரலையில் வழங்கப்படும்.

குடியரசுத் தலைவர் உரை:
சுதந்திர தினத்தின் முதல் நாள் மாலை குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்காக உரையாற்றுவது மரபு. அந்த மரபின்படி, இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தான் குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின் கொண்டாடப்படும் சுதந்திர தின கொண்டாட்டம் என்பதால், நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.  

அவர் உரையில், "இந்த அற்புதமான நாளில் உங்களிடம் உரையாடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும், அவர் தனது வாழ்த்து உரையில், இந்திய சுதந்திரம் ஜனநாயகத்தின் மிகப் பெரிய வெற்றி என கூறியுள்ளார். மேலும், அவர் தனது வாழ்த்தில், இந்தியா ஒருபோதும் சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை மறக்காது. நமது நாட்டின் மூவண்ணக் கொடியான தேசியக் கொடி நாட்டில் அனைவரது வீட்டிலும் பறக்கிறது. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடியினர் பிராந்திய வீரர்களாக மட்டுமில்லாமல், நாட்டின் அடையாளமாக விளங்குகின்றனர். 2047ஆம் ஆண்டு நமது சுதந்திர போராட்ட வீரர்களின் கனவு நனவாக்கி இருக்க வேண்டும். நமது சுதந்திர போராட்ட வீரர்களை நான் நினைத்துப் பார்க்கிறேன்.  மேலும், இந்தியாவின் ஆரம்பத்தில் இருந்தே பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் அனைத்து நாடுகளும் பொருளாதார நெருக்கடியில் இருந்த போது, இந்தியா அதில் இருந்து மிகவும் விரவாக மீண்டு வந்தது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளைக் கொண்டு மிகப் பெரிய சாதனைகளை நாம் செய்துள்ளோம். 200 கோடி தடுப்பூசிகளைச் செலுத்தி பல வளர்ந்த நாடுகளை விட முன்னோக்கிச் சென்றுள்ளோம்" என்று கூறியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 :  ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கியது: கண்ணீரில் தொண்டர்கள் !
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கியது: கண்ணீரில் தொண்டர்கள் !
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?BSP Armstrong death | ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலைBSP Armstrong death | ஆம்ஸ்ட்ராங் படுகொலை ஆற்காடு பாலு  கும்பல் சரண்! பின்னணியை துருவும் போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 :  ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கியது: கண்ணீரில் தொண்டர்கள் !
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கியது: கண்ணீரில் தொண்டர்கள் !
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி
Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்.. நீதிமன்றம் அனுமதி!
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!
Embed widget