மேலும் அறிய

நேசம் காட்டிய இளைஞர்; நெருங்கிப் பழகியதால் வழக்கு; விரக்தியில் பறவை உண்ணாவிரதம்!

பாசம் காட்டினதற்கு எல்லாம் வழக்கா என்று கேட்டால். ஆம் என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியொரு சம்பவம் நடந்துள்ளது.

பாசம் காட்டினதற்கு எல்லாம் வழக்கா என்று கேட்டால். ஆம் என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியொரு சம்பவம் நடந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தின் அமேதி மாவட்டத்தில் மந்தகா மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது ஆரிஃப். 35 வயதான இவர் கடந்த 13 மாதங்களுக்கு முன்னர் ஒரு பறவையை மீட்டார்.

சாரஸ் க்ரேன்ஸ் வகையைச் சேர்ந்த பறவை ஒன்று மந்தகா பகுதியில் ஆண் பறவை ஒன்று கால் ஒடிந்த நிலையில் தவித்துக் கொண்டிருந்தது. அதை மீட்ட நான் அதற்கு காலில் மஞ்சளும், கடுகு எண்ணெய்யும் போட்டேன். பின்னர் அத்துடன் ஒரு தட்டையான குச்சியைக்கட்டி கட்டு போட்டுவிட்டேன். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்ததால் பறவையின் கால் சீரானது. எங்கள் வீட்டு கோழிகளுக்கு கால் உடைந்தால் இதைத்தான் செய்வோம். இப்போது அதையே இந்தப் பறவைக்கும் செய்தேன். பறவை குணமானது. அதன் பின்னர் அதற்கும் எனக்கும் இடையே நெருக்கம் உருவானது. அந்தப் பறவையால் பறக்க முடிந்தும்கூட அது என்னைவிட்டு பறக்கவில்லை. எங்கள் வீட்டுக் கொல்லையில் இருக்கும். நான் கிராமத்தில் மோட்டார் சைக்கிளில் எங்கு சென்றாலும் அதுவும் வரும். வனப்பகுதி செல்லத் தோன்றினால் செல்லும் ஆனால் மாலை திரும்பவும் எனது வீட்டிற்கு வந்துவிடும். என்னுடன் அரிசி, பருப்பு, பிரெட் சாப்பிடும். வனத்தில் பூச்சிகள், கிழங்குகளை சாப்பிட்டு வரும். இப்படியாக நாங்கள் அன்போடு இருந்தோம். வனப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மார்ச் 9 ஆம் தேதியன்று முகமது ஆரிஃப் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி 11 மணிக்குள் முகமது ஆரிஃப் விளக்க அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சாரஸ் க்ரேன் என்பது ஈரநிலத்தில் வாழக்கூடிய கொக்கு இனம். இது உத்தரப்பிரதேசத்தின் மாநிலப் பறவையும் கூட. இது 1972 வனப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட பறவை இனமாக பட்டியலிடப்பட்டுள்ளது. சாரஸ் க்ரேன் தான் உலகிலேயே பறக்கும் தன்மை கொண்ட மிக உயரமான பறவை. இது 150 செ.மீ உயரமானது. 

ஆனால் முகமது ஆரிஃப் தான் அந்தப் பறவையை ஒருபோதும் சிறைபிடித்து வைக்கவில்லை என்று கூறியுள்ளார். இந்நிலையில் பறவை கான்பூர் சரணாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அந்தப் பறவை உணவு உண்ணாமல் 40 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்துள்ளது. முகமது ஆரிஃபை பிரிந்த சோகத்தில் பறவை உணவை உட்கொள்ள மறுத்துள்ளது. இந்நிலையில் அந்தப் பறவைக்கு 5 கிலோ சிறிய மீன்களும் சோளமும் வழங்கப்பட்டது. ஆனால் அந்தப் பறவை அதை சாப்பிடாமல் தவிர்த்துள்ளது. அதனை சோதித்த மருத்துவர்கள் அந்தப் பறவை மன அழுத்தத்தில் இருப்பதாகக் கூறியுள்ளனர். இப்படியும் ஒரு பாசப் பிணைப்பா என்று சரணாலய ஊழியர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Crop Insurance: அப்பாடா.! டெல்டா விவசாயிகளுக்கு நிம்மதியான அறிவிப்பு; பயிர் காப்பீட்டு செய்ய அரசு அவகாசம்
அப்பாடா.! டெல்டா விவசாயிகளுக்கு நிம்மதியான அறிவிப்பு; பயிர் காப்பீட்டு செய்ய அரசு அவகாசம்
ECI on SIR Form: என்னது அதுக்குள்ளயுமா.? தமிழ்நாட்டில் 92% SIR படிவங்களை விநியோகித்து விட்டோம் - தேர்தல் ஆணையம்
என்னது அதுக்குள்ளயுமா.? தமிழ்நாட்டில் 92% SIR படிவங்களை விநியோகித்து விட்டோம் - தேர்தல் ஆணையம்
SIR-ஐ எதிர்ப்பதில் தவறில்லை! திமுக B-Team இல்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி பரபரப்பு பேச்சு!
SIR-ஐ எதிர்ப்பதில் தவறில்லை! திமுக B-Team இல்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி பரபரப்பு பேச்சு!
TVK Vijay: Gen Z வாக்காளர்களே உஷாரா இருங்க.! SIR பற்றி விஜய் வீடியோ - என்ன சொல்லியிருக்கார் பாருங்க
Gen Z வாக்காளர்களே உஷாரா இருங்க.! SIR பற்றி விஜய் வீடியோ - என்ன சொல்லியிருக்கார் பாருங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dog Bite | பிறப்புறுப்பில் கடித்த நாய்!வடமாநில இளைஞர் படுகாயம் பகீர் சிசிடிவி காட்சிகள்
”சேட்டன் வந்தல்லே”CSK-வில் இணைந்த சஞ்சு ஜடேஜா, சாம் கரனுக்கு TATA..! | CSK Trade 2026
பீகாரின் 25 வயது பாஜக MLA பாடகி To அரசியல்வாதி யார் இந்த மைதிலி தாக்கூர்? | Bihar | Maithili Thakur
Tirupattur School Caste issue | சாதி பெயரை சொல்லி திட்டிய சத்துணவு பெண்!சிறுவன் கண்ணீர் வாக்குமூலம்
Rahul vs Tejashwi Yadav | காங்கிரஸ் கவலைக்கிடம்!ஆத்திரத்தில் தேஜஸ்வி தரப்பு!தோல்விக்கான காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Insurance: அப்பாடா.! டெல்டா விவசாயிகளுக்கு நிம்மதியான அறிவிப்பு; பயிர் காப்பீட்டு செய்ய அரசு அவகாசம்
அப்பாடா.! டெல்டா விவசாயிகளுக்கு நிம்மதியான அறிவிப்பு; பயிர் காப்பீட்டு செய்ய அரசு அவகாசம்
ECI on SIR Form: என்னது அதுக்குள்ளயுமா.? தமிழ்நாட்டில் 92% SIR படிவங்களை விநியோகித்து விட்டோம் - தேர்தல் ஆணையம்
என்னது அதுக்குள்ளயுமா.? தமிழ்நாட்டில் 92% SIR படிவங்களை விநியோகித்து விட்டோம் - தேர்தல் ஆணையம்
SIR-ஐ எதிர்ப்பதில் தவறில்லை! திமுக B-Team இல்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி பரபரப்பு பேச்சு!
SIR-ஐ எதிர்ப்பதில் தவறில்லை! திமுக B-Team இல்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி பரபரப்பு பேச்சு!
TVK Vijay: Gen Z வாக்காளர்களே உஷாரா இருங்க.! SIR பற்றி விஜய் வீடியோ - என்ன சொல்லியிருக்கார் பாருங்க
Gen Z வாக்காளர்களே உஷாரா இருங்க.! SIR பற்றி விஜய் வீடியோ - என்ன சொல்லியிருக்கார் பாருங்க
IPL Released Players: RCB முதல் CSK வரை.. 10 அணியும் கழட்டிவிட்ட வீரர்கள் யார்? யார்? லிஸ்ட் இதான்!
IPL Released Players: RCB முதல் CSK வரை.. 10 அணியும் கழட்டிவிட்ட வீரர்கள் யார்? யார்? லிஸ்ட் இதான்!
Jan Suraaj Slams NDA: “கற்பனைக்கு அப்பாற்பட்ட வெற்றிக்கு ‘அது‘ தான் காரணம்“ - NDA-வை குற்றம்சாட்டும் ஜன் சுராஜ்
“கற்பனைக்கு அப்பாற்பட்ட வெற்றிக்கு ‘அது‘ தான் காரணம்“ - NDA-வை குற்றம்சாட்டும் ஜன் சுராஜ்
KKR Purse 2026:  KKR-ன் அதிரடி முடிவு! ரஸ்ஸல், வெங்கடேஷ் ஐயர் நீக்கம் !  ஏலத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்
KKR Purse 2026: KKR-ன் அதிரடி முடிவு! ரஸ்ஸல், வெங்கடேஷ் ஐயர் நீக்கம் ! ஏலத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்
China: யோவ்.. நீ எல்லாம் மனுஷனா.?! ‘பணத்துக்காக சொந்த மகனையே..‘; சீனாவில் அரங்கேறிய கொடூரம்
யோவ்.. நீ எல்லாம் மனுஷனா.?! ‘பணத்துக்காக சொந்த மகனையே..‘; சீனாவில் அரங்கேறிய கொடூரம்
Embed widget