மேலும் அறிய

கருப்பு பூஞ்சைக்கு மாத்திரை கண்டுபிடித்தது ஐஐடி!

கருப்பு பூஞ்சைக்கு மாத்திரை வடிவிலான மருந்தை ஐஐடி-ஹைதராபாத் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவலின் பாதிப்ப தினசரி 33 ஆயிரத்திற்கும் அதிகமான அளவில் பதிவாகி வருகிறது. உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் இதே அளவில்தான் பாதிப்பு பதிவாகி வருகிறது. இந்த சூழலில், நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கருப்பு பூஞ்சையின் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இந்த தொற்றின் பாதிப்பு ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிகளவில் காணப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் இந்த தொற்றின் தாக்கம் சில மாவட்டங்களில் காணப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் 400 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் இந்தியாவை அச்சுறுத்தும் கருப்பு பூஞ்சை நோய்க்கு புதிதாக ஒரு மருந்தை ஐஐடி-ஹைதராபாத் கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்தை வாய் வழியாக எடுத்து கொள்ளலாம். தற்போது கருப்பு பூஞ்சை நோய்க்கு இந்தியா முழுவதும் காலா அசார் எனப்படும் கருங்காய்ச்சலுக்கு தரப்படும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதாவது காலா அசார் நோய்க்கு தரப்படும் ஆம்போடெரிசின்-பி தான் கருப்பு பூஞ்சை நோய்க்கு தரப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் ஆம்போடெரிசின்-பி யை மாத்திரை வடிவில் தயாராக்கும் முறையை ஐஐடி ஹைதராபாத் கண்டுபிடித்துள்ளது. 

கடந்த 2019ஆம் ஆண்டு ஐஐடி-ஹைதராபாத்தில் மருத்துவர் சந்திரசேகர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு காலா அசார் நோய்க்கு மாத்திரை வடிவில் ஆம்போடெரிசின்-பி தயாரிக்க திட்டமிட்டிருந்தது. இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தது. எனினும் மாத்திரை வடிவில் இந்த மருந்தை எடுத்து கொண்டால் அது சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் பாதிப்பு ஏற்படலாம் என்ற பயம் இருந்து வந்தது. இது தொடர்பாகவும் இந்தக் குழு ஆய்வு நடத்தியது.


கருப்பு பூஞ்சைக்கு மாத்திரை கண்டுபிடித்தது ஐஐடி!

அந்த ஆய்வில் மாத்திரை வடிவில் இம்மருந்தை சாப்பிட்டால் சிறுநீரகத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்த மருந்தை மாத்திரை வடிவில் எடுத்து கொள்ளலாம் என்று ஆராய்ச்சியின் முடிவில் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தொழில்நுட்பத்தை அதிகமாக மக்களுக்கு பயன்படும் வகையில் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அளிக்க ஐஐடி-ஹைதராபாத் திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக இதற்கு ஐபிஆர் உரிமைகளை பெற போவதில்லை என்றும் தெரிவித்துள்ளது. 

இந்த தொழில்நுட்பம் மூலம் மாத்திரைகள் தயாரிக்கப்பட்டால் ஒரு மாத்திரையின் விலை 200 ரூபாய் ஆக குறையும். இதனால் தற்போது அதிகரித்து வரும் கருப்பு பூஞ்சைக்கு இந்த மாத்திரைகளை நோயாளிகள் எளிதாக வாங்கி உட்கொள்ள முடியும். எனவே தற்போதைய சூழலை கருதி இதை அரசு உடனடியாக விற்க அனுமதி அளிக்க வேண்டும் என்று ஐஐடி ஹைதராபாத் தெரிவித்துள்ளது. இந்த மருந்தை அரசு உடனடியாக ஒப்புதல் அளித்து சந்தைக்கு கொண்டு வர வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். 

Black Fungus : தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 400 பேர் பாதிப்பு - மருத்துவ கல்வி இயக்குனர் தகவல்..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking Tamil LIVE: புதுச்சேரி, காரைக்காலில் நாளை மதுக்கடை மற்றும் பார்களை மூட உத்தரவு..!
Breaking Tamil LIVE: புதுச்சேரி, காரைக்காலில் நாளை மதுக்கடை மற்றும் பார்களை மூட உத்தரவு..!
Vote Percentage : சென்னையில் ஏன் வாக்குப்பதிவு குறைந்தது? விளக்கம் சொன்ன ராதாகிருஷ்ணன்..
Vote Percentage : சென்னையில் ஏன் வாக்குப்பதிவு குறைந்தது? விளக்கம் சொன்ன ராதாகிருஷ்ணன்..
Lok Sabha Election 2024: பதிவான வாக்குப்பதிவு சதவீதத்தில் குழப்பம்? தேர்தல் ஆணையம் என்ன சொல்கிறது?
பதிவான வாக்குப்பதிவு சதவீதத்தில் குழப்பம்? தேர்தல் ஆணையம் என்ன சொல்கிறது?
Lok Sabha Election: கடந்த 4 மக்களவைத் தேர்தல்கள்! எந்த தொகுதியில் எத்தனை சதவீத வாக்குகள்? ஓர் அலசல்..
கடந்த 4 மக்களவைத் தேர்தல்கள்! எந்த தொகுதியில் எத்தனை சதவீத வாக்குகள்? ஓர் அலசல்..
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Satya Prada Sagu : மறு தேர்தல் நடக்குமா ? எங்கெல்லாம் குழப்பம் சத்யபிரதா சாகு பேட்டிAnnamalai | ”1 லட்சம் வாக்காளர் பேர் மிஸ்சிங் எனக்கு சந்தேகமா இருக்கு” அ.மலை பரபரப்பு குற்றச்சாட்டுLok Sabha Election 2024 | முடிந்தது வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு சீல் வைப்புLok Sabha Election 2024 | மனைவியுடன் வாக்களிக்க வந்த சீமான் முகத்தில் ஒரு தேஜஸ்..

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking Tamil LIVE: புதுச்சேரி, காரைக்காலில் நாளை மதுக்கடை மற்றும் பார்களை மூட உத்தரவு..!
Breaking Tamil LIVE: புதுச்சேரி, காரைக்காலில் நாளை மதுக்கடை மற்றும் பார்களை மூட உத்தரவு..!
Vote Percentage : சென்னையில் ஏன் வாக்குப்பதிவு குறைந்தது? விளக்கம் சொன்ன ராதாகிருஷ்ணன்..
Vote Percentage : சென்னையில் ஏன் வாக்குப்பதிவு குறைந்தது? விளக்கம் சொன்ன ராதாகிருஷ்ணன்..
Lok Sabha Election 2024: பதிவான வாக்குப்பதிவு சதவீதத்தில் குழப்பம்? தேர்தல் ஆணையம் என்ன சொல்கிறது?
பதிவான வாக்குப்பதிவு சதவீதத்தில் குழப்பம்? தேர்தல் ஆணையம் என்ன சொல்கிறது?
Lok Sabha Election: கடந்த 4 மக்களவைத் தேர்தல்கள்! எந்த தொகுதியில் எத்தனை சதவீத வாக்குகள்? ஓர் அலசல்..
கடந்த 4 மக்களவைத் தேர்தல்கள்! எந்த தொகுதியில் எத்தனை சதவீத வாக்குகள்? ஓர் அலசல்..
DC vs SRH: மீண்டும் அதிரடி காட்டுமா ஹைதராபாத்..? அடங்க மறுக்குமா டெல்லி..? இரு அணிகளும் இன்று மோதல்..!
மீண்டும் அதிரடி காட்டுமா ஹைதராபாத்..? அடங்க மறுக்குமா டெல்லி..? இரு அணிகளும் இன்று மோதல்..!
கோவை மக்களவை தொகுதியில் 64.42 சதவீத வாக்குப்பதிவு : முழு விபரம் இதோ..!
கோவை மக்களவை தொகுதியில் 64.42 சதவீத வாக்குப்பதிவு : முழு விபரம் இதோ..!
Strong Room என்றால் என்ன? 45 நாட்கள்  வாக்கு பெட்டிகள் எப்படி பாதுகாப்பாக இருக்கும் ? இதை தெரிஞ்சுகோங்க..
Strong Room என்றால் என்ன? 45 நாட்கள் வாக்கு பெட்டிகள் எப்படி பாதுகாப்பாக இருக்கும் ?
Preity Zinta : நெஞ்சினிலே பாடலுக்கு ஒத்திகை.. ஷாருக்கான், ப்ரீத்தி ஜிந்தா வீடியோ வைரல்..
நெஞ்சினிலே பாடலுக்கு ஒத்திகை.. ஷாருக்கான், ப்ரீத்தி ஜிந்தா வீடியோ வைரல்..
Embed widget