மேலும் அறிய

மும்பை ஐஐடி தற்கொலை...காவல்துறையால் கொடுமைப்படுத்தப்படும் பாதிக்கப்பட்ட மாணவரின் குடும்பம்...வெளியான பகீர் குற்றச்சாட்டு..!

தற்கொலை செய்து கொண்ட மாணவன் விட்டு சென்ற கடிதம் காவல்துறையிடம் சிக்கியுள்ளது. இது வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது.

நாட்டின் தலைசிறந்த கல்வி நிலைங்களாக திகழும் ஐஐடியில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. சாதியின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதாக ஐஐடி மீது தொடர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது.

ஐ.ஐ.டி மாணவர் தற்கொலை:

அதன் தொடர்ச்சியாக, மும்பையில் உள்ள ஐஐடியில் 18 வயது மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. போவாய் பகுதியில் அமைந்துள்ள ஐஐடி கல்லூரியின் மாணவர் விடுதியில் தற்கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி, விடுதியின் 7ஆவது மாடியில் இருந்து குதித்து மாணவர் தர்ஷன் சோலங்கி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இருப்பினும், ஐஐடி கல்லூரியில் பட்டியல் சாதி மாணவர்களுக்கு எதிரான பாகுபாடு காரணமாக அவர் தற்கொலைக்குத் தூண்டப்பட்டதாக மாணவர் குழுவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதற்கிடையே, வழக்கின் விசாரணை காவல்துறையிடம் இருந்து சிறப்பு விசாரணை குழுவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்கொலை செய்த மாணவரின் தந்தை பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இந்த வழக்கின் விசாரணையில் காவல்துறை தன் குடும்பத்தை கொடுமைபடுத்தியதாக கூறி மாணவரின் தந்தை மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கடிதம் எழுதியுள்ளார்.

மாணவரின் தந்தை பகீர் குற்றச்சாட்டு:

அந்த கடிதத்தில், "கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய மறுத்தனர். காவல்துறை மற்றும் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) உறுப்பினர்களின் அணுகுமுறையால் குடும்பத்தினர் முற்றிலும் அதிர்ச்சியும் மனமுடைந்தும் உள்ளனர்.

எனது மகன் இறந்த வழக்கில் மார்ச் 16 அன்று நான் அளித்த புகாரின் அடிப்படையில் எப்ஐஆர் பதிவு செய்வதற்காக நான் எனது குடும்பத்தினருடன் அகமதாபாத்தில் இருந்து போவாய் காவல் நிலையத்திற்குச் சென்றிருந்தேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

இருப்பினும், நாங்கள் கோரிக்கை விடுத்தும் போவாய் காவல் நிலையம் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய மறுத்துவிட்டது. வழக்கை விசாரிக்க எஸ்ஐடி அமைக்கப்பட்டதால், எப்ஐஆர் பதிவு செய்ய முடியாது. மேலும், தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக இந்த புகார் எஸ்ஐடிக்கு அனுப்பப்படும்.

அந்த நேரத்தில், காவல்நிலையத்தில் இருந்த காவல்துறை துணை ஆணையர் ஒத்துழைக்கவில்லை. FIR பதிவு செய்வதற்கான  கோரிக்கையை ஏற்கவில்லை" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தின் நகல், மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், மும்பை காவல்துறை ஆணையர் விவேக் பன்சல்கர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தற்கொலை செய்து கொண்ட மாணவன் விட்டு சென்ற கடிதம் காவல்துறையிடம் சிக்கியுள்ளது. இது வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. அதில், தன்னுடன் வகுப்பில் படித்த சக மாணவனே தற்கொலைக்கு காரணம் என சோலங்கி குறிப்பிட்டிருப்பதாக காவல்துறை தரப்பு தெரிவித்தது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆட்சி டிஸ்மிஸ்; அதிரடி முடிவெடுத்த ஆளுநர்; பரபரக்கும் அரசியல் களம்; நடந்தது என்ன.?
ஆட்சி டிஸ்மிஸ்; அதிரடி முடிவெடுத்த ஆளுநர்; பரபரக்கும் அரசியல் களம்; நடந்தது என்ன.?
இரவில் மாறு வேடத்தில் சென்ற பெண் கமிஷனர்.. அத்துமீறிய 40 ஆண்கள்.. கூண்டோடு கைது!
இரவில் மாறு வேடத்தில் சென்ற பெண் கமிஷனர்.. அத்துமீறிய 40 ஆண்கள்.. கூண்டோடு கைது!
Top 10 News Headlines: விஜய்க்கு மேலும் நெருக்கடி.. ஓராண்டை நிறைவு செய்த ஆபரேஷன் சிந்தூர்.. 11 மணி நிகழ்வுகள்!
Top 10 News Headlines: விஜய்க்கு மேலும் நெருக்கடி.. ஓராண்டை நிறைவு செய்த ஆபரேஷன் சிந்தூர்.. 11 மணி நிகழ்வுகள்!
West Bengal: மேற்கு வங்கத்தில் ரிசல்ட் வந்து இரண்டு நாள் முடியல.. பாஜக மாநில தலைவரின் பிஏ சுட்டுக்கொலை
West Bengal: மேற்கு வங்கத்தில் ரிசல்ட் வந்து இரண்டு நாள் முடியல.. பாஜக மாநில தலைவரின் பிஏ சுட்டுக்கொலை
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: தவெக எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா? - விதவிதமாக பரவும் தகவல்கள்.. குழப்பத்தில் மக்கள்!
TVK Vijay: தவெக எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா? - விதவிதமாக பரவும் தகவல்கள்.. குழப்பத்தில் மக்கள்!
TVK Vijay: 3 நாள் தான் டைம்.. விஜய்க்கு கெடு விதித்த ஆளுநர்.. பரபரப்பில் அரசியல் களம்!
TVK Vijay: 3 நாள் தான் டைம்.. விஜய்க்கு கெடு விதித்த ஆளுநர்.. பரபரப்பில் அரசியல் களம்!
TN 12th Result 2026: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு; 5 வழிகளில் ஈஸியா பார்க்கலாம்- எப்படி?
TN 12th Result 2026: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு; 5 வழிகளில் ஈஸியா பார்க்கலாம்- எப்படி?
விகிதாச்சார முறை வந்திருந்தால் 2026 தமிழக தேர்தல் முடிவுகள் இப்படித்தான் இருந்திருக்கும்!
விகிதாச்சார முறை வந்திருந்தால் 2026 தமிழக தேர்தல் முடிவுகள் இப்படித்தான் இருந்திருக்கும்!
TVK Vijay: ”விஜயால் ஆட்சி அமைக்க முடியாது.. 118 நிச்சயம் வேண்டும்..” ஆளுநர் சொன்ன முக்கிய தகவல்
TVK Vijay: ”விஜயால் ஆட்சி அமைக்க முடியாது.. 118 நிச்சயம் வேண்டும்..” ஆளுநர் சொன்ன முக்கிய தகவல்
TN 12th Result 2026: முதல்முறை; இனி வாட்ஸப்லயே பிளஸ் 2 தேர்வு முடிவுகளை காணலாம்- எப்படிங்க?
TN 12th Result 2026: முதல்முறை; இனி வாட்ஸப்லயே பிளஸ் 2 தேர்வு முடிவுகளை காணலாம்- எப்படிங்க?
MK Stalin: “என்ன முடிவெடுத்தாலும் கட்டுப்பட வேண்டும்“ திமுக MLA-க்களுக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவால் உச்சகட்ட பரபரப்பு
“என்ன முடிவெடுத்தாலும் கட்டுப்பட வேண்டும்“ திமுக MLA-க்களுக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவால் உச்சகட்ட பரபரப்பு
ஆட்சி டிஸ்மிஸ்; அதிரடி முடிவெடுத்த ஆளுநர்; பரபரக்கும் அரசியல் களம்; நடந்தது என்ன.?
ஆட்சி டிஸ்மிஸ்; அதிரடி முடிவெடுத்த ஆளுநர்; பரபரக்கும் அரசியல் களம்; நடந்தது என்ன.?
Embed widget