மேலும் அறிய

கடன் செலுத்தாதவர்களின் வண்டியை தூக்கினால் வங்கிகளுக்கு ஐம்பதாயிரம் ஃபைன்… உயர்நீதிமன்றம் அதிரடி!

சட்டத்தின் நிறுவப்பட்ட நடைமுறையைப் பின்பற்றாமல் எந்தவொரு நபரின் வாழ்வாதாரத்தையும் கண்ணியத்துடன் வாழும் உரிமையையும் பறிக்க முடியாது என்று பெஞ்ச் குறிப்பிட்டது.

கடனைத் திருப்பிச் செலுத்தாத உரிமையாளர்களிடமிருந்து வாகனங்களை வலுக்கட்டாயமாக எடுத்து செல்வதற்காக ஆட்களை நியமித்து வைத்து, அவற்றை கைப்பற்றும் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் செய்யும் செயல் வாழ்வாதாரத்திற்கான அடிப்படை உரிமையை மீறுவதாக பாட்னா உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

வலுக்கட்டாயமாக வண்டியை தூக்குபவர்கள்

நான் மகான் அல்ல திரைப்படத்தில் கார்த்தி இதே போன்றதொரு வேலையை செய்பவராக காட்டப்பட்டிருப்பார். அவர் செல்லும் இடத்தில் கடன் செலுத்த முடியாததன் காரணங்களை எல்லாம் கேட்டு மனமிறங்கி வண்டியை திரும்ப எடுக்காமல் வந்துவிடுவார். ஒரு வீட்டில் சென்று கிரிக்கெட் பார்த்துக்கொண்டு அமர்ந்து விடுவார். இது போன்ற வேலைக்காகவே வங்கிகள், நிதி நிறுவனங்கள், ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் ஆட்களை நியமிககும் வழக்கம் பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. கடன் வாங்கும்போதே இரண்டு சாவிகளில் ஒரு சாவியை அவர்களே வைத்துக்கொள்வதால், கடன் தொகைக்கான மாதாந்திர பணத்தை கட்ட தவறுபவர்களுடைய வாகனங்களை வலுக்கட்டாயமாக எடுத்து வரும் வேலையை அவர்கள் செய்வார்கள்.

கடன் செலுத்தாதவர்களின் வண்டியை தூக்கினால் வங்கிகளுக்கு ஐம்பதாயிரம் ஃபைன்… உயர்நீதிமன்றம் அதிரடி!

அடிப்படை கொள்கைகளுக்கு எதிரானது

இந்த வழக்கம் குறித்து பேசிய நீதிபதி ராஜீவ் ரஞ்சன் பிரசாத், ஒட்டுமொத்தமாக ஒரு கொத்து ரிட் மனுக்களை தள்ளுபடி செய்தபோது, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் உரிமைகள் அரசியலமைப்பு வரம்புகளுக்குள்ளும் சட்டத்தின்படியும் பயன்படுத்தப்பட வேண்டும் என்றார். வங்கிகளும் நிதி நிறுவனங்களும் இந்தியாவின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணாக செயல்பட முடியாது. அதாவது சட்டத்தின் நிறுவப்பட்ட நடைமுறையைப் பின்பற்றாமல் எந்தவொரு நபரின் வாழ்வாதாரத்தையும் கண்ணியத்துடன் வாழும் உரிமையையும் பறிக்க முடியாது என்று பெஞ்ச் குறிப்பிட்டது. குண்டர்கள் மற்றும் பலமானவர்களை 'மீட்பு முகவர்கள்' என்று அழைக்கப்படுவதன் மூலம் இதுபோன்ற உடைமைகளை எடுத்துக்கொள்வதை முற்றிலும் தடை செய்கிறது என்று பெஞ்ச் தனது உத்தரவில் கூறியது.

தொடர்புடைய செய்திகள்: Crime: 30 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. 8 ஆண்டுகள் நடந்த வழக்கு.. காம கொடூரனுக்கு ஆயுள்தண்டனை விதிப்பு.!

ஐம்பதாயிரம் அபராதம்

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பத்திரப்பதிவு விதிகளின்படி அவர்களின் பாதுகாப்பு நலனை பேணி, வாகனக் கடன்கள் வசூலிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியது. பீகாரில் உள்ள அனைத்து போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும், எந்தவொரு மீட்பு முகவராலும் வாகனம் வலுக்கட்டாயமாக பறிமுதல் செய்யப்படக்கூடாது என்பதை உறுதி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது. அதோடு இந்த தவறை செய்யும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு தலா ரூ.50,000 அபராதம் விதிக்க வேண்டும் என்றும் பெஞ்ச் உத்தரவிட்டது.

கடன் செலுத்தாதவர்களின் வண்டியை தூக்கினால் வங்கிகளுக்கு ஐம்பதாயிரம் ஃபைன்… உயர்நீதிமன்றம் அதிரடி!

பிறகெதற்கு சட்டம்

அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்றாமல் வங்கிகள் நிதி நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக ஒரு நபரின் வாகனத்தை பறிமுதல் செய்து அவரது வாழ்வாதாரத்திற்கும், வாழும் உரிமைக்கும் குந்தகம் விளைவிக்கும் செயலை செய்தால் பிறகு சட்டம் எதற்கு என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

வாகனத்தை திரும்பப் பெறுவதற்கான கடன் ஒப்பந்தத்தின் கீழ் பைனான்சியர் பெற்ற அதிகாரத்தின் போர்வையில், அவர்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்க அனுமதிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் மே 19 அன்று உத்தரவிட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Embed widget