மேலும் அறிய

ஜெனரல் பிபின் ராவத் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து: தொடரும் கைது நடவடிக்கை  

குஜராத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் குறித்து அவதூறாக செய்தி வெளியிட்டதாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

குஜராத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் குறித்து அவதூறாக செய்தி வெளியிட்டதாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட நபர் குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டம், ராஜூலா தாலுகா, பெராய் கிராமத்தைச் சேர்ந்த ஷிவபாய் ராம் என சைபர் கிரைம் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 

அவர் ஏற்கெனவே ஃபேஸ்புக்கில் செய்த பதிவுகளுக்காகத்தான் கைது செய்யப்பட்டார் எனவும் அது அவதூறான தொனியைக் கொண்டிருந்தது; சமீபத்திய கருத்துக்கள் வெளிவந்தபோதுதான் வெளிச்சத்திற்கு வந்ததாக காவல்துறை தெளிவுபடுத்தியது.


ஜெனரல் பிபின் ராவத் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து: தொடரும் கைது நடவடிக்கை  

எனினும், ஹெலிகாப்டர் விபத்தில் 12 பேருடன் இறந்த ஜெனரல் ராவத்துக்கு எதிராக அவர் கூறியதாகக் கூறப்படும் கருத்துக்கள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. 

இதுகுறித்து காவல்துறை உதவி ஆணையர் ஜிதேந்திர யாதவ் கூறுகையில், “ராம் தனது முந்தைய பதிவுகளுக்காக கைது செய்யப்பட்டார்.  அவர் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் இந்து தெய்வங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்டார். அவர் மீது 2 பிரிவுகளின் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

153-ஏ பிரிவின் கீழ் இருவேறு தரப்புக்கிடையே பகைமையை தூண்டுதல், 295-ஏ பிரிவின் கீழ் மதத்தை அவமதிப்பது மற்றும் மத உணர்வுகளை சீர்குலைக்கும் நோக்கத்தில் செயல்படுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்” என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “ஜெனரல் பிபின் ராவத் குறித்து சில இழிவான பதிவுகளை பகிர்ந்ததால் குற்றம் சாட்டப்பட்டவர் எங்கள் ரேடாரின் கீழ் வந்தார். அவரது டைம்லைனை ஸ்கேன் செய்ததில், அவர் இந்து கடவுள்கள் மற்றும் தெய்வங்களைப் பற்றி ஆட்சேபனைக்குரிய பதிவுகளை பகிர்ந்துள்ளார் என்பதை நாங்கள் கண்டறிந்தோம். கடந்த காலங்களில் அவர் தனது ஃபேஸ்புக் பதிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியுள்ளார். 


ஜெனரல் பிபின் ராவத் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து: தொடரும் கைது நடவடிக்கை  

இதையடுத்துதான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த பின்னர், சைபர் கிரைம் அதிகாரிகள் ராமை அவரது சொந்த இடமான அம்ரேலியில் இருந்து பிடித்து இங்கு அழைத்து வந்தனர். விசாரணையில் ராம் அரசியலில் ஈடுபாடு கொண்டவர் எனவும் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை பகிர்வதன் மூலம் வெளிச்சத்தில் இருக்க விரும்பியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

ஷிவபாய் ராம் 2010 - 2014 ஆம் ஆண்டுகளில் தனது கிராமத்தில் தலையாரியாக பணியாற்றினார். வரும் ஆண்டுகளில் தலையாரி ஆக வேண்டும் என்ற எண்ணத்தால் சமூக வலைதளங்கள் மூலம் முக்கிய பிரச்னைகளை எழுப்பி மக்களின் கவனத்தை ஈர்க்க முயன்றுள்ளார்” என ஜிதேந்திர யாதவ் தெரிவித்தார். 

இதேபோல், தமிழகத்தில் பிபின் ராவத் குறித்து அவதூறு கருத்து பதிவிட்டதாக யூடியூபர் மாரிதாஸ் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 


ஜெனரல் பிபின் ராவத் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து: தொடரும் கைது நடவடிக்கை  

இதனிடையே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஜெனரல் பிபின் ராவத் மறைவை கொண்டாடும்வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த 21 வயதான ஜவாத் கான் என்பவரை டான்க் போலீசார் கைது செய்துள்ளனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: “தமிழ்நாடு காங்கிரஸில் ஊழல்“, பினராயி விஜயன் மகளுக்கு சிக்கல், அமெரிக்காவிற்கு ஈரான் பதிலடி - 11 மணி செய்திகள்
“தமிழ்நாடு காங்கிரஸில் ஊழல்“, பினராயி விஜயன் மகளுக்கு சிக்கல், அமெரிக்காவிற்கு ஈரான் பதிலடி - 11 மணி செய்திகள்
DK Shivakumar: சவால்களை வென்ற சாணக்கியர்: 'கிங் மேக்கர்' டூ முதலமைச்சர்... டி.கே.சிவக்குமாரின் அசுரப்பயணம்!
DK Shivakumar: சவால்களை வென்ற சாணக்கியர்: 'கிங் மேக்கர்' டூ முதலமைச்சர்... டி.கே.சிவக்குமாரின் அசுரப்பயணம்!
’’நானே பொறுப்பு; சிபிஎஸ்இ ஆன்ஸ்கிரீன் மதிப்பீட்டில் பிழைகள் சரிசெய்யப்படும்’’ உறுதியளித்த கல்வி அமைச்சர்
’’நானே பொறுப்பு; சிபிஎஸ்இ ஆன்ஸ்கிரீன் மதிப்பீட்டில் பிழைகள் சரிசெய்யப்படும்’’ உறுதியளித்த கல்வி அமைச்சர்
Siddaramaiah:
Siddaramaiah: "எனக்கு எந்த ஏமாற்றமும் இல்லை..தலைமை சொன்னதால் ராஜினாமா" கண்ணீருடன் விடைபெற்ற சித்தராமையா
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
Udhayanidhi Stalin: “நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
“நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Nirmal Kumar: ''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Embed widget