மேலும் அறிய

ரூ. 21 ஆயிரம் கோடி மதிப்பிலான ஹெராயின் கடத்தப்பட்ட விவகாரம்: ஜூன் மாதமும் கடத்தப்பட்டதா?

கடந்த ஜூன் மாதத்தில் சுதாகரின் டிரேடிங் கம்பெனிக்கு ஆப்கானிஸ்தானிலிருந்து முகப்பவுடர் என்ற பெயரில் பார்சல்கள் வந்ததாக கூறப்படுகிறது.

குஜராத் மாநிலத்தில் ரூ. 21 ஆயிரம் கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருட்கள் சிக்கியது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஜூன் மாதத்திலும் கடத்தலில் ஈடுபட்டார்களா என்பது குறித்து வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கடந்த செப்டம்பர் 23ம் தேதி ஆப்கானிஸ்தானிலிருந்து ஈரான் வழியாக குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்துக்கு 21,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 2,988 கிலோ போதைப்பொருட்கள் கடத்தப்பட்டுள்ளன. ‘முகத்திற்கு பூச பயன்படுத்தப்படும் பவுடர்’ எனும் பெயரில் போதைப்பொருட்கள் கடத்தப்பட்டுள்ளன. அதனைத்தொடர்ந்து போதைப்பொருள் பார்சலில் குறிப்பிடப்பட்டிரு முகவரிக்கு சென்று அங்கு வசித்து வந்த துர்கா பூரண வைஷாலி என்பவரை கைது செய்தனர். சென்னை கொளப்பாக்கம் பகுதியில் வசித்து வந்த அவரது கணவர் சுதாகர் என்பவரையும் கைது செய்தனர். போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக எட்டுக்கும் மேற்பட்டோரை இதுவரை கைது செய்துள்ளனர். மேலும், டெல்லியில் வசிக்கும் ஆப்கானிதானை சேர்ந்த சிலரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


ரூ. 21 ஆயிரம் கோடி மதிப்பிலான ஹெராயின் கடத்தப்பட்ட விவகாரம்: ஜூன் மாதமும் கடத்தப்பட்டதா?

இந்நிலையில் போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிரேடிங் கம்பெனியின் வைஷாலியின் தாயாரின் பெயரில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து 
 சுதாகர் மற்றும் அவரது மனைவி வைஷாலி ஆகியோரது சொந்த ஊரில் உள்ள அவர்களது உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சுதாகர் பல ஆண்டுகளாகவே சரக்கு மற்றும் போக்குவரத்து துறையில் பணியாற்றி வந்த நிலையில் அவருடன் நிறுவனங்களில் பணிபுரிந்தவர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விசாரணைகளின்போது கடந்த ஜூன் மாதத்திலும் சுதாகரின் டிரேடிங் கம்பெனிக்கு ஆப்கானிஸ்தானிலிருந்து முகப்பவுடர் என்ற பெயரில் பார்சல்கள் வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த பார்சல்களிலும் ஹெராயின் மறைக்கப்பட்டு கொண்டுவரப்பட்டதா என்பது குறித்து தற்போது வருவாய் புலனாய்வுத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறையில் அடைக்கப்பட்ட சுதாகர், வைஷாலி ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

ஆப்கானிஸ்தான் உலகின் மிகப்பெரிய ஹெராயின் உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது. மேலும் உலக நாடுகளுக்கு 80 முதல் 90 சதவீதம் அங்கிருந்துதான் சப்ளை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அங்கு தாலிபான்கள் நாட்டை கைப்பற்றிய பிறகு, ஹெராயின் உற்பத்தி முற்றிலுமாக நிறுத்தப்படும் என அதன் தலைவர் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போதும் சப்ளை தொடர்வது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. வருவாய்ப் புலனாய்வுத்துறையிடமிருந்து கிடைத்த பல்வேறு தகவல்களின்  அடிப்படையில் விசாரணை நடத்த அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தை அதானி குழுமம் நிர்வகித்து வருவதால் போதைப்பொருள் கடத்தலில் அதானி குழுமத்திற்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வியெழுப்பியிருந்தனர். இதனைத் தொடர்ந்து அதானி குழுமம் வெளியிட்ட அறிக்கையில் எங்களுக்கும் இதற்கும் எந்த தொடர்புமே இல்லை என தெரிவித்தது குறிப்பிடதக்கது. 

தலைப்பு செய்திகள்

8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
தூக்க மாத்திரை கொடுத்து கொலை.. குளியலறை அடியில் உடல் புதைப்பு.. பாபநாசம் ஸ்டைல் சம்பவம்!
தூக்க மாத்திரை கொடுத்து கொலை.. குளியலறை அடியில் உடல் புதைப்பு.. பாபநாசம் ஸ்டைல் சம்பவம்!
மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன்.. தீ வைத்து கொளுத்திய மைத்துனர் - வீடியோ வைரல்
மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன்.. தீ வைத்து கொளுத்திய மைத்துனர் - வீடியோ வைரல்

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
வானிலை அலர்ட்: தமிழகத்தில் ஜூலை 12 வரை கொட்டப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களுக்கு ? முழு விபரம் உள்ளே!
வானிலை அலர்ட்: தமிழகத்தில் ஜூலை 12 வரை கொட்டப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களுக்கு ? முழு விபரம் உள்ளே!
Minister Keerthana : ’What is your father?’ அமைச்சர் கீர்த்தனாவிற்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்..!
'English ல பேச தெரியாதா?’ புதிய சர்ச்சையில் அமைச்சர் கீர்த்தனா
திடீரென சரிந்த நெல் மலை! மூட்டைகளுக்குள் சிக்கி பெண் பணியாளர் துடிதுடித்து பலி; தஞ்சையில் பரபரப்பு!
திடீரென சரிந்த நெல் மலை! மூட்டைகளுக்குள் சிக்கி பெண் பணியாளர் துடிதுடித்து பலி; தஞ்சையில் பரபரப்பு!
TTV JOIN ADMK : அதிமுகவில் மீண்டும் டிடிவி.! முடிவெடுக்கும் எடப்பாடி.? இன்றைய கூட்டத்தில் நடந்த திடீர் ட்விஸ்ட்
அதிமுகவில் மீண்டும் டிடிவி.! முடிவெடுக்கும் எடப்பாடி.? இன்றைய கூட்டத்தில் நடந்த திடீர் ட்விஸ்ட்
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
Embed widget