மேலும் அறிய

Gujarat: மணல் ஏற்றி சென்ற லாரி.. திடீரென உடைந்து விழுந்த பாலம்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்..!

அவ்வப்போது ஆங்காங்கே பழைய கட்டடங்கள், பாலங்கள் உள்ளிட்டவை மழை, புயல், கட்டடத்தின் உறுதியற்ற தன்மை ஆகியவற்றின் காரணமாக தாக்குப்பிடிக்க முடியாமல் சேதமடைந்து வருவது வழக்கம்.

குஜராத் மாநிலத்தில் உள்ள பழைய பாலம் ஒன்று திடீரென இடிந்து விழுந்த நிலையில் அதில் நின்றிருந்த வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்து சேதமடைந்தது. 

உலகளவில் அவ்வப்போது ஆங்காங்கே பழைய கட்டடங்கள், பாலங்கள் உள்ளிட்டவை மழை, புயல், கட்டடத்தின் உறுதியற்ற தன்மை ஆகியவற்றின் காரணமாக தாக்குப்பிடிக்க முடியாமல் சேதமடைந்து வருவது வழக்கம். இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அரசு முறையான பராமரிப்பு தொடர்பான நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாகவும் உள்ளது. இதனால் வீண் உயிர்பலி, பொருட்சேதம் உள்ளிட்டவற்றை தடுக்க முடியும் என்பதே அனைவரது நம்பிக்கையாகவும் உள்ளது. 

இப்படியான நிலையில் நேற்று (செப்டம்பர் 24) மாலை குஜராத்தின் சுரேந்திரநகர் மாவட்டத்தில் போகாவோ ஆற்றின் குறுக்கே செல்லும் பழைய பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. தேசிய நெடுஞ்சாலையை அம்மாவட்டத்தில் வாத்வான் நகருக்கு அருகில் உள்ள  சுரா தாலுகாவுடன் இணைக்கும் போகாவோ ஆற்றுப் பாலம் 40 ஆண்டுகள் பழமையானது. இதனால் பாலத்தின் உறுதியற்ற தன்மையால் இதில் கனரக வாகனங்கள் நுழைவதற்கு கடுமையான தடைகளை மாவட்ட நிர்வாகம் விதித்திருந்தது. 

அதையும் மீறி அவ்வபோது நேரம் மிச்சமாகிறது என பல கனரக வாகனங்கள் இதில் சென்று வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் ஆற்றின் மேல் செல்லும் பாலம் என்பதால் பொதுமக்களும் செல்ஃபி எடுக்க, நடைபயிற்சி மேற்கொள்ள என அதனைப் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் 40 டன் எடைக் கொண்ட மணல் ஏற்றி வந்த டம்பர் லாரி இந்த வழியாக செல்ல முயன்றது. ஆனால் எதிர்பாராதவிதமாக ஆற்றுப்பாலத்தின் நடுப்பகுதி இடிந்து விழுந்தது. 

இதில் லாரியுடன் அந்த பாலத்தை கடக்க முயன்ற 2 மோட்டார் சைக்கிள் ஆகியவை ஆற்றுக்குள் விழுந்தது. இதில் 10 பேர் காயமடைந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், தீயணைப்பு படையினர் மற்றும் அரசு அதிகாரிகள் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனர். 

இதனிடையே செய்தியாளர்களிடம் விபத்து குறித்து பேசிய சுரேந்திரநகர் மாவட்ட ஆட்சியர் கே.சி.சம்பத், “ நான்கு தசாப்தங்களின் நினைவுச்சின்னமாக இருக்கும் இந்த பாலம் மாநில சாலை மற்றும் கட்டிடங்கள் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. பாலத்தின் உறுதியற்ற தன்மை காரணமாக புதிய கட்டிடம் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அப்படியான சமயத்தில் பாலத்தில் கனரக வாகன போக்குவரத்தைத் தடுக்க எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அதனையும் மீறி லாரி சென்றுள்ளதாக தெரிவித்தார். 

இந்த பால விபத்து கடந்த ஆண்டு அக்டோபர் 30 அன்று குஜராத்தின் மோர்பியில் மச்சு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பழமையான தொங்கு பாலம்  இடிந்து விழுந்ததை நினைவுப்படுத்துவதாக பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த விபத்தில் 141 பேர் பலியான நிலையில் பாலம் புதிதாக புனரமைக்கப்பட்ட நிலையில் இடிந்து விழுந்தது ஒட்டுமொத்த இந்திய மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
Trump Karoline Leavitt: பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
ABP Premium

வீடியோ

ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
Trump Karoline Leavitt: பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
Trump Deadline to Zelensky: தண்ணி காட்டும் ஜெலன்ஸ்கி; கிறிஸ்துமஸ் வரை கெடு விதித்த ட்ரம்ப் - என்ன நடக்கப் போகுதோ.?!
தண்ணி காட்டும் ஜெலன்ஸ்கி; கிறிஸ்துமஸ் வரை கெடு விதித்த ட்ரம்ப் - என்ன நடக்கப் போகுதோ.?!
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
Embed widget