மேலும் அறிய

Government bans drugs: மக்களே உஷார்..! ஆபத்தான 14 மருந்துகளுக்கு தடை - மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

பொதுமக்களின் சிகிச்சைக்கு பயன்படுத்த தகுதியற்ற 14 மருந்துகளுக்கு தடை விதித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

பொதுமக்களின் சிகிசைக்கு பயன்படுத்த தகுதியற்ற 14 மருந்துகளுக்கு தடை விதித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நிபுணர் குழுவின் பரிந்துரைகளை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு நடவடிக்கை:

 நிம்சுலைடு மற்றும் பாராசிட்டமால் டிஸ்பர்சிபிள் மாத்திரைகள் மற்றும் குளோபெனிரமைன் மாலேட் மற்றும் கோடீன் சிரப் உள்ளிட்ட 14 நிலையான டோஸ் கலவை (fixed-dose combination) மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த பட்டியலில், பொதுவான நோய்த்தொற்றுகள், இருமல் மற்றும் காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகளும் இடம்பெற்றுள்ளன. 

தடை செய்யப்பட்ட மருந்துகளின் விவரங்கள்:

இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் “நிம்சுலைடு + பாராசிட்டமால் சிதறக்கூடிய மாத்திரைகள், குளோர்பெனிரமைன் மாலேட் + கோடீன் சிரப், ஃபோல்கோடின் + ப்ரோமெதாசின், அமோக்ஸிசிலின் + ப்ரோம்ஹெக்சின் மற்றும் ப்ரோம்ஹெக்சின் + டெக்ஸ்ட்ரோமெத்தோர்பன் + அம்மோனியம் + குளோரைடு + மென்தால்,  பாராசிட்டமால் + ப்ரொமெக்ஸின் + ஃபெனிலெஃப்ரின்,  ப்ரோமொலின் + குளோர்பெனிரமைன் + குய்பெனெசின் மற்றும் சல்பூட்டமால் + ப்ரோம்ஹெக்சின். நிபுணர் குழுவின் பரிந்துரைகளை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. FDC எனப்படும்  இந்த நிலையான டோஸ் கலவையை சிகிச்சைக்குக்கு பயன்படுத்துவதில் எந்தவித நியாயமும் இல்லை, இது மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்றும் நிபுணர் குழு கூறியதை ஏற்று” இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அரசு தரப்பு விளக்கம்:

நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்று பெரிய பொது நலன் கருதி, 1940 இன் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின் 26 A பிரிவின் கீழ் இந்த FDC இன் உற்பத்தி, விற்பனை அல்லது விநியோகத்தை தடை செய்வது அவசியம்.

"மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட மருந்துகளை நோயாளிகளின் எந்தவொரு பயன்பாட்டிற்கும் அல்லது கட்டுப்பாட்டிற்கும் அனுமதி அளிப்பது நியாயமானதல்ல. அதேசமயம், நிபுணர் குழு மற்றும் மருந்துகளின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், மத்திய அரசு திருப்தி அடைந்துள்ளது. எனவே மேற்குறிப்பிட்ட மருந்துகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகம் ஆகியவற்றை தடைசெய்யும் வகையில் கட்டுப்படுத்துவது அவசியமானது மற்றும் பயனுள்ளது" என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

FDC மருந்துகள் ஒரு நிலையான விகிதத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட செயலில் உள்ள மருந்துப் பொருட்களின் (APIகள்) கலவையைக் கொண்டவை. 2016 ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு, அறிவியல் தரவு இல்லாமல் நோயாளிகளுக்கு விற்கப்படுவதாகக் கூறியதைத் தொடர்ந்து, 344 மருந்துகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகத்திற்கு தடை விதித்து அரசாங்கம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

இந்திய ரயில்வே புதிய அறிவிப்பு!.. கடைசி நேர டிக்கெட் புக்கிங்கிற்கு அனுமதி!.விபரம் இதோ..
இந்திய ரயில்வே புதிய அறிவிப்பு!.. கடைசி நேர டிக்கெட் புக்கிங்கிற்கு அனுமதி!.விபரம் இதோ..
வணிக சிலிண்டர் விலை குறைந்தது... ஆனால் வீட்டு LPG விலையில் மாற்றமா? இதோ பதில்!!!
வணிக சிலிண்டர் விலை குறைந்தது... ஆனால் வீட்டு LPG விலையில் மாற்றமா? இதோ பதில்!!!
Domestic Violence: மனைவியின் மென்டல் டார்ச்சர்.. ஒரே வருடத்தில் 27 வயது இளைஞர் மரணம் - லாஸ்ட்ல ட்விஸ்ட்
மனைவியின் மென்டல் டார்ச்சர்.. ஒரே வருடத்தில் 27 வயது இளைஞர் மரணம் - லாஸ்ட்ல ட்விஸ்ட்
Commercial Cooking Gas Price: காலையிலேயே குஷி.! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
காலையிலேயே குஷி.! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget