மேலும் அறிய

Government bans drugs: மக்களே உஷார்..! ஆபத்தான 14 மருந்துகளுக்கு தடை - மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

பொதுமக்களின் சிகிச்சைக்கு பயன்படுத்த தகுதியற்ற 14 மருந்துகளுக்கு தடை விதித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

பொதுமக்களின் சிகிசைக்கு பயன்படுத்த தகுதியற்ற 14 மருந்துகளுக்கு தடை விதித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நிபுணர் குழுவின் பரிந்துரைகளை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு நடவடிக்கை:

 நிம்சுலைடு மற்றும் பாராசிட்டமால் டிஸ்பர்சிபிள் மாத்திரைகள் மற்றும் குளோபெனிரமைன் மாலேட் மற்றும் கோடீன் சிரப் உள்ளிட்ட 14 நிலையான டோஸ் கலவை (fixed-dose combination) மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த பட்டியலில், பொதுவான நோய்த்தொற்றுகள், இருமல் மற்றும் காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகளும் இடம்பெற்றுள்ளன. 

தடை செய்யப்பட்ட மருந்துகளின் விவரங்கள்:

இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் “நிம்சுலைடு + பாராசிட்டமால் சிதறக்கூடிய மாத்திரைகள், குளோர்பெனிரமைன் மாலேட் + கோடீன் சிரப், ஃபோல்கோடின் + ப்ரோமெதாசின், அமோக்ஸிசிலின் + ப்ரோம்ஹெக்சின் மற்றும் ப்ரோம்ஹெக்சின் + டெக்ஸ்ட்ரோமெத்தோர்பன் + அம்மோனியம் + குளோரைடு + மென்தால்,  பாராசிட்டமால் + ப்ரொமெக்ஸின் + ஃபெனிலெஃப்ரின்,  ப்ரோமொலின் + குளோர்பெனிரமைன் + குய்பெனெசின் மற்றும் சல்பூட்டமால் + ப்ரோம்ஹெக்சின். நிபுணர் குழுவின் பரிந்துரைகளை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. FDC எனப்படும்  இந்த நிலையான டோஸ் கலவையை சிகிச்சைக்குக்கு பயன்படுத்துவதில் எந்தவித நியாயமும் இல்லை, இது மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்றும் நிபுணர் குழு கூறியதை ஏற்று” இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அரசு தரப்பு விளக்கம்:

நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்று பெரிய பொது நலன் கருதி, 1940 இன் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின் 26 A பிரிவின் கீழ் இந்த FDC இன் உற்பத்தி, விற்பனை அல்லது விநியோகத்தை தடை செய்வது அவசியம்.

"மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட மருந்துகளை நோயாளிகளின் எந்தவொரு பயன்பாட்டிற்கும் அல்லது கட்டுப்பாட்டிற்கும் அனுமதி அளிப்பது நியாயமானதல்ல. அதேசமயம், நிபுணர் குழு மற்றும் மருந்துகளின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், மத்திய அரசு திருப்தி அடைந்துள்ளது. எனவே மேற்குறிப்பிட்ட மருந்துகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகம் ஆகியவற்றை தடைசெய்யும் வகையில் கட்டுப்படுத்துவது அவசியமானது மற்றும் பயனுள்ளது" என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

FDC மருந்துகள் ஒரு நிலையான விகிதத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட செயலில் உள்ள மருந்துப் பொருட்களின் (APIகள்) கலவையைக் கொண்டவை. 2016 ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு, அறிவியல் தரவு இல்லாமல் நோயாளிகளுக்கு விற்கப்படுவதாகக் கூறியதைத் தொடர்ந்து, 344 மருந்துகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகத்திற்கு தடை விதித்து அரசாங்கம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

எப்படியெல்லாம் வளர்த்திருப்பாரு.. அப்பா இறப்புக்கு வராத மகள்கள்.. விளாசிய நெட்டிசன்கள்!
எப்படியெல்லாம் வளர்த்திருப்பாரு.. அப்பா இறப்புக்கு வராத மகள்கள்.. விளாசிய நெட்டிசன்கள்!
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?
இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?
எல்பிஜி தட்டுப்பாடு: எரிவாயு சேமிப்புக்கு சிலிண்டரில் ரூ.18 கூடுதல் கட்டணமா?விபரம் இதோ..
எல்பிஜி தட்டுப்பாடு: எரிவாயு சேமிப்புக்கு சிலிண்டரில் ரூ.18 கூடுதல் கட்டணமா?விபரம் இதோ..

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Embed widget