மேலும் அறிய

அடுத்தடுத்து தாக்கப்படும் காந்தி சிலைகள்...! குவியும் அரசியல்வாதிகளின் கண்டனங்கள்..!

கனடாவில் தாக்கப்பட்ட ஓரிரு தினங்களில் பஞ்சாபிலும் காந்தி சிலை தாக்கப்பட்டதற்கு அரசியல்வாதிகள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் தேசத்தந்தை எனப் போற்றப்படுபவர் மகாத்மா காந்தி. சுதந்திர போராட்டத்திற்கு அவர் ஆற்றிய பங்கை பறைசாற்றும் விதமாக நாடு முழுவதும் அவரை பாராட்டி சிலைகளும், மணி மண்டபங்களும் உண்டு. பஞ்சாப் மாநிலத்திலும் பல்வேறு பகுதிகளில் காந்திக்கு சிலை உண்டு.

பஞ்சாபில் உள்ளது அமைந்துள்ள பதிண்டா மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ளது ராமமண்டி பகுதி. இந்த பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் காந்தி நின்ற வடிவில் சிலை ஒன்று உள்ளது. அந்த பூங்காவை உள்ளூர் நகராட்சித்துறையினர் பராமரித்து வந்தனர்.


அடுத்தடுத்து தாக்கப்படும் காந்தி சிலைகள்...! குவியும் அரசியல்வாதிகளின் கண்டனங்கள்..!

இந்த நிலையில், நேற்று காலையில் பூங்காவிற்கு வந்த பொதுமக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே இருந்த காந்தி சிலை முற்றிலும் சேதப்படுத்தப்பட்டு, சுக்குநூறாக உடைக்கப்பட்டு இருந்தது. மிகவும் மோசமாக தாக்கப்பட்டு சுக்குநூறாக காந்தி சிலை உடைக்கப்பட்டிருப்பதை கண்டு பூங்காவிற்கு வந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கும், உள்ளூர் அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. காந்தியின் சிலையை மோசமாக தாக்கிய மர்மநபர்கள் அவரது தலையை மட்டும் எடுத்துச் சென்றுள்ளனர். பூங்கா முழுவதும் தேடியும் காந்தியின் சிலை மட்டும் கிடைக்கவில்லை.


அடுத்தடுத்து தாக்கப்படும் காந்தி சிலைகள்...! குவியும் அரசியல்வாதிகளின் கண்டனங்கள்..!

சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரி ஹர்ஜோத்சிங் மன் கூறும்போது, பூங்காவில் விளக்குகள் மோசமாக இருப்பதாகவும், பூங்காவை பாதுகாப்பதற்கு என்று தனிப்பட்ட பாதுகாவலர்கள் யாரும் இல்லையென்றும் கூறினார். அப்பகுதியில் வசிப்பவர்கள் அதிகாரிகளில் அலட்சியத்தாலும், கவனக்குறைவாலும்தான் இந்த சம்பவம் நடைபெற்றதாக குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் அசோக்குமார் சிங்லா பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளதாக குற்றம்சாட்டினார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு கனடா நாட்டில் இருந்த காந்தி சிலையும் சுக்குநூறாக தாக்கப்பட்டிருந்தது. அந்த நாட்டில் உள்ள விஷ்ணு மந்திர் பகுதியில் இருந்த காந்தியின் சிலை தகாத வார்த்தைகளால் எழுதி அவரை கொச்சைப்படுத்தியிருந்தனர்.  கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவிலும் காந்தி சிலை கடுமையாக தாக்கப்பட்டு தகர்த்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து காந்தி சிலை இருக்கும் இடங்களில் விரும்பத்தாத நிகழ்வுகள் நடைபெறுவற்கு காந்தியவாதிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கனடாவில் இருந்த காந்தியின் சிலைக்கு கீழே காலிஸ்தான் உள்ளிட்ட வார்த்தை மட்டுமின்றி தகாத வார்த்தைகளும் இடம்பெற்றிருந்தன. அங்கு சம்பவம் நடைபெற்ற ஓரிரு தினங்களில் பஞ்சாபிலும் காந்தி சிலை தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand | Amitshah on Mallikarjun Kharge | ”சபதம் போட்டீங்களே கார்கே! இது ஓவர் PERFORMANCE” அமித்ஷா தடாலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Embed widget