மேலும் அறிய

"ரயில்வே துறையை அழித்து விட்டார்கள்" - முன்னாள் ரயில்வேதுறை அமைச்சர்கள் கடும் சாடல்..!

ஒடிசா ரயில் விபத்தை முன்வைத்து முன்னாள் ரயில்வே அமைச்சர்கள் கடுமையாக சாடியுள்ளனர்.

ஒடிசா மாநிலம் பாலசோரில் நடந்த விபத்தில் மூன்று ரயில்கள் சிக்கியதில் குறைந்தபட்சம் 261 பேர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 900க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான ரயில் விபத்தாக இது பார்க்கப்படுகிறது.

நேற்று இரவு 7 மணி அளவில் யஷ்வந்த்பூர் - ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு, அருகில் இருந்த தண்டவாளத்தில் ஏறியது. அப்போது, எதிர்திசையில் இருந்து வந்து கொண்டிருந்த ஷாலிமார் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மீது தடம் புரண்ட யஷ்வந்த்பூர் - ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் மோதியது.

சம்பவ இடத்தில் பிரதமர் மோடி ஆய்வு:

இதையடுத்து, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் சில பெட்டிகள், மேலும் சரக்கு ரயில் மீது மோதியது. இதனால், மொத்தம் 17 பெட்டிகள் தடம் புரண்டது. பிரதமர் மோடி தொடங்கி ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், மாவட்ட ஆட்சிவர்  வரை மீட்பு பணிகளை நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள், பலத்த காயம் மற்றும் இலேசான காயம் அடைந்தவர்களுக்கு ரயில்வே அமைச்சகமும், மத்திய அரசும் நிவாரணத் தொகை அறிவித்துள்ளது. ரயில் விபத்து காரணமாக சம்பந்தப்பட்ட வழித்தடத்தில் செல்லும் 30க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யபட்டுள்ளன. பல ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. ரயில் விபத்து தொடர்பாக உயர்மட்ட குழு விசாரணை நடத்த ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

"விபத்து தடுப்பு கருவி எங்கே போனது"

இந்நிலையில், ஒடிசா ரயில் விபத்தை முன்வைத்து முன்னாள் ரயில்வே அமைச்சர்கள் கடுமையாக சாடியுள்ளனர். கடந்த 1999ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரையில், வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராக பதவி வகித்த மம்தா பானர்ஜி, விபத்து தடுப்பு கருவி எங்கே போனது என கேள்வி எழுப்பியுள்ளார்.

"நான் ரயில்வே அமைச்சராக இருந்தபோது விபத்து தடுப்பு கருவி செயல்பாட்டை அறிமுகப்படுத்தினேன். மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் முன்பே சொல்கிறேன். விபத்து தடுப்பு கருவி பொருத்தாததுதான் இந்த கோரமண்டல் ரயில் விபத்துக்கே காரணம்" என மம்தா தெரிவித்துள்ளார்.

"அலட்சியமே காரணம்"

டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில், 2004ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையில், ரயில்வே அமைச்சராக பதவி வகித்த லாலு பிரசாத் யாதவ், அரசின் அலட்சியமே விபத்துக்கு காரணம் என குற்றம்சாட்டியுள்ளார். "இந்திய ரயில்வே துறையை அழித்து விட்டார்கள். மிகப்பெரிய அலட்சியமே ஒடிசா ரயில் விபத்துக்கு காரணம்" என லாலு தெரிவித்துள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையில், காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தில் ரயில்வே துறை அமைச்சராக பதவி வகித்த மல்லிகார்ஜுன கார்கே ரயில் விபத்து வேதனை தெரிவித்துள்ளார். "நமது சிறந்த பிரதமர் மற்றும் ரயில்வே அமைச்சரிடம் நான் பல கேள்விகளைக் கேட்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் ஏன் நடக்கின்றன. இதற்கு யார் பொறுப்பு என்று அவர்கள் பதில் சொல்ல வேண்டும்" என கார்கே தெரிவித்துள்ளார்.

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

வகுப்புகளில் ப வடிவ இருக்கை முறை; இத்தனை பிரச்சினைகள் ஏற்படுமா? எழும் எதிர்ப்புகள்!
வகுப்புகளில் ப வடிவ இருக்கை முறை; இத்தனை பிரச்சினைகள் ஏற்படுமா? எழும் எதிர்ப்புகள்!
Watch Video: இன்ஸ்பெக்டர் அராஜகம்.. ஆண், பெண் வித்தியாசம் பார்க்காமல் அடி, திட்டு - நீங்களே பாருங்க
Watch Video: இன்ஸ்பெக்டர் அராஜகம்.. ஆண், பெண் வித்தியாசம் பார்க்காமல் அடி, திட்டு - நீங்களே பாருங்க
பரிதாப நிலையில் ஓபிஎஸ்! பழைய பன்னீர்செல்வமா வருவாரா? எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரு..
பரிதாப நிலையில் ஓபிஎஸ்! பழைய பன்னீர்செல்வமா வருவாரா? எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரு..
Abhimanyu Easwaran: கருண் நாயரை விடுங்க.. அபிமன்யு ஈஸ்வரனையும் யோசிங்க! இந்திய அணியில் வஞ்சிக்கப்படும் தமிழன் - ஒரு சான்ஸ் ப்ளீஸ்
Abhimanyu Easwaran: கருண் நாயரை விடுங்க.. அபிமன்யு ஈஸ்வரனையும் யோசிங்க! இந்திய அணியில் வஞ்சிக்கப்படும் தமிழன் - ஒரு சான்ஸ் ப்ளீஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbumani Vs Ramadoss | பாஜக கூட்டணியில் அன்புமணி.. ரூட்டை மாற்றும் ராமதாஸ் பக்கா ஸ்கெட்ச்!
Nainar Nagendran | ”சோறு கூட போடுறோம் ஓட்டு போட மாட்டோம்” அதிர்ச்சியில் உறைந்த  நயினார் நாகேந்திரன்
மயிலாடுதுறை சுற்றுலா மாளிகை அவசரகதியில் திறந்த அமைச்சர்! பொதுமக்கள் ஆத்திரம்
தவெக உடன் கூட்டணி.. காங்கிரஸ் பக்கா ஸ்கெட்ச்! ஓகே சொல்வாரா ராகுல்?
800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வகுப்புகளில் ப வடிவ இருக்கை முறை; இத்தனை பிரச்சினைகள் ஏற்படுமா? எழும் எதிர்ப்புகள்!
வகுப்புகளில் ப வடிவ இருக்கை முறை; இத்தனை பிரச்சினைகள் ஏற்படுமா? எழும் எதிர்ப்புகள்!
Watch Video: இன்ஸ்பெக்டர் அராஜகம்.. ஆண், பெண் வித்தியாசம் பார்க்காமல் அடி, திட்டு - நீங்களே பாருங்க
Watch Video: இன்ஸ்பெக்டர் அராஜகம்.. ஆண், பெண் வித்தியாசம் பார்க்காமல் அடி, திட்டு - நீங்களே பாருங்க
பரிதாப நிலையில் ஓபிஎஸ்! பழைய பன்னீர்செல்வமா வருவாரா? எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரு..
பரிதாப நிலையில் ஓபிஎஸ்! பழைய பன்னீர்செல்வமா வருவாரா? எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரு..
Abhimanyu Easwaran: கருண் நாயரை விடுங்க.. அபிமன்யு ஈஸ்வரனையும் யோசிங்க! இந்திய அணியில் வஞ்சிக்கப்படும் தமிழன் - ஒரு சான்ஸ் ப்ளீஸ்
Abhimanyu Easwaran: கருண் நாயரை விடுங்க.. அபிமன்யு ஈஸ்வரனையும் யோசிங்க! இந்திய அணியில் வஞ்சிக்கப்படும் தமிழன் - ஒரு சான்ஸ் ப்ளீஸ்
Chennai Power Cut(16.07.25): சென்னைல நாளைக்கு எங்கெங்க பவர் கட் தெரியுமா.? இதோ விவரம், படிச்சுட்டு பிளான் பண்ணுங்க
சென்னைல நாளைக்கு எங்கெங்க பவர் கட் தெரியுமா.? இதோ விவரம், படிச்சுட்டு பிளான் பண்ணுங்க
என்னுடைய உயிருக்கு ஆபத்து! ஆதவ் அர்ஜுனா போலீசில் புகார்! பின்னணி என்ன?
என்னுடைய உயிருக்கு ஆபத்து! ஆதவ் அர்ஜுனா போலீசில் புகார்! பின்னணி என்ன?
ரூ.35 ஆயிரம் ஊதியம்.. கிராம உதவியாளர் பணி- 134 இடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
ரூ.35 ஆயிரம் ஊதியம்.. கிராம உதவியாளர் பணி- 134 இடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
MK Stalin: மகளிர் உரிமைத் தொகை உங்களுக்கு கண்டிப்பா வேணுமா.? இத மட்டும் பண்ணுங்க - ஸ்டாலினே தந்த அப்டேட்
மகளிர் உரிமைத் தொகை உங்களுக்கு கண்டிப்பா வேணுமா.? இத மட்டும் பண்ணுங்க - ஸ்டாலினே தந்த அப்டேட்
Embed widget