மேலும் அறிய

Prison Adventure : 500 ரூபாய்க்கு ஜெயில் அனுபவம்.. உடனே கிளம்புங்க, ஜாலியா ஜெயிலுக்கு போங்க.. என்னம்மா யோசிக்கறாய்ங்க?

பரிந்துரைக்கப்பட்ட நபர்களை சிறை வளாகத்தில் சில மணிநேரம் செலவிட அனுமதிக்குமாறு மூத்த அதிகாரிகளிடமிருந்து சிறைக்கு அடிக்கடி உத்தரவுகள் வந்தது

வழக்கமான சுற்றுலா மற்றும் விடுமுறைகள் உங்களுக்கு சலித்துவிட்டதா? உங்களுக்கு பழக்கப்பட்ட ஒரு வட்டத்தை விட்டு நீங்கள் வெளியே வர விரும்பினால் உங்களுக்கான ஒரு மறக்கமுடியாத சுற்றுலா ஐடியா காத்திருக்கிறது. உத்தரகாண்ட் மாநில சிறைத்துறை உங்களுக்கான தனித்துவமான சுற்றுலா அனுபவத்தை வழங்குகிறது. அங்கே உள்ள ஹல்த்வானி சிறையானது சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு இரவுக்கு வெறும் 500 ரூபாய்க்கு உண்மையான "சிறை அனுபவத்தை" வழங்குகிறது. பிரபல தினசரி நாளிதழில் வெளிவந்துள்ள செய்தியின்படி, சிறைச்சாலையில் ஒரு இரவைக் கழிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்காக சிறை நிர்வாகம் சிறையின் கைவிடப்பட்ட பகுதியை மறுசீரமைப்பு செய்துள்ளது. சிறைச்சாலையின் துணை சிறை கண்காணிப்பாளர் சதீஷ் சுகிஜா கூறுகையில், "பரிந்துரைக்கப்பட்ட நபர்களை சிறை வளாகத்தில் சில மணிநேரம் செலவிட அனுமதிக்குமாறு மூத்த அதிகாரிகளிடமிருந்து சிறைக்கு அடிக்கடி உத்தரவுகள் வந்ததாகவும் அதன்படி இந்த நடவடிக்கை என்றும் தெரிவித்தார்.

இவர்களில் பலர், தங்கள் ஜாதகத்தில் உள்ள தோஷத்தில் இருந்து விடுபட, குறிப்பிட்ட காலத்தை சிறையில் கழிக்குமாறு அவர்களது ஜோதிடர்களால் அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது, இதன் கீழ் ஒருவரின் ஜாதகத்தில் உள்ள கிரக நிலை வரவிருக்கும் காலத்தில் அவர் சிறைக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறது என சொல்லப்படும். இதற்கான தோஷத்தைப்போக்க அவர்கள் ஒருநாள் சிறையில் தங்குவார்கள். இருப்பினும், புதுப்பிக்கப்பட்ட வசதி சிறையில் உள்ள சூழலை உணர விரும்பும் அனைவருக்கும் கிடைக்கும்.


Prison Adventure : 500 ரூபாய்க்கு ஜெயில் அனுபவம்.. உடனே கிளம்புங்க, ஜாலியா ஜெயிலுக்கு போங்க.. என்னம்மா யோசிக்கறாய்ங்க?

சதீஷ் சுகிஜா இந்த திட்டத்தை சிறைத்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரலுக்கு பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது, அவர் இந்த யோசனையை பாராட்டியது மட்டுமல்லாமல், இது தொடர்பான விரிவான அறிக்கையை அனுப்ப சுகிஜாவுக்கு உத்தரவிட்டுள்ளார். சுற்றுலாத்தளமாகப் பார்வையிடும் வகையில் நாட்டின் ஒரே ஒரு சிறைச்சாலை மட்டுமே இருந்து வந்தது. அந்தமான் தீவுகளின் காலாபானி சிறைதான் அது. ஆனால் அங்கு தங்குவதற்கு எவ்வித அனுமதியும் இல்லை.

அந்த வகையில் சிறை சுற்றுலா பயணிகள் தங்கும் வகையில் மாற்றப்படுவது முதல்முறையாக உத்தரகாண்ட்டில்தான் நடக்கிறது. என்னம்மா யோசிக்கறாய்ங்க!.

கடந்த ஜூலை மாதம் உத்தரகாண்ட் அரசு மக்களுக்கு மாடு மேய்க்கும் வேலை வழங்குவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க மாநில அரசுகளும் முயற்சிகளை எடுத்து வருகின்றன. தொழிற்சாலைகள், ஐடி கம்பெனிகள் மூலம் சில மாநிலங்கள் வேலை வாய்ப்புகளை உருவாக்க முயற்சி செய்துகொண்டிருக்கும் வேளையில், உத்தரகாண்ட் அரசு தங்கள் பாணியில் பசு மாட்டின் மூலம் வேலை வாய்ப்பை வழங்க முடிவு செய்தது.

உத்தரகாண்ட் விலங்குகள் நலவாரியத்தின் கூட்டம் விலங்குகள் நல அமைச்சர் சவுரப் பகுகுனா தலைமையில் ஜூலை மாதம் நடைபெற்றது. அப்போது, கைவிடப்பட்ட விலங்குகளின் நலனைக் காக்கும் வகையில் அதற்கான ஆண்டு ஒதுக்கீடான 2.5 கோடி ரூபாயில் இருந்து, 15 கோடி ரூபாயாக உயர்த்த மாநில அரசு முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

உத்தரப்பிரதேசத்தைத் தொடர்ந்து உத்தரகாண்டிலும், பசுக்களுக்கு தீவனம் வழங்க ஒரு நாளைக்கான தொகையையும் உயர்த்தியுள்ளது. ஒரு பசுவிற்கு தீவனத்திற்காக ஒருநாளைக்கு ரூ.6 செலவிடப்பட்ட நிலையில், புதிய உயர்வின் படி ஒரு நாளைக்கு 30 ரூபாய் செலவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் தொடக்கப் பகுதியாக கிராமப்புறங்களைச் சேர்ந்த மக்களை கைவிடப்பட்ட பசுமாடுகள் பராமரிக்கும் பணியில் ஈடுபடுத்த உள்ளதாக அமைச்சர் பகுகுனா தெரிவித்திருந்தார். மேலும், பசுக்கள் மற்றும் மற்ற விலங்குகள் கடத்தப்படுவதைத் தடுக்க உத்தரகாண்டில் உள்ள 13 மாவட்டங்களுக்கு தலா 12.5 லட்சம் ரூபாய் வழங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறியிருந்தார்.

தலைப்பு செய்திகள்

நீட் தேர்வு விவகாரம்: டெல்லியில் போராட்டம் தீவிரம்.. தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்? முழு விவரம்!
நீட் தேர்வு விவகாரம்: டெல்லியில் போராட்டம் தீவிரம்.. தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்? முழு விவரம்!
PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் கனிமொழி..தமிழ்நாடு நீட் எதிர்ப்பு பற்றி கம்பீரமான பேச்சு
டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் கனிமொழி..தமிழ்நாடு நீட் எதிர்ப்பு பற்றி கம்பீரமான பேச்சு
உயில் மூலம் சொத்து மாற்றும்போது தகராறு ஏற்பட்டால் ப்ரோபேட் பெறுவது எப்படி? விபரம் இதோ..
உயில் மூலம் சொத்து மாற்றும்போது தகராறு ஏற்பட்டால் ப்ரோபேட் பெறுவது எப்படி? விபரம் இதோ..

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tuticorin Prisoner: தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” காவல்துறை விளக்கம்
தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” - காவல்துறை விளக்கம்
5 ஸ்டார் ரேட்டிங்.. மாருதி டிசையர், விக்டோரிஸ், இன்விக்டோ வரிசையில் இணைந்த புது எஸ்யுவி!
5 ஸ்டார் ரேட்டிங்.. மாருதி டிசையர், விக்டோரிஸ், இன்விக்டோ வரிசையில் இணைந்த புது எஸ்யுவி!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
டாப் மைலேஜ் பைக்.. ஹீரோ நிறுவனம் 7 ஆயிரம் அதிரடி விலை குறைப்பு; இப்போ ரூ.59,998-தான்- என்ன மாடல்?
டாப் மைலேஜ் பைக்.. ஹீரோ நிறுவனம் 7 ஆயிரம் அதிரடி விலை குறைப்பு; இப்போ ரூ.59,998-தான்- என்ன மாடல்?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
Jana Nayagan Review: FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
Embed widget