மேலும் அறிய

Prison Adventure : 500 ரூபாய்க்கு ஜெயில் அனுபவம்.. உடனே கிளம்புங்க, ஜாலியா ஜெயிலுக்கு போங்க.. என்னம்மா யோசிக்கறாய்ங்க?

பரிந்துரைக்கப்பட்ட நபர்களை சிறை வளாகத்தில் சில மணிநேரம் செலவிட அனுமதிக்குமாறு மூத்த அதிகாரிகளிடமிருந்து சிறைக்கு அடிக்கடி உத்தரவுகள் வந்தது

வழக்கமான சுற்றுலா மற்றும் விடுமுறைகள் உங்களுக்கு சலித்துவிட்டதா? உங்களுக்கு பழக்கப்பட்ட ஒரு வட்டத்தை விட்டு நீங்கள் வெளியே வர விரும்பினால் உங்களுக்கான ஒரு மறக்கமுடியாத சுற்றுலா ஐடியா காத்திருக்கிறது. உத்தரகாண்ட் மாநில சிறைத்துறை உங்களுக்கான தனித்துவமான சுற்றுலா அனுபவத்தை வழங்குகிறது. அங்கே உள்ள ஹல்த்வானி சிறையானது சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு இரவுக்கு வெறும் 500 ரூபாய்க்கு உண்மையான "சிறை அனுபவத்தை" வழங்குகிறது. பிரபல தினசரி நாளிதழில் வெளிவந்துள்ள செய்தியின்படி, சிறைச்சாலையில் ஒரு இரவைக் கழிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்காக சிறை நிர்வாகம் சிறையின் கைவிடப்பட்ட பகுதியை மறுசீரமைப்பு செய்துள்ளது. சிறைச்சாலையின் துணை சிறை கண்காணிப்பாளர் சதீஷ் சுகிஜா கூறுகையில், "பரிந்துரைக்கப்பட்ட நபர்களை சிறை வளாகத்தில் சில மணிநேரம் செலவிட அனுமதிக்குமாறு மூத்த அதிகாரிகளிடமிருந்து சிறைக்கு அடிக்கடி உத்தரவுகள் வந்ததாகவும் அதன்படி இந்த நடவடிக்கை என்றும் தெரிவித்தார்.

இவர்களில் பலர், தங்கள் ஜாதகத்தில் உள்ள தோஷத்தில் இருந்து விடுபட, குறிப்பிட்ட காலத்தை சிறையில் கழிக்குமாறு அவர்களது ஜோதிடர்களால் அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது, இதன் கீழ் ஒருவரின் ஜாதகத்தில் உள்ள கிரக நிலை வரவிருக்கும் காலத்தில் அவர் சிறைக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறது என சொல்லப்படும். இதற்கான தோஷத்தைப்போக்க அவர்கள் ஒருநாள் சிறையில் தங்குவார்கள். இருப்பினும், புதுப்பிக்கப்பட்ட வசதி சிறையில் உள்ள சூழலை உணர விரும்பும் அனைவருக்கும் கிடைக்கும்.


Prison Adventure : 500 ரூபாய்க்கு ஜெயில் அனுபவம்.. உடனே கிளம்புங்க, ஜாலியா ஜெயிலுக்கு போங்க.. என்னம்மா யோசிக்கறாய்ங்க?

சதீஷ் சுகிஜா இந்த திட்டத்தை சிறைத்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரலுக்கு பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது, அவர் இந்த யோசனையை பாராட்டியது மட்டுமல்லாமல், இது தொடர்பான விரிவான அறிக்கையை அனுப்ப சுகிஜாவுக்கு உத்தரவிட்டுள்ளார். சுற்றுலாத்தளமாகப் பார்வையிடும் வகையில் நாட்டின் ஒரே ஒரு சிறைச்சாலை மட்டுமே இருந்து வந்தது. அந்தமான் தீவுகளின் காலாபானி சிறைதான் அது. ஆனால் அங்கு தங்குவதற்கு எவ்வித அனுமதியும் இல்லை.

அந்த வகையில் சிறை சுற்றுலா பயணிகள் தங்கும் வகையில் மாற்றப்படுவது முதல்முறையாக உத்தரகாண்ட்டில்தான் நடக்கிறது. என்னம்மா யோசிக்கறாய்ங்க!.

கடந்த ஜூலை மாதம் உத்தரகாண்ட் அரசு மக்களுக்கு மாடு மேய்க்கும் வேலை வழங்குவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க மாநில அரசுகளும் முயற்சிகளை எடுத்து வருகின்றன. தொழிற்சாலைகள், ஐடி கம்பெனிகள் மூலம் சில மாநிலங்கள் வேலை வாய்ப்புகளை உருவாக்க முயற்சி செய்துகொண்டிருக்கும் வேளையில், உத்தரகாண்ட் அரசு தங்கள் பாணியில் பசு மாட்டின் மூலம் வேலை வாய்ப்பை வழங்க முடிவு செய்தது.

உத்தரகாண்ட் விலங்குகள் நலவாரியத்தின் கூட்டம் விலங்குகள் நல அமைச்சர் சவுரப் பகுகுனா தலைமையில் ஜூலை மாதம் நடைபெற்றது. அப்போது, கைவிடப்பட்ட விலங்குகளின் நலனைக் காக்கும் வகையில் அதற்கான ஆண்டு ஒதுக்கீடான 2.5 கோடி ரூபாயில் இருந்து, 15 கோடி ரூபாயாக உயர்த்த மாநில அரசு முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

உத்தரப்பிரதேசத்தைத் தொடர்ந்து உத்தரகாண்டிலும், பசுக்களுக்கு தீவனம் வழங்க ஒரு நாளைக்கான தொகையையும் உயர்த்தியுள்ளது. ஒரு பசுவிற்கு தீவனத்திற்காக ஒருநாளைக்கு ரூ.6 செலவிடப்பட்ட நிலையில், புதிய உயர்வின் படி ஒரு நாளைக்கு 30 ரூபாய் செலவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் தொடக்கப் பகுதியாக கிராமப்புறங்களைச் சேர்ந்த மக்களை கைவிடப்பட்ட பசுமாடுகள் பராமரிக்கும் பணியில் ஈடுபடுத்த உள்ளதாக அமைச்சர் பகுகுனா தெரிவித்திருந்தார். மேலும், பசுக்கள் மற்றும் மற்ற விலங்குகள் கடத்தப்படுவதைத் தடுக்க உத்தரகாண்டில் உள்ள 13 மாவட்டங்களுக்கு தலா 12.5 லட்சம் ரூபாய் வழங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறியிருந்தார்.

தலைப்பு செய்திகள்

இந்திய ரயில்வே புதிய அறிவிப்பு!.. கடைசி நேர டிக்கெட் புக்கிங்கிற்கு அனுமதி!.விபரம் இதோ..
இந்திய ரயில்வே புதிய அறிவிப்பு!.. கடைசி நேர டிக்கெட் புக்கிங்கிற்கு அனுமதி!.விபரம் இதோ..
வணிக சிலிண்டர் விலை குறைந்தது... ஆனால் வீட்டு LPG விலையில் மாற்றமா? இதோ பதில்!!!
வணிக சிலிண்டர் விலை குறைந்தது... ஆனால் வீட்டு LPG விலையில் மாற்றமா? இதோ பதில்!!!
Domestic Violence: மனைவியின் மென்டல் டார்ச்சர்.. ஒரே வருடத்தில் 27 வயது இளைஞர் மரணம் - லாஸ்ட்ல ட்விஸ்ட்
மனைவியின் மென்டல் டார்ச்சர்.. ஒரே வருடத்தில் 27 வயது இளைஞர் மரணம் - லாஸ்ட்ல ட்விஸ்ட்
Commercial Cooking Gas Price: காலையிலேயே குஷி.! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
காலையிலேயே குஷி.! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget