மேலும் அறிய

இந்தியாவிலேயே முதல் 5ஜி இணைக்கப்பட்ட ஆம்புலன்ஸ் சேவை… கொல்கத்தாவில் அறிமுகப்படுத்தியது அப்போலோ!

நோயாளியின் நிலையை அறிக்கையாக வெகு விரைவில், மருத்துவமனைக்கு அனுப்புவதோடு, 5G நெட்வொர்க்குடன் கூடிய கேமராக்கள் மூலம், மருத்துவமனையில் இருந்து நேரடியாக நோயாளியை காணவும், வழிகாட்டவும் முடியும்.

இந்தியாவிலேயே முதன்முறையாக, 5G நெட்வொர்க்குடன் கூடிய ஆம்புலன்ஸ்கள் கொல்கத்தாவில் அறிமுகப்படுத்தப் படுகின்றன. இவை அவசரகால சிகிச்சை வழங்கப்படும் முறையையே முற்றிலும் மாற்றி புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், இந்த ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போதே நோயாளிக்கு முக்கியமான பல சிகிச்சைகளை அளிக்கும் வகையிலும் உருவாக்க பட்டுள்ளது.

5ஜி நெட்வொர்க்குடன் கூடிய ஆம்புலன்ஸ்

இந்த சேவையை அறிமுகப்படுத்திய அப்பல்லோ மருத்துவமனை, மற்ற நகரங்களுக்கும் இதை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இது மருத்துவ சேவைக்கான அணுகலை மாற்றும் என்றும், அவசரகால சூழ்நிலைகளில் உயிர்களைக் காப்பாற்றும் என்று அப்போலோ மருத்துவமனை கூறுகிறது. இதற்காகவே வடிவமைக்கப்பட்ட, அதிநவீன 5G-இணைக்கப்பட்ட ஆம்புலன்ஸில் லேட்டஸ்ட் மருத்துவ உபகரணங்கள், நோயாளியின் கண்காணிப்பு பயன்பாடுகள் உள்ளன. மேலும் இதில் உள்ள டெலிமெட்ரி சாதனங்கள் நோயாளியின் நிலையை அறிக்கையாக வெகு விரைவில், மருத்துவமனைக்கு அனுப்பும். கூடுதலாக, இது அதிவேக 5G நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்ட உள் கேமராக்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் இருந்து நேரடியாக நோயாளியை காணவும் முடியும்.

இந்தியாவிலேயே முதல் 5ஜி இணைக்கப்பட்ட ஆம்புலன்ஸ் சேவை… கொல்கத்தாவில் அறிமுகப்படுத்தியது அப்போலோ!

என்ன பயன்?

அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் எண்டர்பிரைசஸ் லிமிடெட்டின் தலைவர்-மருத்துவமனை பிரிவு டாக்டர் கே ஹரி பிரசாத் கூறுகையில், மருத்துவமனையின் ICU அறையில் என்ன செய்ய முடியுமோ அதை ஆம்புலன்சிலும் செய்யலாம் என்றார். "அப்போலோ மருத்துவமனை எப்போதுமே சமூகத்திற்கு எளிதான அணுகலை வழங்க தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வருகின்றன. 5G இணைப்பை கொண்ட ஆம்புலன்ஸ்கள் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தைப் பயன்படுத்தி தீவிர நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை வழங்குகின்றன. இது நோயாளி இருக்கும் இடத்திலிருந்து மருத்துவமனைக்குச் செல்லும் பயணத்திலேயே, மேம்பட்ட சிகிச்சையை வழங்குகிறது. மற்றும் ஐசியு அறை போல செயல்படும் இது உண்மையிலேயே ஒரு மிகப்பெரிய முயற்சி. இது விலைமதிப்பற்ற உயிர்களை காப்பாற்ற ஒரு முக்கிய கருவியாக இருக்கும்," என்று அவர் மேலும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்: Odisha Train Accident: ஒடிசா ரயில் விபத்தில் 280 உயிர்கள் பறிபோன சோகம்.. ஜனாதிபதி, பிரதமர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

கோல்டன் ஹவரை நேரத்தை மிச்சப்படுத்தும்

ஒரு ஆபத்தான நோயாளி மருத்துவமனைக்குச் செல்லும் போது, ஒவ்வொரு நொடியும் அவரது நிலையில் வித்தியாசம் ஏற்படலாம், அப்போது, 5G இணைப்பு கொண்ட ஆம்புலன்ஸ், மருத்துவமனையில் உள்ள ஐசியு அறையின் நீட்டிப்பாக செயல்படுகிறது. இதனால, கோல்டன் ஹவர் என்று அழைக்கப்படும் ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சையைத் தொடங்க உதவுகிறது. கோல்டன் ஹவர் நேரத்தை மிச்சப்படுத்த, நோயாளிக்கு அருகிலுள்ள ஆம்புலன்ஸ் விரைவாக சென்றடைவதை உறுதிசெய்ய, 5G நெட்வொர்க் கொண்ட ஆம்புலன்ஸின், லைவ் லொகேஷனை மருத்துவமனையின் கண்ட்ரோல் ரூமிற்கு அனுப்புகிறது. மேலும், ஆம்புலன்ஸ் நோயாளியின் முழுமையான டெலிமெட்ரி தரவை, நிகழ்நேரத்தில் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு காண்பிக்கிறது.

இந்தியாவிலேயே முதல் 5ஜி இணைக்கப்பட்ட ஆம்புலன்ஸ் சேவை… கொல்கத்தாவில் அறிமுகப்படுத்தியது அப்போலோ!

லைவ் கேமரா

இந்த தொழில்நுட்பம், மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களை விரைவாக என்ன செய்ய வேண்டும் என்ற முடிவெடுக்க அனுமதிக்கிறது மற்றும் ஆம்புலன்ஸில் இருக்கும் துணை மருத்துவர்களுக்கு, பயணத்தின் போதே, தேவையான உதவிகளை வழங்கவும் வழி செய்கிறது. நோயாளியை வந்தவுடன் சிறப்பாக நிர்வகிக்கவும் கோல்டன் ஹவர்ஸை மிச்சப்படுத்தவும் இது மருத்துவமனை ஊழியர்களை தயார்படுத்துகிறது. லைவ் கேமராவில் பார்க்க முடியும் என்பதால், ஆம்புலன்ஸில் உள்ள மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்கள், தேவைப்பட்டால், அடிப்படை நடைமுறைகளை மேற்கொள்வதற்காக மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கொண்ட மருத்துவமனையில் உள்ள ER சிறப்பு மருத்துவர்களுடன் ஒத்துழைக்க அதனை பயன்படுத்தலாம். நடைமுறையைச் செயல்படுத்தவும், விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றவும் மருத்துவர்கள், ஆம்புலன்சில் உள்ள துணை மருத்துவருக்கு வழிகாட்ட முடியும். கொல்கத்தாவின் அப்போலோ மருத்துவமனைகளின் மருத்துவ சேவையின் இயக்குனர் டாக்டர் சுரிந்தர் சிங் பாட்டியா, அப்பல்லோ மருத்துவமனைகளுக்கான இந்த சிறிய நடவடிக்கை எதிர்காலத்தில் சுகாதாரத்துறையில் ஒரு மாபெரும் பாய்ச்சலாக இருக்கும் என்றார்.

தலைப்பு செய்திகள்

டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
சாதிவாரி கணக்கெடுப்பு செயலியில் சாதி பட்டியலை இணைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு அன்புமணி அவசர கடிதம்!
சாதிவாரி கணக்கெடுப்பு செயலியில் சாதி பட்டியலை இணைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு அன்புமணி அவசர கடிதம்!
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க அன்புமணி மோடிக்கு அதிரடி கோரிக்கை!
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க அன்புமணி மோடிக்கு அதிரடி கோரிக்கை!
சிலிண்டர் புக் பண்ண முடியாதா? வாடிக்கையாளர்களே மிஸ் பண்ணாம படிங்க!
சிலிண்டர் புக் பண்ண முடியாதா? வாடிக்கையாளர்களே மிஸ் பண்ணாம படிங்க!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Embed widget