Video: பெங்களூரூவில் அடுத்தடுத்து பற்றி எரிந்த 3 பேருந்துகள்; பதறியடித்த ஓடிய மக்கள்.. நடந்தது என்ன?
பெங்களூரூ டிப்போவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மூன்று பேருந்துகள் அடுத்தடுத்து பற்றி எரிந்தது.

பெங்களூரூ டிப்போவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மூன்று பேருந்துகள் அடுத்தடுத்து பற்றி எரிந்தது.
பெங்களூரூ நகரில் உள்ள மைசூர் சாலையில் தனியார் சொகுசுப்பேருந்துகள் நிறுத்திவைக்கபப்டும் தனியார் டிப்போ உள்ளது. இன்று (டிசம்பர், 27) மதியம் ஒரு பேருந்தில் ஏற்பட்ட தீயினை, டிப்போவில் உள்ள ஊழியர்கள் அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் தீ அதிவேகமாக அருகில் இருந்த 2 பேருந்துகளிலும் பரவியது. இதன் பின்னர் தீயணைப்புத் துறைக்குக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைணைப்புத் துறையினர் ஒரு மணி நேரத்துக்கும் மேல் போராடி தீயினை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால் கோடிக்கணக்கிலான பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த டிப்போவில் 20 பேருந்துகள் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இதன் பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
View this post on Instagram
Before You Go
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
ட்ரெண்டிங் செய்திகள்






















