மேலும் அறிய

Emergency 1975: எமர்ஜென்சி காலத்தில் சிறைவாசம் அனுபவித்த இந்திய பிரதமர்கள் - யார் அந்த 4 பேர்?

48 Years of Emergency: இந்தியாவில் பாதுகாப்புக்கு ஆபத்து வந்துவிட்டதாக சொல்லி 1975 ஜூன் 25- அன்று அவசரநிலை அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் பாதுகாப்புக்கு ஆபத்து வந்துவிட்டதாக சொல்லி 1975 ஜூன் 25- அன்று அவசரநிலை அறிவிக்கப்பட்டது. உள்நாட்டு குழப்பங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள் பின்னர், நாட்டின் பிரதமர்களானவர்களை பற்றி இக்கட்டுரையில் காணலாம். 

எமர்ஜென்சி காலம்

1966-ம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமராக பதவியேற்ற நாள் தொடங்கி, இந்திரா வல்லமை படைத்த தலைவராகவே இருந்தார். 1969-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டபோது, காங்கிரஸ் தலைமையிலான காங்கிரஸ் அதிக பலம் மிக்கதாக இருந்தது. பின்னர்,1971-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இந்த தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக இந்திராவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த ராஜ் நரேன் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், இந்திரா காந்தி தேர்தலில் பெற்ற வெற்றி செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்தது. இதை தொடர்ந்து, இந்திரா காந்தி பதவியிலிருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மொரார்ஜி தேசாய்,ஹிவத் ராம் கிருபாளனி, அடல் பிகாரி வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் தலைமையில் போராட்டங்கள் வெடித்தன. இதனால், எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டது. அப்போது, நாடு முழுவதும் பல்வேறு தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். நெருக்கடி நிலை, 1977 மார்ச் 21- ம் தேதி விலக்கிக்கொள்ளப்பட்டது. அதே ஆண்டு ஜனவரி 23-ம் தேதி புதிய தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டார் இந்திரா காந்தி. 

மொரார்ஜி தேசாய், செளத்ரி சரண் சிங், விஸ்வநாத் பிரதாப் சிங், அடல் பிகாரி வாஜ்பாய் உள்ளிட்டோர் கைது செய்யபப்பட்ட தலைவர்களாவர். பின்னாளில், இவர்கள் நாட்டின் பிரதமர்களாக பொறுப்பேற்றனர். 

மொரார்ஜி தேசாய்:

மொரார்ஜி தேசாய்  முதல் காங்கிரஸ் அல்லாத பிரதமராக பொறுப்பேற்றார். எமர்ஜென்சியின் போது, காங்கிரஸின் மூத்த தலைவரான மொரார்ஜி தேசாய் மாறுபட்ட கருத்து கொண்டிருந்ததால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்குப் பிறகு, நாட்டில் தேர்தல் நடந்தபோது, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து தேசாய் தலைமையில் தேர்தலில் போட்டியிட்டன. ஜனதா தல் கட்சியுடன் கூட்டணி வைத்தார். இத்தேர்தலில், 30 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சியில் இருந்து வெளியேறி, முதல் முறையாக மொரார்ஜி தேசாய் தலைமையில் நாட்டில் காங்கிரஸ் அல்லாத அரசு அமைந்தது. ஆனால், உள்கட்சி பூசல் காரணமாக இந்த அரசு இரண்டே ஆண்டுகளில் கவிழ்ந்தது. இந்திராவின் ஆதரவுடன் சவுத்ரி சரண் சிங் பிரதமரானார்.

சரண்சிங்:

எமர்ஜென்சி காலத்தில் சிறை சென்ற மற்றொரு முக்கிய தலைவர் உத்திரபிரதேச முன்னாள் முதல்வர் செளத்ரி சரண் சிங். மொரார்ஜி தேசாய் அரசு கவிழ்ந்த பிறகு, அவரது  அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த சவுத்ரி சரண் சிங், இந்திரா காந்தியின் ஆதரவுடன் 28 ஜூலை 1979 அன்று பிரதமராக பதவியேற்றார். ஆனால் அவரது அரசும், நீண்ட காலம் நீடிக்கவில்லை. மேலும் காங்கிரஸின் ஆதரவை வாபஸ் பெற்ற பின்னர் 14 ஜனவரி 1980 அன்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

வி.பி.சிங்:

1980-ல் சரண் சிங் ஆட்சிக்குப் பிறகு நாட்டில் மீண்டும் பொதுத் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்து சுமார் 10 ஆண்டுகள் ஆட்சி செய்தது.  விஸ்வநாத் பிரதாப் சிங் பிரதமரானார். ஆனால் 1980-ல் ஜனா சங் கட்சியின் ஆதரவை வாபஸ் பெற்றதால் அவரது அரசு கவிழ்ந்தது. அப்போது, எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ராஜீவ் காந்தியின் ஆதரவுடன், உத்தரபிரதேச மாநிலம், பல்லியாவில் இருந்து, இதுவரை கேபினட் அமைச்சராக இல்லாத சந்திரசேகர், நாட்டின் பிரதமரானார். இவர், எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தியால் சிறையில் அடைக்கப்பட்டார்.

வாஜ்பாய்:

எமர்ஜென்சி காலத்தில் அதிக காலம் சிறையில் இருந்த தலைவர் பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன உறுப்பினரான அடல் பிஹாரி வாஜ்பாய். அன்றைய காலத்தில் மிகவும் பிரபலமான முகமாக இருந்தார். 1975-க்குப் பிறகு நாட்டில் காங்கிரஸ் அல்லாத அனைத்து அரசுகளும் அமைந்தன. அவர்களில் வாஜ்பாய் அமைச்சராகியிருக்க வேண்டும். வாஜ்பாய் முதலில் 1996 - 13 நாள் பிரதமரானார். அதன் பிறகு அவர் 19 மார்ச் 1998 முதல் அக்டோபர் 12, 1999 வரை நாட்டின் பிரதமராக இருந்தார். ஆனால் ஜெயலலிதா தனது ஆதரவை வாபஸ் பெற்றதால் அவரது அரசாங்கம் வீழ்ந்தது. பின்னர் 1999 இல், தேசிய ஜன்நாயக கூட்டணியின் கீழ் வாஜ்பாய் தலைமையில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: மாணவர்களுக்கு பாராட்டு விழா.. அதிகாலையிலேயே மண்டபத்துக்கு வந்த தவெக தலைவர் விஜய்
மாணவர்களுக்கு பாராட்டு விழா.. அதிகாலையிலேயே மண்டபத்துக்கு வந்த தவெக தலைவர் விஜய்
IND Vs SA T20 Worldcup Final: 10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா - கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?
10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா-கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?
Delhi Rain: மிதக்கும் தலைநகர் டெல்லி - கொட்டும் கனமழை, வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்
Delhi Rain: மிதக்கும் தலைநகர் டெல்லி - கொட்டும் கனமழை, வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்
Kamalhaasan Salary : அடேங்கப்பா! இந்தியன் 2 படத்துக்கு கமல்ஹாசன் வாங்கிய சம்பள பணம் இவ்வளவா?
அடேங்கப்பா! இந்தியன் 2 படத்துக்கு கமல்ஹாசன் வாங்கிய சம்பள பணம் இவ்வளவா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: மாணவர்களுக்கு பாராட்டு விழா.. அதிகாலையிலேயே மண்டபத்துக்கு வந்த தவெக தலைவர் விஜய்
மாணவர்களுக்கு பாராட்டு விழா.. அதிகாலையிலேயே மண்டபத்துக்கு வந்த தவெக தலைவர் விஜய்
IND Vs SA T20 Worldcup Final: 10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா - கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?
10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா-கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?
Delhi Rain: மிதக்கும் தலைநகர் டெல்லி - கொட்டும் கனமழை, வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்
Delhi Rain: மிதக்கும் தலைநகர் டெல்லி - கொட்டும் கனமழை, வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்
Kamalhaasan Salary : அடேங்கப்பா! இந்தியன் 2 படத்துக்கு கமல்ஹாசன் வாங்கிய சம்பள பணம் இவ்வளவா?
அடேங்கப்பா! இந்தியன் 2 படத்துக்கு கமல்ஹாசன் வாங்கிய சம்பள பணம் இவ்வளவா?
மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழிசை திடீர் சந்திப்பு.. நடந்தது என்ன?
மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழிசை திடீர் சந்திப்பு.. நடந்தது என்ன?
Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. ஜூலை 3 முதல் அமல்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
Embed widget