மேலும் அறிய

போலி வாக்காளர்கள் இருக்காங்க? மகாராஷ்டிரா, டெல்லி இப்போ மேற்குவங்கம்.. மம்தா பரபர!

தேர்தல் ஆணையத்தின் ஆசீர்வாதத்துடன் வாக்காளர் பட்டியலில் பாஜக குளறுபடி செய்து வருவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். இதற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

மகாராஷ்டிரா, டெல்லியை தொடர்ந்து மேற்குவங்கத்தில் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்படுவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா குற்றச்சாட்டு சுமத்திய நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. வாக்காளர் அடையாள அட்டை (இபிஐசி) எண்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும், பெயர் விவரங்கள், சட்டமன்றத் தொகுதி, வாக்குச் சாவடி உள்ளிட்ட பிற விவரங்கள் வேறுபட்டவை என்று தெளிவுபடுத்தியுள்ளது.

பரபரப்பை கிளப்பும் மம்தா:

தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்பட ஐந்து மாநிலங்களுக்கு அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், மத்திய பாஜக அரசு மீதும் தேர்தல் ஆணையம் மீதும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பரபர குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். தேர்தல் ஆணையத்தின் ஆசீர்வாதத்துடன் வாக்காளர் பட்டியலில் பாஜக குளறுபடி செய்து வருவதாக அவர் கூறியிருந்தார். 

"மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் உள்ள எதிர்க்கட்சிகள் இந்த தந்திரத்தை கண்டுபிடிக்கத் தவறிவிட்டன. ஆனால் நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம். மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் பாஜக இப்படித்தான் வெற்றி பெற்றது. இப்போது, ​​அவர்கள் மேற்கு வங்கத்தை குறிவைக்கிறார்கள். நாங்கள் கடுமையாக பதிலடி கொடுப்போம்.

எல்லா மாவட்டங்களிலிருந்தும் எனக்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஹரியானா மற்றும் குஜராத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் மேற்கு வங்காளவாசிகளின் பெயர்களுடன் ஒரே EPIC (தேர்தல் புகைப்பட அடையாள அட்டை) எண்ணின் கீழ் காணப்படுகின்றன. போலி வாக்காளர்கள் ஆன்லைனில் சேர்க்கப்பட்டுள்ளன" என மம்தா தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையம் விளக்கம்:

இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த தேர்தல் ஆணையம், வாக்காளர் அடையாள அட்டை (இபிஐசி) எண்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும், பெயர் விவரங்கள், சட்டமன்றத் தொகுதி, வாக்குச் சாவடி உள்ளிட்ட பிற விவரங்கள் வேறுபட்டவை என தெளிவுபடுத்தியுள்ளது.

"வாக்காளர் அடையாள அட்டை எண்ணைப் பொருட்படுத்தாமல், எந்தவொரு வாக்காளரும் தங்கள் மாநிலம் / யூனியன் பிரதேசத்தில் அந்தந்த தொகுதியில் தங்களுக்கான வாக்குச் சாவடியில் மட்டுமே வாக்களிக்க முடியும். அங்குதான் அவர்கள் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். வேறு எங்கும் இல்லை.

பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சில வாக்காளர்களுக்கு ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள அட்டை எண்/தொடர் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்குக் காரணம், அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் வாக்காளர் பட்டியல் தரவுத்தளத்தை ஈரோநெட் தளத்திற்கு மாற்றுவதற்கு முன்னர் பரவலாக்கப்பட்ட முறை, கையேடு நடைமுறை ஆகியவை பின்பற்றப்பட்டன. இதன் விளைவாக சில மாநில / யூனியன் பிரதேச தலைமை அதிகாரி அலுவலகங்கள் ஒரே இபிஐசி எண்ணெழுத்து வரிசையைப் பயன்படுத்தின.

இருப்பினும், எந்தவொரு அச்சத்தையும் போக்க, பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுக்கு தனித்துவமான இபிஐசி எண்ணை ஒதுக்குவதை உறுதி செய்ய ஆணையம் முடிவு செய்துள்ளது. ஒரே மாதிரியான இபிஐசி எண் தொடர்பான எந்த ஒரு பிரச்சினையும் தனித்துவமான எண்ணை ஒதுக்குவதன் மூலம் சரிசெய்யப்படும். இந்த செயல்முறைக்கு உதவ ஈரோநெட் 2.0 (ERONET 2.0) தளம் புதுப்பிக்கப்படும்" என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தலைப்பு செய்திகள்

கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
ஆன்லைன் பரிவர்த்தனை: வருமான வரி நோட்டீஸ் வராமல் தடுக்க இதைச் சரிபார்க்கவும்!
ஆன்லைன் பரிவர்த்தனை: வருமான வரி நோட்டீஸ் வராமல் தடுக்க இதைச் சரிபார்க்கவும்!
வரிசைக்கு குட்பை! சத்தீஸ்கரில் ரேஷன் ஏடிஎம்: தமிழகத்திலும் வருமா?
வரிசைக்கு குட்பை! சத்தீஸ்கரில் ரேஷன் ஏடிஎம்: தமிழகத்திலும் வருமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
Embed widget