மேலும் அறிய

IAP on Covid19: குழந்தைகளுக்கு ஆபத்தா.. பீதியூட்ட வேணாம் - ஐ.ஏ.பி. அறிவுரை!

கொரோனா மூன்றாம் அலையால் குழந்தைகள் அதிக அளவிலும் கடுமையாகவும் பாதிக்கப்படுவார்கள் என நாடளவில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் அந்த அளவுக்கு பீதயூட்ட வேண்டாம் என இந்திய குழந்தைநல மருத்துவர்கள் அமைப்பு - ஐ.ஏ.பி. கூறியுள்ளது.

நாடளவில் 32 ஆயிரம் குழந்தைநல மருத்துவர்கள் இடம்பெற்றுள்ள இந்த அமைப்பு (இண்டியன் அகடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்-ஐ.ஏ.பி) இதுதொடர்பாக பொது அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அளவுக்கு மருத்துவர்கள் மத்தியிலும் தவறான கருத்து வலுவாக ஏற்பட்டிருப்பதே இதற்குக் காரணம்.

நாடு முழுவதும் பெரியவர்களுக்கு கொரோனா தாக்குவதைப் போலவே சிறார்களுக்கும் தொற்று ஏற்படுகிறது; ஆனால் பெரியவர்களுக்கு அது கடுமையான தாக்கத்தை உண்டாக்குகிறது; சிறுவர்களுக்கோ 90 சதவீதம்வரை இலேசானதாகவும் அறிகுறி இல்லாமலும் கொரோனா தாக்கம் காணப்படுகிறது என்கிறது ஐ.ஏ.பி.
பொது மருத்துவர்களிடையே மட்டுமல்ல குழந்தைநல மருத்துவர்கள் மத்தியிலும்கூட, மூன்றாம் அலையின்போது குழந்தைகளுக்கு முதல் இரண்டு அலைகளைவிட கூடுதல் பாதிப்பை உண்டுபண்ணும் என்று கருத்துத் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்த வாதத்தை சரி என நிறுவுவதற்கு அவர்களிடம் எந்த முகாந்திரமும் இல்லை என்பது இந்திய குழந்தைநல மருத்துவர் அமைப்பின் அழுத்தமான கருத்தாகும்.

ஐ.ஏ.பி.யின் முன்னாள் தலைவரும் மும்பையைச் சேர்ந்தவருமான பாகுல் ஜெயந்த் பரேக், தி டெலிகிராப் நாளேட்டுக்கு அளித்த பேட்டியில், “ நாடு முழுவதும் சுற்றிவந்துகொண்டு இருக்கும் தவறான தகவல்களை மறுக்கவும் அதன் மூலம் மக்கள் தவறான எண்ணங்களுக்கும் முடிவுகளுக்கும் வந்துவிடக்கூடாது எனத் தடுக்கவும் விரும்புகிறோம். ஐ.ஏ.பி.யின் இந்த அறிவுறுத்தல் உலக அளவிலான அறிவியல் சான்றுகளின் அடிப்படையிலானது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

முதல் அலையின்போது நாள்பட்ட நோயுள்ளவர்களுக்கும் முதியவர்களுக்கும் கூடுதல் நலிவு கொண்டவர்களுக்கும் இரண்டாம் அலையின்போது நடுக்கட்ட வயதினருக்கும் அதிக அளவில் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. எனவே, அடுத்த கட்டமாக குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது உலாவும் ஒரு கருத்து. இன்னொன்று இதுவரை குழந்தைகளைத் தவிர மற்றவர்களுக்கு பாதிப்பு வந்துவிட்டது; அவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்; அதனால், இனி தடுப்பூசி எடுக்காத குழந்தைகளுக்கே கொரோனா பாதிப்பு உண்டாகும் என்பது மற்றொரு கருத்து.  

இன்னும் பல ஊகமான கருத்துகள் சமூக ஊடகங்களில் தீயாய்ப் பரவியிருக்கிறது; அவை பெற்றோரிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது என்கிறார், ஐ.ஏ.பி.யின் கொரோனா குழு உறுப்பினர்களில் ஒருவரான தன்யா தர்மபாலன். “இந்த அலையிலும் ஏராளமான குழந்தைகள் தொற்றுக்கு ஆளானதைப் பார்க்கிறோம். ஒட்டுமொத்தமாக எல்லாரும் பாதிக்கப்படும்போது ஒட்டுமொத்த குழந்தைகளிலும் பாதிப்பு ஏற்படுகிறது என்பதாகவே கருதமுடியும். மிகவும் குறைந்த குழந்தைகள்தான் மிதமான, தீவிரமான பாதிப்புக்கு ஆளானார்கள். ஒட்டுமொத்தமாக மிக அதிகமாக தொற்று அதிகரிக்கும்போது மிதமான, தீவிரமான பாதிப்பை குழந்தைகளிடமும் பார்க்கமுடியும்” என்கிறது, இந்திய குழந்தைநல மருத்துவர் அமைப்பு- ஐ.ஏ.பி. 

மூன்றாம் அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்கிற கருத்து பரவலாக பரவி வரும் நிலையில், இந்த விளக்கம் பெற்றோர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். 

தலைப்பு செய்திகள்

Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
கேரளாவின் அதிசய கோவில்கள்: குறிப்பிட்ட நாட்களில் ஆண்கள் நுழைய தடை ஏன்?
கேரளாவின் அதிசய கோவில்கள்: குறிப்பிட்ட நாட்களில் ஆண்கள் நுழைய தடை ஏன்?
ஓணம் சிறப்பு ரயில்: சென்னை-கொல்லம் பயணிகளுக்கு முக்கிய வழிகாட்டுதல்கள்!விபரம் இதோ.
ஓணம் சிறப்பு ரயில்: சென்னை-கொல்லம் பயணிகளுக்கு முக்கிய வழிகாட்டுதல்கள்!விபரம் இதோ.
மோகன்லால் 'அதிமனோகரம்' படத்திற்குத் தடை: சபரிமலை வனத்துறை அதிரடி!விபரம் இதோ
மோகன்லால் 'அதிமனோகரம்' படத்திற்குத் தடை: சபரிமலை வனத்துறை அதிரடி!விபரம் இதோ

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Property Tax : இனி ஒரு கட்டிடமும் தப்பாது.! சொத்து வரியை வசூலிக்க அரசு போட்ட மாஸ்டர் பிளான்- என்ன தெரியுமா.?
இனி ஒரு கட்டிடமும் தப்பாது.! சொத்து வரியை வசூலிக்க அரசு போட்ட மாஸ்டர் பிளான்- என்ன தெரியுமா.?
Holiday Special Bus : 2 நாள் லீவு வந்தாச்சு! ஊருக்கு செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
2 நாள் லீவு வந்தாச்சு! ஊருக்கு செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
School Student : மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
Embed widget