மேலும் அறிய

Train: ரயிலில் மது அருந்திவிட்டு பயணம் செய்யலாமா.? பிடிபட்டால் என்னென்ன தண்டனைகள் தெரியுமா?

ரயில்களில் மது அருந்திவிட்டு குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நிகழ்வு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ரயில்களில் மது அருந்தி பயணம் செய்தால் என்ன தண்டனை தெரியுமா.?

ரயில் பயணமும் கட்டுப்பாடும்

நாளுக்கு நாள் போக்குவரத்து வசதிகள் அதிகரித்தாலும் ரயிலில் பயணம் செய்வதையே பெரும்பாலான மக்கள் விரும்புவார்கள். பாதுகாப்பு ஒரு பக்கம் இருந்தாலும் அடிப்படை வசதிகளும் அதிகளவில் இருக்கும். இதன் காரணமாகவே ரயில்களில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் பயணம் செய்கிறார்கள். ரயில்களில் பயணிப்பவர்கள் பெரும்பாலும் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களாக உள்ளனர். இந்த நிலையில்  ரயில் பயணத்தை மக்களுக்குப் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் வழங்க ரயில்வேத்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அந்த வகையில் ரயில்களில் தீப்பற்றக்கூடிய மற்றும் வெடிக்கும் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பட்டாசு கொண்டு செல்ல முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மது அருந்தி விட்டு ரயிலில்  பயணிக்கலாமா.?

அதிலும் தற்போது ரயில்களில் மது அருந்துவது சட்டப்படி குற்றமாக இருந்தாலும் இதனை கண்டு கொள்ளாமல் ஒரு சில ரயில்களில் மது அருந்திவிட்டு மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்கும் சம்பவங்களும் அரங்கேற்றி வருகிறது. ரயிலிலோ அல்லது ரயில் நிலையத்திலோ மது அருந்திவிட்டு அநாகரீகமாக நடந்து கொள்பவர்கள் மீது ரயில்வே அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் ரயில்வே சட்டம் 1989 பிரிவு 145-ன் படி, ரயிலில் அல்லது ரயில் நிலைய வளாகத்தில் குடிபோதையில் இருப்பதும், அநாகரீகமாக நடந்து கொள்வதும் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது. மது அருந்திவிட்டு பயணிகளுக்கு தொந்தரவு செய்வது கடுமையான குற்றம் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தண்டனைகள் என்ன.?

மது அருந்திவிட்டு ரயில்களில் அல்லது ரயில் நிலையத்தில் முதல் முறையாக குற்றம் செய்யும் குற்றவாளிக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதே தவறை மீண்டும் செய்தால் ஒரு மாத சிறை தண்டனை அல்லது 250 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். குற்றங்களை பொறுத்து  இரண்டு தண்டனையும் சேர்த்து விதிக்கப்படும். அடுத்ததாக ரயிலில் மது போதையில் வன்முறையில் ஈடுபட்டாலோ அல்லது பொதுமக்கள் மற்றும் ரயில்வே ஊழியர்களை தாக்கினாலோ 6 மாதம் சிறை தண்டனையும் 500 ரூபாய் அபராதமும் விதிக்க வாய்ப்புள்ளது. 

எனவே ரயிலில் பயணம் செய்யும் போது பயணிகள் மனதில் வைக்க வேண்டிய முக்கிய விஷயங்களாக ரயில் அல்லது நடைமேடையில் மது அருந்துவது,  குடிபோதையில் ரயிலில் ஏறுவது, சண்டையிடுதல் மற்றும் சத்தமாக பேசி மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுப்பது போன்றவை தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்ய ரயில்வே போலீசாருக்கு அதிகாரம் உள்ளது. எனவே ரயில்களில் பயணிக்கும் போது மது அருந்திவிட்டு பயணம் செல்வதை தவிர்க்க வேண்டும் என்பதே ரயில்வே துறையின் அறிவுறுத்தலாக உள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
Embed widget