மேலும் அறிய

கேரள மோகினி ஆட்டக்கலைஞரின் நிகழ்ச்சியைப் பாதியில் நிறுத்திய நீதிபதி: எதிர்ப்புத் தெரிவித்து வலுக்கும் போராட்டம்!

கேரளத்தில் மோகினி ஆட்டக்கலைஞரின் நடன நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில், இந்நிகழ்வு கருத்துச் சுதந்திரத்தின் மீதானத் தாக்குதல் மற்றும் கலைஞரை அவமதிக்கும் செயல் என சோசியல் மீடியாவில் கருத்துக்களைப் பகிர்ந்துவருகின்றனர்.

கேரளத்தில் மோகினி ஆட்டக்கலைஞர் டாக்டர் நீனா பிரசாந்தின் நடனத்திற்குத் தடை விதித்த நீதிபதி எதிராகப் போரட்டங்கள் வலுத்துள்ளது. மேலும் இது கேரளத்தின் கலாச்சாரத்தை அவமதிக்கும் செயல் என சோசியல் மீடியாவில் பகிரப்பட்டுள்ளது.

 கேரளத்தில் பிறந்த நீனா பிரசாத், அம்மாநிலத்தின் முக்கியக் கலையான மோகினி ஆட்டத்தில் தலைசிறந்து விளங்கும் நடன கலைஞர் ஆவார். இவரின் பாவனையை ரசிப்பதற்கே ரசிகர்கள் கூடும் அலைமோதும் என்று கூறலாம்.  சமீபத்தில் நீனா பிரசாத், ஸ்ரீசித்ரன் எம்.ஜே எழுதிய ‘இதிஹாசங்களே தேடி’ (வரலாற்றைத் தேடி) என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவிற்குப் பிறகு, நடன நிகழ்ச்சி நடத்த அவர் அழைக்கப்பட்டார்.  பாலக்காட்டில் நான் சக்யம் அதாவது நட்பு என்ற தலைப்பில் அர்ஜூனனுக்கும் கிருஷ்ணருக்கும் உள்ள நெருங்கிய பிணைப்பைப் பற்றி அரங்கேறும் நிகழ்வாக அமைய இருந்தது. சுமார் 40 நிமிடங்கள் நீடித்த இந்நிகழ்ச்சி இடையூறாக உள்ளதாகவும், டாக்டர் நீனா பிரசாத்தின் மோகினி ஆட்டத்தை நிறுத்துவதற்கு மாவட்ட நீதிபதி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

  • கேரள மோகினி ஆட்டக்கலைஞரின் நிகழ்ச்சியைப் பாதியில் நிறுத்திய நீதிபதி: எதிர்ப்புத் தெரிவித்து வலுக்கும் போராட்டம்!

இதனையடுத்து மாவட்ட நீதிபதியின் உத்தரவின் படி, நிகழ்ச்சியின் இசை சத்தமாக இருந்ததாகக் காவல்துறைக்கு புகார் வந்ததாக ஏற்பட்டாளர்களால் டாக்டர் பிரசாத்துக்கு தெரிவிக்கப்பட்டதோடு மோகினி ஆட்ட நிகழ்ச்சி பாதியிலே நிறுத்தப்பட்டது. இச்சம்பவம் குறித்து மோகினி ஆட்டக்கலைஞர் டாக்டர் நீனா பிரசாத் தனது முகநூல் பக்கத்தில் மன  வருத்தத்துடன் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

அதில், நடிப்பின் சிறப்பம்சை மோகினியாட்டத்தின் வாயிலாக விளக்கும் சமயத்தில், நான் நடிப்பின் சிறப்பம்சத்தை அடையவிருந்த நேரத்தில் தான் போலீஸ் வந்தது அவமானதாக இருந்ததாகப் பகிர்ந்துள்ளார். மேலும் இது எனக்கு மட்டும் அவமானம் இல்லை எனவும் இந்திய கலாச்சார சகோதரத்துவத்திற்கும், கேரள கலாச்சாரத்தை அவமதிக்கும் செயல் எனத் தெரிவித்துள்ளார்.  இந்நிகழ்வால் என்  கண்கள் கண்ணீரில் நிரம்பியதாகவும், என் இதயத்தில் ரத்தம் வழிந்தாகவும் வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.

இதனையடுத்து  இச்சம்பவம் கேரளத்தின் மிகப்பெரிய பிரச்சனையாக உருமாறிய நிலையில், இந்நிகழ்விற்குக் காரணமான நீதிபதி பாஷாவுக்கு எதிராக பாலக்காடு நீதிமன்றத்தின் முன்பு வழக்கறிர்கள் குழு போராட்டம் நடத்தியது. இதோடு மட்டுமின்றி முக்கியத்தலைவர்கள் சோசியல் மீடியாவில் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் வி முரளீதரன் ட்விட்டரில், “முதல்வர் பினராயி விஜயனின் ஆட்சியில் கேரளாவில் தாலிபான் மயமாக்கலுக்கு மற்றொரு எடுத்துக்காட்டு” இந்த சம்பவம் என்று கூறியுள்ளார்.  மேலும் பாலக்காட்டைச் சேர்ந்த கேரள சபாநாயகர் எம்பி ராஜேஷ், இந்தச் சம்பவத்திற்குப் பதிலளித்து, "இது கருத்துச் சுதந்திரத்தின் மீதானத் தாக்குதல் மற்றும் கலைஞரை அவமதிக்கும் செயல்" என்று கூறினார்.  இத்தகையப் பிரச்சனைக்குக் காரணமாக பாலக்காடு மாவட்ட நீதிபதி, ஏற்கனவே பல்வேறு  சர்ச்சையில் சிக்கியுள்ளார் எனக்கூறப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Wagon R CNG Real Milage: ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
Scorpio N Facelift on EMI: ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
Embed widget