மேலும் அறிய

முன்னாள் மனைவிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றம் சாட்டப்பட்டவரை பர்கர் வாங்கி தர சொன்ன நீதிமன்றம்

இரண்டு பர்கர் உணவகங்களை நடத்தும் குற்றம்சாட்டப்பட்டவர், இரண்டு ஆதரவற்றோர் இல்லங்களுக்கு குறைந்தது 100 குழந்தைகளுக்கு சுகாதாரமான மற்றும் தரமான பர்கர்களை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சமீப காலமாகவே, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வினோதமான தண்டனைகளை நீதிமன்றம் வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய நிபந்தனையாக அவர் சுத்தமான நல்ல தரமான பர்கர்களை, இரண்டு ஆதரவற்றோர் இல்லங்களுக்கு வாங்கி தர வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

அந்த நபர் தனது முன்னாள் மனைவியை பின்தொடர்ந்து சென்று பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகவும் மிரட்டியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

பர்கர்கள் சுத்தமான சூழலில் சமைக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்யுமாறு காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தனது முன்னாள் மனைவிக்கு அவர் 4.5 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த அபராத தொகை நாளடைவில் மனைவிக்கு சென்றடையும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீதிபதி ஜஸ்மீத் சிங் தலைமையிலான தனி நீதிபதி அமர்வு, "குற்றம்சாட்டப்பட்டவர் மனுதாரரை (முன்னாள் மனைவி) திருமணம் செய்திருக்கிறார். தம்பதியினருக்கு மன வேறுபாடுகள் இருக்கின்றன. இதன் காரணமாகவே, அவர்கள் பிரிய முடிவு செய்துள்ளனர். இது ஒரு திருமண பிரச்சினை" என தெரிவித்தது.

இரு தரப்பினரும் ஜூலை 4 ஆம் தேதி அன்று டெல்லியில் உள்ள சாகேத் கோர்ட்டில் உள்ள சமரச மையத்தில் வழக்கைத் தீர்த்து வைக்க விண்ணப்பித்துள்ளனர். இது தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் எடுக்கப்பட்டதாகவும் எந்த வித அச்சுறுத்தலும் வற்புறுத்தலும் இல்லாமல் சமரசம் செய்ய முன்வந்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

இதில், முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்பட்டால் தனக்கு ஆட்சேபனை இல்லை என்றும் முன்னாள் மனைவி கூறியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. தவறான ஆலோசனையின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாக கூறியு நீதிமன்றம், "இந்த வழக்கு 2020 முதல் நடந்து வருகிறது.

மேலும். இது காவல்துறை மற்றும் நீதித்துறையின் நேரத்தை வீணடித்துள்ளது. இந்த நேரத்தை முக்கியமான விஷயங்களுக்கு பயன்படுத்தப்பட்டு இருக்கலாம். எனவே, மனுதாரர் சமூகத்திற்கு சில சமூக நற்பணிகளை செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளது.

நொய்டாவில் 'பர்கர் சிங்' மற்றும் 'வாட்-ஏ-பர்கர்' ஆகிய இரண்டு பர்கர் உணவகங்களை நடத்தும் குற்றம்சாட்டப்பட்டவர், இரண்டு ஆதரவற்றோர் இல்லங்களுக்கு குறைந்தது 100 குழந்தைகளுக்கு சுகாதாரமான மற்றும் தரமான பர்கர்களை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget