மேலும் அறிய

நாங்க அனுமன் வியூகத்தை பயன்படுத்தினோம்..சீக்ரட்டை பகிர்ந்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்!

Operation Sindoor: பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்களின் போது பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் இருந்த பயங்கரவாதிகளின் முகாம்களை, இன்று அதிகாலை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. இதற்கு ஆபரேசன் சிந்தூர் என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது. இது வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகவும், அப்பாவிகளைக் கொன்றவர்களை மட்டுமே நாங்கள் அழித்துள்ளோம் எனவும் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

பயங்கரவாதிகளுக்கு பதிலடி:

கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி, ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில், டி.ஆர்.எஃப் பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்தியதில் 26 பேர் உயிரிந்தனர். இந்நிலையில், பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இன்று அதிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது, சுமார் 01.05 மணி முதல் 01.30 மணிவரை, சுமார் 25 நிமிட தாக்குதல் நடத்தியதாக இந்தியா தெரிவித்துள்ளது.  இந்த தாக்குதலில் சுமார் 26 பேர் கொல்லப்பட்டதாகவும் , 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

”இலக்குகளை தீர்மானித்தோம்”

இந்நிலையில், இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தெரிவித்த தகவலானது, நமது இந்திய பாதுகாப்பு படைகள் வீரத்தையும் துணிச்சலையும் வெளிப்படுத்தி, ஒரு புதிய வரலாற்றைப் படைத்தன. இந்திய ஆயுதப்படைகள் துல்லியத்தன்மை, விழிப்புணர்வு மற்றும் உணர்திறன் ஆகியவற்றுடன் செயல்பட்டன. சரியான நேரத்தில் துல்லியமாக அழிக்கப்படவேண்டிய இலக்குகளை நாங்கள் தீர்மானித்தோம்.

”அனுமன் கொள்கை”

பயங்கரவாதிகள் மீதான தாக்குதலின்போது, பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதிலும் நமது ஆயுதப்படைகள் திறம்பட செயல்பட்டன. அசோக வனத்திற்குள் செல்லும்போது, அனுமன் பின்பற்றிய கொள்கையை நாங்கள் பின்பற்றினோம். எங்கள் அப்பாவிகளைக் கொன்றவர்களை மட்டுமே நாங்கள் குறிவைத்தோம் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருக்கிறார்.

இந்திய வீரர்கள் துல்லியம், விழிப்புணர்வு மற்றும் மனிதாபிமானத்தையும் காட்டினர் என்று சொல்லலாம். இந்த தருணத்தில்,  இந்திய நாட்டின் சார்பாக, நமது வீரர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN School Leave: திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN School Leave: திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Ramadoss Vs ECI: டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Leave: திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN School Leave: திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Ramadoss Vs ECI: டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Pakistan Exposed: யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
TVK Vijay Roadshow: புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
Embed widget