மேலும் அறிய

ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்! உயிரிழந்தவர் உயிர் பெற்ற அதிசயம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!

கசாபா-பவாடாவில் வசிக்கும் பாண்டுரங் உல்பே என்பவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

மாரடைப்பால் உயிரிழந்தார் என மருத்துவர்கள் சொன்ன நபர், வேகத்தைடையில் ஆம்புலன்ஸ் ஏறி இறங்கியபோது உயிர் பெற்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வேகத்தடைகள் பெரும்பாலும் பயணிகளுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும் அதே வேளையில், மருத்துவர்களால் இறந்துவிட்டதாகக் கருதப்படும் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இது ஒரு அதிசயமாக மாறியுள்ளது. 

கோலாப்பூரில் 65 வயதான அந்த நபர், தனது 'உயிரற்ற உடலை' ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் வேகத் தடையில் ஏறி இறங்கிய பிறகு மீண்டும் உயிர் பெற்றார். டிசம்பர் 16ஆம் தேதி மகாராஷ்டிரா நகரில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 

கசாபா-பவாடாவில் வசிக்கும் பாண்டுரங் உல்பே என்பவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் மருத்துவமனையில் இருந்து அவரது உடலை எடுத்துக்கொண்டு ஒரு ஆம்புலன்ஸ் அவரது வீட்டிற்கு பயணத்தைத் தொடங்கியது. அங்கு அவரது மறைவுச் செய்தியைக் கேட்டு அக்கம்பக்கத்தினரும் உறவினர்களும் கூடி, அவரது இறுதிச் சடங்குகளுக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். 

இதனிடையே ஆம்புலன்ஸ் வந்துகொண்டிருக்கும்போது ஒரு ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கியது. அப்போது உல்பேவின் விரல் அசைவதை அவரது உறவினர்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து உடனடியாக உல்பேவை வேறு ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு உயிர் இருப்பதை அறிந்து ஐசியுவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை கொடுக்கப்பட்டது. இதையடுத்து ஆம்புலன்ஸ் வேகத்தடையைக் கடந்து சென்ற பதினைந்து நாட்களுக்குப் பிறகு, திங்கட்கிழமை உல்பே இறுதியாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 

இதுகுறித்து அவரது மனைவி கூறுகையில், “நாங்கள் அவரது உடலை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டு வரும்போது, ​​ஆம்புலன்ஸ் ஒரு வேகத் தடையைக் கடந்து சென்றது. அவரது விரல்களில் ஏதோ அசைவு இருப்பதை நாங்கள் கவனித்தோம்.” எனத் தெரிவித்தார். 

இதுகுறித்து பாண்டுரங் உல்பே கூறுகையில், “நான் நடந்து வீட்டிற்கு வந்து தேநீர் அருந்திவிட்டு அமர்ந்திருந்தேன். எனக்கு தலைச்சுற்றல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. நான் குளியலறைக்குச் சென்று வாந்தி எடுத்தேன். அதன் பிறகு என்ன நடந்தது, யார் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள் என்பது உட்பட எனக்கு நினைவில் இல்லை" எனத் தெரிவித்தார். 

உல்பே இறந்துவிட்டதாக அறிவித்த மருத்துவமனை, இந்த சம்பவம் குறித்து இன்னும் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Kanimozhi Karunanidhi : ‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ முதல்வர் ஸ்டாலினின் திட்டம் என்ன..?
‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ ஸ்டாலினின் திட்டம் என்ன..?
ABP Premium

வீடியோ

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Kanimozhi Karunanidhi : ‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ முதல்வர் ஸ்டாலினின் திட்டம் என்ன..?
‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ ஸ்டாலினின் திட்டம் என்ன..?
Teachers Protest:தொடர் போராட்டம்; ஸ்தம்பித்த காமராசர் சாலை, திடீரெனக் குவிந்த ஆசிரியர்கள்- மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
Teachers Protest:தொடர் போராட்டம்; ஸ்தம்பித்த காமராசர் சாலை, திடீரெனக் குவிந்த ஆசிரியர்கள்- மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
Silver Rate: வெள்ளிய இப்பவே வாங்கிடுங்க.! இன்னும் 3 மாசம் தான்; ஒரு கிராம் இவ்வளவா உயரப் போகுது.?!
வெள்ளிய இப்பவே வாங்கிடுங்க.! இன்னும் 3 மாசம் தான்; ஒரு கிராம் இவ்வளவா உயரப் போகுது.?!
CUET UG 2026: மே மாதத்தில் க்யூட் நுழைவுத் தேர்வு, ஆதார் கட்டாயம்; தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு- முக்கிய அறிவுரை!
CUET UG 2026: மே மாதத்தில் க்யூட் நுழைவுத் தேர்வு, ஆதார் கட்டாயம்; தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு- முக்கிய அறிவுரை!
New Kia Seltos Vs Honda Elevate: புதிய கியா செல்டோஸ்-ஆ.? ஹோண்டா எலிவேட்-ஆ.?; எல்லா விதத்திலும் எந்த SUV அதிக சக்தி வாய்ந்தது.?
புதிய கியா செல்டோஸ்-ஆ.? ஹோண்டா எலிவேட்-ஆ.?; எல்லா விதத்திலும் எந்த SUV அதிக சக்தி வாய்ந்தது.?
Embed widget