மேலும் அறிய

ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்! உயிரிழந்தவர் உயிர் பெற்ற அதிசயம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!

கசாபா-பவாடாவில் வசிக்கும் பாண்டுரங் உல்பே என்பவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

மாரடைப்பால் உயிரிழந்தார் என மருத்துவர்கள் சொன்ன நபர், வேகத்தைடையில் ஆம்புலன்ஸ் ஏறி இறங்கியபோது உயிர் பெற்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வேகத்தடைகள் பெரும்பாலும் பயணிகளுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும் அதே வேளையில், மருத்துவர்களால் இறந்துவிட்டதாகக் கருதப்படும் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இது ஒரு அதிசயமாக மாறியுள்ளது. 

கோலாப்பூரில் 65 வயதான அந்த நபர், தனது 'உயிரற்ற உடலை' ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் வேகத் தடையில் ஏறி இறங்கிய பிறகு மீண்டும் உயிர் பெற்றார். டிசம்பர் 16ஆம் தேதி மகாராஷ்டிரா நகரில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 

கசாபா-பவாடாவில் வசிக்கும் பாண்டுரங் உல்பே என்பவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் மருத்துவமனையில் இருந்து அவரது உடலை எடுத்துக்கொண்டு ஒரு ஆம்புலன்ஸ் அவரது வீட்டிற்கு பயணத்தைத் தொடங்கியது. அங்கு அவரது மறைவுச் செய்தியைக் கேட்டு அக்கம்பக்கத்தினரும் உறவினர்களும் கூடி, அவரது இறுதிச் சடங்குகளுக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். 

இதனிடையே ஆம்புலன்ஸ் வந்துகொண்டிருக்கும்போது ஒரு ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கியது. அப்போது உல்பேவின் விரல் அசைவதை அவரது உறவினர்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து உடனடியாக உல்பேவை வேறு ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு உயிர் இருப்பதை அறிந்து ஐசியுவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை கொடுக்கப்பட்டது. இதையடுத்து ஆம்புலன்ஸ் வேகத்தடையைக் கடந்து சென்ற பதினைந்து நாட்களுக்குப் பிறகு, திங்கட்கிழமை உல்பே இறுதியாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 

இதுகுறித்து அவரது மனைவி கூறுகையில், “நாங்கள் அவரது உடலை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டு வரும்போது, ​​ஆம்புலன்ஸ் ஒரு வேகத் தடையைக் கடந்து சென்றது. அவரது விரல்களில் ஏதோ அசைவு இருப்பதை நாங்கள் கவனித்தோம்.” எனத் தெரிவித்தார். 

இதுகுறித்து பாண்டுரங் உல்பே கூறுகையில், “நான் நடந்து வீட்டிற்கு வந்து தேநீர் அருந்திவிட்டு அமர்ந்திருந்தேன். எனக்கு தலைச்சுற்றல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. நான் குளியலறைக்குச் சென்று வாந்தி எடுத்தேன். அதன் பிறகு என்ன நடந்தது, யார் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள் என்பது உட்பட எனக்கு நினைவில் இல்லை" எனத் தெரிவித்தார். 

உல்பே இறந்துவிட்டதாக அறிவித்த மருத்துவமனை, இந்த சம்பவம் குறித்து இன்னும் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
ABP Premium

வீடியோ

TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |
தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
America Offer illegal Immigrants: இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
Embed widget