மேலும் அறிய

Cow Hug Day: காதலர் தினம் வேணாம்! பசுவை கட்டி புடிக்கனுமா? - கொதித்தெழுந்த சு.வெங்கடேசன் எம்.பி!

விலங்குகள் நல வாரியத்தின் இந்தக் கோரிக்கை அரசியல் தலைவர்கள் தொடங்கி நெட்டிசன்கள் வரை அனைத்து தரப்பினரிடையேயும் தொடர்ந்து கண்டனங்களைப் பெற்று வருகிறது.

உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் பிப்.14ஆம் தேதியை காதலர் தினமாகக் கொண்டாடி மகிழ்ந்து வரும் நிலையில், இந்த ஆண்டு முதல் பிப்.14ஆம் தேதியை பசு அணைப்பு தினமாகக் கொண்டாட வேண்டும் இந்திய விலங்குகள் நல வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.

பசு அணைப்பு தினம்

நேற்று இது குறித்து கோரிக்கை விடுத்திருந்த விலங்குகள் நல வாரியம், “நம் வேத கால பழக்கவழக்கங்கள் மேற்கத்திய பண்பாடுகளால்  அழியும் நிலையில் உள்ளதாகவும், பசுவை அரவணைப்பதன் மூலம் பேருவகை அடைய முடியும் என்றும் இந்திய விலங்குகள் நல வாரியம் தனது சுற்றறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், விலங்குகள் நல வாரியத்தின் இந்தக் கோரிக்கை அரசியல் தலைவர்கள் தொடங்கி நெட்டிசன்கள் வரை அனைத்து தரப்பினரிடையேயும் தொடர்ந்து கண்டனங்களைப் பெற்று வருகிறது.

சு.வெங்கடேசன் காட்டம்

அந்த வகையில் முன்னதாக இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், “இந்தியாவில் மகிழ்ச்சி பொங்க இரண்டு வழிமுறைகளை ஒன்றிய அரசு இன்று வெளியிட்டுள்ளது.

அதானியை மோடி அணைப்பார்; மக்கள் பசுவை அணைக்க வேண்டும். இதுவல்லவோ அரசு” என தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார்.

 

டி.ஆர்.பி ராஜா ட்வீட்

இதேபோல் மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினரும் திமுக ஐடி விங் மாநிலச் செயலாளருமான டி.ஆர்.பி ராஜா தனது பதிவில், “என்ன எழவுடா இது? சங்கிகள் வருகிறார்கள்! பசுக்களே ஜாக்கிரதை. இந்த பசு அணைப்பு தினத்தையும் நெதர்லாந்தை பார்த்துதான் காப்பி அடித்துள்ளார்கள். இது சங்கிகளின் பசுவின் மீதான உண்மையான அன்பின் வெளிப்பாடு அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.

 

வாழ்க்கையை தாய் பசுவின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு, நேர்மறை ஆற்றல் நிறைந்ததாகவும், மகிழ்ச்சியாக மாற்றும் வகையிலும் பசுப்பிரியர்கள் பிப்ரவரி 14 அன்று பசு அணைப்பு தினம் கொண்டாட வேண்டும்” எனவும் விலங்குகள் நல வாரியம் கோரியுள்ளது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"ஒரு வார்த்தை கூட பேசாத ராகுல் காந்தி" கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்திற்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்!
Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!
Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Breaking News LIVE: நீட் தேர்வு முறைகேடு! பீகாரில் 17 மாணவர்கள் தகுதி நீக்கம்
Breaking News LIVE: நீட் தேர்வு முறைகேடு! பீகாரில் 17 மாணவர்கள் தகுதி நீக்கம்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்Salem leopard | இறந்து கிடக்கும் ஆடுகள்! சிறுத்தை பீதியில் மக்கள்! வனத்துறைக்கு கோரிக்கைChennai's Amirtha  : சென்னைஸ் அமிர்தாவின் 8வது பட்டமளிப்பு விழா 250 மாணவர்கள் தேர்ச்சி!Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஒரு வார்த்தை கூட பேசாத ராகுல் காந்தி" கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்திற்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்!
Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!
Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Breaking News LIVE: நீட் தேர்வு முறைகேடு! பீகாரில் 17 மாணவர்கள் தகுதி நீக்கம்
Breaking News LIVE: நீட் தேர்வு முறைகேடு! பீகாரில் 17 மாணவர்கள் தகுதி நீக்கம்
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
பெருத்த சவால்! 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை - சாதித்த அரசு மருத்துவர்கள்
பெருத்த சவால்! 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை - சாதித்த அரசு மருத்துவர்கள்
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
Embed widget