மேலும் அறிய

Corona Third wave : கொரோனா மூன்றாவது அலை முன்னெச்சரிக்கை செய்யும் மத்திய அரசு!

கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாவது அலை தொடர்பாக நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர் டாக்டர் விகே பவுல் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவல் சற்று குறையத் தொடங்கியுள்ளது. பல்வேறு மாநிலங்களில் தினசரி தொற்று பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. அத்துடன் உயிரிழப்புகளும் சற்று குறைய தொடங்கியுள்ளன. இந்தச் சூழலில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்பாக மத்திய அரசு சார்பில் தினமும் பத்திரிகைக்கு விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ’நிதி ஆயோக்’-ன் கொரோனா கட்டுபாட்டு குழுவின்  தலைவர் வி.கே. பால் மூன்றாவது அலை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். 

அதில், "இந்தியாவில் தற்போது இரண்டாவது அலையின் வேகம் குறைய தொடங்கியுள்ளது. சுகாதாரத்துறையின் தரவுகளின்படி இந்தியாவில் கடந்த மே 7ம் தேதி இரண்டாவது அலை உச்சத்தை தொட்டது. அதன்பின்னர் தற்போது தினசரி பாதிப்பு 68 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. மேலும் 377 மாவட்டங்களில் தினசரி தொற்று பாதிப்பு,உறுதியாகும் சதவிகிதம் 5 சதவிகிதத்துக்கும் குறைவாக பதிவாகி வருகிறது. அத்துடன் 257 மாவட்டங்களில் தினசரி தொற்று பாதிப்பு 100க்கும் கீழாக பதிவாகி வருகிறது.


Corona Third wave : கொரோனா மூன்றாவது அலை முன்னெச்சரிக்கை செய்யும் மத்திய அரசு!

இது தானாகக் குறையவில்லை. நாம் எடுத்த கடுமையான நடவடிக்கைகள்தான் தற்போது தொற்று பரவலை குறைத்துள்ளது. தற்போது பல்வேறு மாநிலங்களில்  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக மக்கள் கூட்டமாக கூடுவது தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதிப்பும் குறைந்துள்ளது.  தொற்று பரவல் குறைந்துள்ளது என்று நினைத்து நாம் மீண்டும் ஜனவரி, பிப்ரவரியில் இருந்ததை போல் அலட்சியமாக இருக்கத் தொடங்கினால் மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்ககூடும்.

அதிலும் குறிப்பாக மீண்டும் நாம் பழைய நிலைக்கு திரும்பினால் தொற்று பரவல் இரண்டாவது அலையைவிட மிகவும் வேகமாக பரவும். அத்துடன் விரைவில் தொற்று பாதிப்பு எண்ணிக்கையும் உச்சத்தை தொடும். ஆனால் நாம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றி வந்தோம் என்றால் அந்த அலை வருவதற்கு கூட வாய்ப்புகள் குறையும். அப்படி ஒருவேளை வந்தாலும் அது இவ்வளவு தீவிரமாக இருக்காது. நாம் அதிகப்படியான மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். அதுவரை நாம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மிகவும் தீவிரமாகக் கடைபிடிக்க வேண்டும்"  எனத் தெரிவித்துள்ளார்.


Corona Third wave : கொரோனா மூன்றாவது அலை முன்னெச்சரிக்கை செய்யும் மத்திய அரசு!

ஏற்கெனவே இந்தியாவில் மூன்றாவது அலை வந்தால் அது குழந்தைகளை அதிகமாக தாக்கும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த அலை வரும் நேரம் மற்றும் தீவிரம் தற்போது உள்ள ஊரடங்கு தளர்வு மற்றும் தடுப்பூசி செலுத்தும் விகிதம் ஆகியவற்றிலிருந்துதான் தெரியும் என்றும் வல்லுநர்கள் கூறியுள்ளனர். தற்போது வி.கே.பாலும் அதே கருத்தையே தெரிவித்துள்ளார். எனவே மாநில அரசுகள் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவித்தாலும் நாம் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாக முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது ஆகியவற்றை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று வல்லுநர்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர். 

மேலும் படிக்க: கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளை தத்தெடுக்க விரும்புவோர் கவனத்துக்கு..!

தலைப்பு செய்திகள்

HIV Cases: அதிகரிக்கும் எய்ட்ஸ் நோய்.. ஆண்களுக்கு இடையேயான பாலியல் உறவு காரணமா? - அரசு கொடுத்த ஷாக் ரிப்போர்ட்
அதிகரிக்கும் எய்ட்ஸ் நோய்.. ஆண்களுக்கு இடையேயான பாலியல் உறவு காரணமா? - அரசு கொடுத்த ஷாக் ரிப்போர்ட்
லட்சக்கணக்கில் சம்பளம்.. ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநரின் சோகக்கதை.. இதெல்லாம் நியாயமா?
லட்சக்கணக்கில் சம்பளம்.. ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநரின் சோகக்கதை.. இதெல்லாம் நியாயமா?
Longest Serving PM Modi: ‘பண்டிட் நேருவையே மிஞ்சிய நரேந்திர மோடி‘; துள்ளிக் குதிக்கும் பாஜகவினர்; அப்படி என்ன சாதனை.?
‘பண்டிட் நேருவையே மிஞ்சிய நரேந்திர மோடி‘; துள்ளிக் குதிக்கும் பாஜகவினர்; அப்படி என்ன சாதனை.?
Top 10 News Headlines: முதலமைச்சரை சந்தித்த அன்புமணி, அமைச்சருக்கு ஷாக், ட்ரம்ப் வார்னிங் - 11 மணி வரை இன்று
முதலமைச்சரை சந்தித்த அன்புமணி, அமைச்சருக்கு ஷாக், ட்ரம்ப் வார்னிங் - 11 மணி வரை இன்று

வீடியோ

Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பட்ஜெட் விலை.. அசத்தலான மைலேஜ்! குடும்பஸ்தனுங்களுக்கான இ ஸ்கூட்டர் Ampere Magnus Grand!
பட்ஜெட் விலை.. அசத்தலான மைலேஜ்! குடும்பஸ்தனுங்களுக்கான இ ஸ்கூட்டர் Ampere Magnus Grand!
Embed widget