மேலும் அறிய

Covid: 'திருப்தியில்லை... கொரோனா பரிசோதனையை உடனே அதிகரியுங்கள்..' மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்..!

நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது. 

அதிகரிக்கும் கொரோனா

கடந்த 2020ஆம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை நிலைகுலைய வைத்தது. சுகாதார ரீதியாக மட்டும் இன்றி பொருளாதார ரீதியாகவும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, சமீப காலமாக நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,590 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி 1,249 ஆக இருந்த நிலையில்,  இன்று சற்று அதிகரித்துள்ளது. கடந்த அக்டோபர் 30ஆம் தேதி நிலவரப்படி கொரோனா பாதிப்பானது 1,604ஆக இருந்தது. 145 நாட்களில் இல்லாத அளவில் அதிகபட்ச பாதிப்பு இன்று பதிவாகி உள்ளது.  . 

H3N2 வைரஸ்:

கொரோனா தொற்று மட்டுமின்றி, சமீபத்தில், H3N2 வைரஸ் பெரும் அச்சத்தை கிளப்பியது.  இன்ஃப்ளூயன்ஸா (குளிர்காய்ச்சல்) ஏ வைரஸின் துணை வகையான H3N2, இந்தியாவின் இரண்டு உயிர் பலிகளை வாங்கியது. ஹரியானாவில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் கர்நாடகாவில் உயிரிழந்தார்.

இந்த வைரஸினால் ஏற்பட்ட காய்ச்சலால் நாடு முழுவதும் 451 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. பொதுவாக, வானிலை கடும் குளிரில் இருந்து வெப்பமான சூழலுக்கு மாறும்போது இம்மாதிரியான காய்ச்சல் ஏற்படும். இப்படி இருக்கும் நிலையில், மத்திய சுகாதாரத்துறை சார்பில் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

அறிவுறுத்தல்

குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதன்படி, கேரளா - 26/4%, மகாராஷ்டிரா-21.7%, குஜராத்-13.9%, கர்நாடகா-8.6%, தமிழகம் - 6.3% உயர்ந்துள்ளது.  இந்நிலையில், கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது.

அதில் கூறிப்பிட்டுள்ளதாவது, ”கொரேனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். பொது இடங்களில் முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்றுதல், தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல் உள்ளிட்டவற்றை கடைபிடிக்க வேண்டும். மேலும், மருத்துவமனையில் படுக்கைகள், மருத்துவ ஆக்சிஜன், மருந்துகள் கையிருப்பு ஆகியவற்றை இருப்பதை உறுதி செய்ய  வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஃபுளூயன்சா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். கொரோனா பரிசோதனையின் எண்ணிக்கை ஒப்பிட்டளவில் திருப்திகரமாக இல்லை என்றும் கொரோனா பாதிப்புள்ளவர்களுக்கு சுவாசப்பிரச்சனை அதிகம் உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை கடிதத்தில் தெரிவித்தள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
BJP Vs CONG.: குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
Pakistan PM: ‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை
Nagpur Couple Viral Video : விபத்தில் இறந்த மனைவிஉதவிக்கு வராத மக்கள் பைக்கில் எடுத்து சென்ற கணவர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
BJP Vs CONG.: குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
Pakistan PM: ‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
Chennai Power Cut: சென்னை மக்களே உஷார்.! ஆகஸ்ட் 14-ம் தேதி எங்கெங்க மின் தடை செய்யப் போறாங்கன்னு தெரிஞ்சுக்கோங்க
சென்னை மக்களே உஷார்.! ஆகஸ்ட் 14-ம் தேதி எங்கெங்க மின் தடை செய்யப் போறாங்கன்னு தெரிஞ்சுக்கோங்க
எட்றா வண்டிய அமெரிக்காவுக்கு.. அடுத்த மாதம் செல்லும் பிரதமர் மோடி..! இரக்கம் காட்டுவாரா ட்ரம்ப்?
எட்றா வண்டிய அமெரிக்காவுக்கு.. அடுத்த மாதம் செல்லும் பிரதமர் மோடி..! இரக்கம் காட்டுவாரா ட்ரம்ப்?
State Education Policy: சரமாரி எதிர்ப்புகள்; மாநில கல்விக்கொள்கை விமர்சனங்களுக்கு பாயிண்ட் போட்டு விளக்கமளித்த அரசு!
State Education Policy: சரமாரி எதிர்ப்புகள்; மாநில கல்விக்கொள்கை விமர்சனங்களுக்கு பாயிண்ட் போட்டு விளக்கமளித்த அரசு!
Toyota Taisor: டெய்சருக்கு அப்க்ரேட் கொடுத்த டொயோட்டா.. 2 மேஜர் அப்டேட்கள், என்னென்ன தெரியுமா?
Toyota Taisor: டெய்சருக்கு அப்க்ரேட் கொடுத்த டொயோட்டா.. 2 மேஜர் அப்டேட்கள், என்னென்ன தெரியுமா?
Embed widget