மேலும் அறிய

தினமும் ஒரு லட்சம் பேருக்கு பாசிட்டிவ்.. மூன்றாவது அலை குறித்து ஐ.சி.எம்.ஆர். மூத்த மருத்துவர் எச்சரிக்கை

கொரோனா மூன்றாவது அலையின்போது தினசரி 1 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஐ.சி.எம்.ஆர். மூத்த மருத்துவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தினசரி பாதிப்பு கடந்த மே மாதம் 3.50 லட்சம் என்ற அளவில் பதிவாகி மக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கொரோனா மூன்றாவது அலை தாக்கம் இரண்டாவது அலையை விட மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஏற்கனவே மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா பரவலின் மூன்றாவது அலை குறித்து இந்திய மருத்தவ ஆராய்ச்சி கழகத்தின்(ஐ.சி.எம்.ஆர்.) மூத்த மருத்துவர் பேராசிரியர் சமிரன் பாண்டா எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐ.சி.எம்.ஆரின் தொற்றுநோய் பிரிவு இயக்குனராக தற்போது பொறுப்பு வகித்து வரும் சமிரன் பாண்டா விடுத்துள்ள எச்சரிக்கையில், சில மாநிலங்களில் ஊரடங்கு தளர்வுகள் மற்றும மலைப்பகுதிகளுக்கு சுற்றுலாவிற்கு அனுமதிப்பது மூலம் இந்த மோசமான சூழல் முடிந்துவிட்டது போன்ற தோற்றம் உள்ளது.


தினமும் ஒரு லட்சம் பேருக்கு பாசிட்டிவ்.. மூன்றாவது அலை குறித்து ஐ.சி.எம்.ஆர். மூத்த மருத்துவர் எச்சரிக்கை

கொரோனா வைரசின் மூன்றாவது அலை இந்தியாவில் ஆகஸ்ட் மாத இறுதியில் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. அப்போது, இந்தியா முழுவதும் தினசரி 1 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள்.  உருமாறாத கொரோனா வைரசாக இருந்தால் கொரோனாவின் பாதிப்பு முதல் அலையைப் போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவே உருமாறிய கொரோனா வைரசாக இருந்தால் கண்டிப்பாக நிலைமை மிகவும் மோசமானதாக இருக்கும்.

கொரோனா இரண்டாவது அலை போல, கொரோனா மூன்றாவது அலை இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்தாது. ஆனால், தடுப்பூசிகளை குறைவாக செலுத்திக் கொள்வதும், ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவதும் நாட்டில் கொரோனா பாதிப்பு வீதத்தை அதிகரிக்கும். தற்போதுள்ள சூழலைப் பார்க்கும்போது நிச்சயம் மூன்றாவது அலை ஏற்படக்கூடும்.

பொதுமக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்ப்பது மற்றும் முகக்கவசம் அணிவது வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும். இந்தியாவிற்கு ஒரு நோய்த்தடுப்பு திட்டம் தேவைப்படுகிறது. மக்கள் பயணங்கள் செய்வதை முடிந்தவரை குறைக்க வேண்டும். ஏனென்றால் இது மக்கள் அடர்த்தி மாற்றங்களை ஏற்படுத்துகிறது.


தினமும் ஒரு லட்சம் பேருக்கு பாசிட்டிவ்.. மூன்றாவது அலை குறித்து ஐ.சி.எம்.ஆர். மூத்த மருத்துவர் எச்சரிக்கை

86 சதவீத பாதிப்பு டெல்டா வகை கொரோனாவால் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரசால் ஏற்படும் உயிரிழப்பையும், மூன்றாவது அலை ஆபத்தையும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது மூலம் குறைக்க முடியும். “ இவ்வாறு அவர் கூறியுள்ளார். மற்றொரு மூத்த மருத்துவர் வி.கே.பால் விடுத்துள்ள எச்சரிக்கையில், கொரோனா வைரசால் நாட்டில் அடுத்த 100 முதல் 125 நாட்கள் மிகவும் மோசமான சூழல் நிலவும் என்று கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையால் மகாராஷ்ட்ரா, டெல்லி, ஹரியானா, கர்நாடகா, கேரள, தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த மாநிலங்களில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தற்போது கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Punjab Farmers: இரவோடு இரவாக அகற்றம்..! பாஜகவிற்கு ஆதரவாக ஆம் ஆத்மி சிஎம், விவசாயிகள் கைது
Punjab Farmers: இரவோடு இரவாக அகற்றம்..! பாஜகவிற்கு ஆதரவாக ஆம் ஆத்மி சிஎம், விவசாயிகள் கைது
CSK Vs MI IPL 2025: சென்னையில் கோலோச்சும் மும்பை, ஹர்திக் படையை தாக்கு பிடிப்பாரா கெய்க்வாட்..! ஐபிஎல் ஆண்ட பரம்பரைகள்
CSK Vs MI IPL 2025: சென்னையில் கோலோச்சும் மும்பை, ஹர்திக் படையை தாக்கு பிடிப்பாரா கெய்க்வாட்..! ஐபிஎல் ஆண்ட பரம்பரைகள்
Weather: இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை இருக்கு-  நாளைய வானிலை எப்படி?
இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை இருக்கு- நாளைய வானிலை எப்படி?
அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?
அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sunita williams Return | சுனிதாவை பாராட்டாத மோடி 2007-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் பின்னணி..! | Haren PandyaSenthil Balaji Delhi Visit | TASMAC ஊழல்.. துரத்தும் ED டெல்லி பறந்த செந்தில் பாலாஜி திடீர் விசிட்! பின்னணி என்ன?Sunita Williams: 27 ஆயிரம் KM Speed! 1927 டிகிரி செல்சியஸ்! Real Wonder Woman சுனிதா வில்லியம்ஸ்DMDK Alliance DMK |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Punjab Farmers: இரவோடு இரவாக அகற்றம்..! பாஜகவிற்கு ஆதரவாக ஆம் ஆத்மி சிஎம், விவசாயிகள் கைது
Punjab Farmers: இரவோடு இரவாக அகற்றம்..! பாஜகவிற்கு ஆதரவாக ஆம் ஆத்மி சிஎம், விவசாயிகள் கைது
CSK Vs MI IPL 2025: சென்னையில் கோலோச்சும் மும்பை, ஹர்திக் படையை தாக்கு பிடிப்பாரா கெய்க்வாட்..! ஐபிஎல் ஆண்ட பரம்பரைகள்
CSK Vs MI IPL 2025: சென்னையில் கோலோச்சும் மும்பை, ஹர்திக் படையை தாக்கு பிடிப்பாரா கெய்க்வாட்..! ஐபிஎல் ஆண்ட பரம்பரைகள்
Weather: இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை இருக்கு-  நாளைய வானிலை எப்படி?
இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை இருக்கு- நாளைய வானிலை எப்படி?
அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?
அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?
CISF Recruitment 2025: 10-வது தேர்ச்சி பெற்றவரா? 1161 பணியிடங்கள்! மத்திய அரசுப் பணி; விவரம் இதோ!
CISF Recruitment 2025: 10-வது தேர்ச்சி பெற்றவரா? 1161 பணியிடங்கள்! மத்திய அரசுப் பணி; விவரம் இதோ!
Rajinikanth: ரஜினியை பார்த்து பைத்தியக்காரன் என்ற பிரபல இயக்குனர்! பார்த்திபன் பகிர்ந்த ஷாக்!
Rajinikanth: ரஜினியை பார்த்து பைத்தியக்காரன் என்ற பிரபல இயக்குனர்! பார்த்திபன் பகிர்ந்த ஷாக்!
தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்கள் தாக்கிக்கொள்வதாகப் பரவும் காணொளி.. உண்மையா?
அரசு பள்ளி மாணவர்கள் தாக்கிக்கொள்வதாகப் பரவும் காணொளி.. உண்மையா?
இனி பாலுக்கு பிரச்னையே இருக்காது.. விவசாயிகளுக்கு அடிச்சது ஜாக்பாட்.. தெரிஞ்சுக்கோங்க!
இனி பாலுக்கு பிரச்னையே இருக்காது.. விவசாயிகளுக்கு அடிச்சது ஜாக்பாட்.. தெரிஞ்சுக்கோங்க!
Embed widget