![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Odisha Train Accident: ஒடிஷா ரயில் விபத்து.. நாளை சென்னை திரும்பும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகள்
ஒடிசாவில் நேர்ந்த ரயில் விபத்தில் சிக்கி மீட்கப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த பயனிகள், நாளை சென்னைக்கு அழைத்து வரப்பட உள்ளனர்.
![Odisha Train Accident: ஒடிஷா ரயில் விபத்து.. நாளை சென்னை திரும்பும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகள் Coromandel Express Accident tamilnadu passangers will return to chennai tomorrow odisha Goods passenger accident Odisha Train Accident: ஒடிஷா ரயில் விபத்து.. நாளை சென்னை திரும்பும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/03/a9cb0779fcc68318255e5b05b52fb4c31685763513144315_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஒடிசாவில் நேர்ந்த ரயில் விபத்தில் சிக்கி மீட்கப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த பயனிகள், நாளை சென்னைக்கு அழைத்து வரப்பட உள்ளனர்.
ஒடிசா ரயில் விபத்து:
ஒடிசா மாநிலத்தின் பாலசோர் பகுதியில் நடைபெற்ற 3 ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில், 250-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 900-க்கும் அதிகமானோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்குள்ளான கோரமண்டல் விரைவு ரயில் சென்னையை நோக்கி வந்தது என்பதால், இதில் தமிழர்கள் ஏராளமானோர் பயணித்து இருக்கலா என எதிர்பார்கப்படுகிறது.
தமிழக அரசு தீவிரம்:
இதையடுத்து விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்கும் பணிகளை தமிழ்நாடு அரசு முடுக்கிவிட்டது. இதுதொடர்பாக ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதோடு, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சிவசங்கர் ஆகியோருடன், தமிழக அதிகாரிகளும் ஒடிசா விரைந்துள்ளனர். இதனிடையே, தமிழ்நாடு மாநில அரசின் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்வதற்கான பிரத்யேக எண்களும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 044- 25330952, 044-25330953, 044-25354771 ஆகிய எண்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழர்களுக்கு சிறப்பு ரயில்:
விபத்தில் காயமின்றி தப்பிய 200-க்கும் அதிகமான பயணிகள், ஒடிசாவின் பாகாநாகா பகுதியில் இருந்து சிறப்பு ரயில் மூலம் ஹவுரா பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து, காயமின்றி தப்பியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதையடுத்து, சுமார் 150-க்கும் மேலான தமிழர்கள் நாளை காலை புவனேஷ்வரில் இருந்து இயக்கப்படும் சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட உள்ளனர். சுமார் 9 மணியளவில் இந்த ரயில் அங்கிருந்து புறப்படும் என எதிபார்க்கப்படுகிறது.
ஏற்பாடுகள் தீவிரம்:
விபத்தில் படுகாயமடைந்த 50-க்கும் அதிகமான தமிழர்களை விரைந்து தமிழகம் கொண்டு வர நடவடிக்கை முடிக்கிவிடபட்டுள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 70 ஐசியு அறைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதோடு, சென்னையில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிகள் மருத்துவமனையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்த தமிழகத்தை சேர்ந்த 100-க்கும் அதிகமானோரை தொடர்பு கொண்டு பேசியுள்ளதாகவும், அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் அமைச்சர் கே.கே. எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)