மேலும் அறிய

பாஜகவை வீழ்த்தவேண்டும் என வந்துவிட்டால், காங்கிரஸ் ஆம் ஆத்மி தலைமையைக்கூட ஏற்கும் - ப.சிதம்பரம் 

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு தனது கட்சி தயாராக உள்ள நிலையில், பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்காக மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று மூத்த தலைவர் சிதம்பரம் கூறினார்.

பாஜகவை வீழ்த்த ஆம் ஆத்மி தலைமையின் கீழ் இருக்கக்கூட காங்கிரஸ் விரும்புவதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் சமீபத்திய தேர்தல் தோல்விகளுக்கு காந்தி குடும்பம் மட்டுமே பொறுப்பேற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். 

காங்கிரஸின் ஜி-23 கூட்டத்திற்கு பிறகு தனியார் ஆங்கில டிவிக்கு சிதம்பரம் பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறுகையில், "5 மாநில தேர்தல் தோல்விக்கு பிறகு சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி பதவி விலக முன்வந்தனர். ஆனால் அதை காங்கிரஸ் கமிட்டி ஏற்கவில்லை. எனவே,  புதிய காங்கிரஸ் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறையை நாம் விரைவுபடுத்த வேண்டும். ஆனால் ஆகஸ்ட் மாதம்தான் அது நடக்கும். அதுவரை சோனியா காந்தி தலைமை தாங்குவார் என்று நான் உட்பட அனைவரும் நம்புகிறோம்.
சோனியா காந்தி தேர்தலை முன்னெடுக்க பரிந்துரைத்தார். ஆனால் பெரும்பாலான தலைவர்கள் ஏற்கவில்லை. கபில் சிபல் போன்ற "ஜி-23" தலைவர்கள் தேர்தலில் தோல்வியடைந்த கட்சிக்கு புத்துயிர் அளிக்க புதிய தலைமைக்கு வழிவகை செய்ய வேண்டும் என்று வெளிப்படையாக அழைப்பு விடுத்து வருகின்றனர்.

சமீபத்திய தோல்விகளுக்கு காந்தி குடும்பத்தினரை மட்டுமே குற்றம் சொல்ல வேண்டும் என்று சொல்வது தவறு. நான் கோவாவின் பொறுப்பை ஏற்றுக்கொண்டது போல காந்தி குடும்பத்தினர் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். மற்றவர்கள் மற்ற மாநிலங்களுக்கு பொறுப்பை ஏற்றுக்கொண்டார்கள். பொறுப்பில் இருந்து யாரும் ஓடுவதில்லை. ஆனால் தொகுதி, மாவட்டம், மாநிலம் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மட்டத்தில் தலைமைப் பதவியில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உள்ளது. 


பாஜகவை வீழ்த்தவேண்டும் என வந்துவிட்டால், காங்கிரஸ் ஆம் ஆத்மி தலைமையைக்கூட ஏற்கும் - ப.சிதம்பரம் 

ஆகஸ்ட் மாதத்தில் நாங்கள் முழுநேர தலைமைத்துவத்தைப் பெறுவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இப்போது முதல் ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டத்தில் கட்சி அமைப்பில் தேவையான மற்றும் விரிவான சீர்திருத்தங்களை மேற்கொள்வதே நாம் செய்யக்கூடியது. சோனியா காந்தி அதைச் செய்கிறார் என்று நான் நம்புகிறேன்.

அதுவரை கட்சியின் பிளவு ஏற்படாது என்று நம்புகிறேன். கட்சியை பிளவுபடுத்த வேண்டாம் என்பதே ஜி23 தலைவர்களுக்கு நான் வைக்கும் வேண்டுகோள் ஆகும். எனது மற்றொரு வேண்டுகோள் அவரவர் தொகுதிகளுக்குச் சென்று கட்சியைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதுதான். அனைவரும் திரும்பிச் சென்று கட்சிப் பிரிவுகளை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்” என்றார்

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு தனது கட்சி தயாராக உள்ள நிலையில், பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்காக மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று மூத்த தலைவர் சிதம்பரம் கூறினார்.

“ஒவ்வொரு கட்சியும் மாற்றங்களைச் செய்ய வேண்டும். இது மம்தா பானர்ஜி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் பொருந்தும். மாநிலம் வாரியாக போராட்டம் இருக்கும். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் தலைமையில் போராட வேண்டும். பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்து போராட வேண்டும். தலைவராக, மாநிலம் வாரியாக பாஜகவை எதிர்த்துப் போராடினால், அதைத் தோற்கடிக்க முடியும். பல மாநிலங்களில் காங்கிரஸ் பலவீனமாக உள்ளது. தொகுதி கமிட்டிகளை கலைத்துவிட்டு மீண்டும் அமைக்க வேண்டும். உத்தரபிரதேசத்தில் பல ஆண்டுகளாக கட்சி வறண்டு கிடப்பதை நாம் அனைவரும் அறிவோம். முதலில் கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும், அதன் பிறகு தேர்தலில் போட்டியிட வேண்டும். இதுதொடர்பாக நான் தலைமைக்கு எடுத்துரைத்துள்ளேன்.

கபில் சிபல் மற்றும் குலாம் நபி ஆசாத் போன்றோர் சுட்டிக்காட்டியதை நான் சுட்டிக் காட்டினேன். பல்வேறு இடங்களில் தலைவர்கள் இல்லை, தொண்டர்கள் மட்டுமே உள்ளனர். அரசியல் ஆர்வம், தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நாட்டம் உள்ள தலைவர்களை அடையாளம் காண வேண்டும். கட்சிக்கு 24/7 உழைக்கும் தலைவர்கள் தேவை. 40, 50 மற்றும் 60 வயதுகளில் உள்ளவர்களால் மட்டுமே இதைச் செய்ய முடியும். அவர்கள் தொகுதி அளவில் முழுநேரமாக இருக்க வேண்டும் என்றால், அவர்களுக்கு பணம் தேவைப்படும். முழு நேரப் பணியாளர்கள், முழுநேர அலுவலகப் பணியாளர்களுக்கு ஆதரவளிப்பதற்கான வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்” என்று கூறினார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Embed widget