மேலும் அறிய

"பிரதமர் மோடி பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் அல்ல.. மக்கள ஏமாத்துறாரு" பரபரப்பை கிளப்பும் ராகுல் காந்தி!

பொது பிரிவில் பிறந்தவர் என்பதால் தன் வாழ்நாள் முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை பிரதமர் மோடி நடத்த விடமாட்டார் என ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.

இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இரண்டாவது யாத்திரையை தொடங்கியுள்ளார் ராகுல் காந்தி. அதன்படி, மணிப்பூரில் தொடங்கப்பட்ட யாத்திரை, நாகாலாந்து வழியாக அஸ்ஸாம், பிகார், மேற்குவங்கம், ஜார்க்கண்டை தொடர்ந்து ஒடிசா சென்றடைந்துள்ளது.

பிரதமர் மோடி மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

ஒடிசா மாநிலத்தில் யாத்திரையின்போது பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி பரபரப்பான குற்றச்சாட்டுகளை சுமத்தினார். பிரதமர் மோடி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை (ஓபிசி) சேர்ந்தவர் அல்ல, பொதுப்பிரிவை சேர்ந்த அவர் தன்னை ஓபிசி என சொல்லி கொண்டு மக்களை ஏமாற்றி வருவதாக பேசியுள்ளார்.

இதுகுறித்து விரிவாக பேசிய ராகுல் காந்தி, "பிரதமர் மோடி, ஓபிசி சமூகத்தில் பிறக்கவில்லை. அவர் குஜராத்தில் தெலி சாதியில் பிறந்தவர். கடந்த 2000 ஆம் ஆண்டு, தெலி சாதியை பா.ஜ.க.தான் ஓபிசி பிரிவில் சேர்த்தது. பொது பிரிவை சேர்ந்தவர் பிரதமர் மோடி. அவர் ஓபிசி சமூகத்தில் பிறக்கவில்லை, பொது பிரிவில் பிறந்தவர் என்பதால் தன் வாழ்நாள் முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த விடமாட்டார்" என்றார்.

மக்களவை தேர்தலுக்கு 45 நாள்கள் கூட இல்லாத நிலையில், பிரதமர் மோடி குறித்து ராகுல் காந்தி தெரிவித்துள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் ஓபிசி மற்றும் பட்டியலின, பழங்குடி மக்களுக்கான இடஒதுக்கீடு வரம்பை உயர்த்த வேண்டும் என்றும் காங்கிரஸ் கோரிக்கை விடுத்து வருகிறது.

ஓபிசி அரசியலை கையில் எடுத்துள்ள ராகுல் காந்தி:

குறிப்பாக, ஓபிசி மக்களுக்கான அரசியலை கையில் எடுத்துள்ள ராகுல் காந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதற்கு நேர் எதிராக, தேர்தல் பிரச்சாரம் தொடங்கி நாடாளுமன்ற வரை, பிரதமர் மோடி தன்னுடைய ஓபிசி அடையாளத்தை முன்னெடுத்து வருகிறார்.

நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவராக இருப்பதால் அவர்களை தன் பக்கம் இழுப்பதில் காங்கிரஸ், பாஜக போட்டியிட்டு வருகிறது.

 

ஆனால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மத்தியில் மாநில கட்சிகளே செல்வாக்கு மிக்கதாக உள்ளன. குறிப்பாக, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி, லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை ஓபிசி மக்களிடையே நல்ல செல்வாக்கை பெற்றுள்ளது.

வரும் மக்களவை தேர்தலில், பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மக்களின் ஆதரவு யாருக்கு இருக்கிறதோ அவர்களே மத்தியில் ஆட்சி அமைப்பார்கள்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
L Murugan :
L Murugan : "யாருடன் கூட்டணி? தாய் மொழிக்கு முக்கியத்துவம்” அடித்து பேசிய எல்.முருகன்..!
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
P. Chidambaram :  ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
P. Chidambaram : ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
L Murugan :
L Murugan : "யாருடன் கூட்டணி? தாய் மொழிக்கு முக்கியத்துவம்” அடித்து பேசிய எல்.முருகன்..!
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
P. Chidambaram :  ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
P. Chidambaram : ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
Disabled Astronaut: வரலாற்றில் முதல்முறை..! யார் இந்த ஜான் மெக்ஃபால்? விண்வெளிக்கு பறக்கும் மாற்றுத்திறனாளி
Disabled Astronaut: வரலாற்றில் முதல்முறை..! யார் இந்த ஜான் மெக்ஃபால்? விண்வெளிக்கு பறக்கும் மாற்றுத்திறனாளி
3-Language Policy  : “மும்மொழிக் கொள்கையை திமுக எதிர்ப்பது ஏன்” வெளியான உண்மை காரணம்..!
3-Language Policy : “மும்மொழிக் கொள்கையை திமுக எதிர்ப்பது ஏன்” வெளியான உண்மை காரணம்..!
DELHI CM: டெல்லி முதலமைச்சர்  ஆகும் பெண் எம்.எல்.ஏ.,? பிப்.18ம் தேதி பதவியேற்பு? 15 அமைச்சர்களின் லிஸ்ட்..!
DELHI CM: டெல்லி முதலமைச்சர் ஆகும் பெண் எம்.எல்.ஏ.,? பிப்.18ம் தேதி பதவியேற்பு? 15 அமைச்சர்களின் லிஸ்ட்..!
பணியிடத்தில் அலுவலக ரீதியாக ஊழியர்களை கண்டிப்பது குற்றமாகாது: உச்சநீதிமன்றம்
பணியிடத்தில் அலுவலக ரீதியாக ஊழியர்களை கண்டிப்பது குற்றமாகாது: உச்சநீதிமன்றம்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.