மேலும் அறிய

கேரளாவில் கால்பதிக்க துடிக்கும் பாஜக.. பட்டியல் சமூகப்பிரிவு கூட்டத்தில் திட்டத்தை வெளியிட்ட அமித் ஷா

மக்களுடனான தொடர்பை காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள் இழந்துவிட்டதாகவும், அதனால் விரைவில் அங்கு தாமரை மலரும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை அன்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கேரளாவின் இரண்டு முக்கிய சக்திகளான காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள், மக்களுடனான அவர்களது தொடர்பை இழந்துவிட்டதாகவும் அதனால் விரைவில் அங்கு தாமரை மலரும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை அன்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாட்டில் காங்கிரஸ் வேகமாக அழிந்து வருகிறது, உலகம் கம்யூனிஸ்டுகளை வெகு காலத்திற்கு முன்பே ஒழித்து விட்டது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியால் மட்டுமே மாநிலத்தை வளர்ச்சி மற்றும் வளமான பாதையில் அழைத்து செல்ல முடியும் என்றும் திருவனந்தபுர புறநகர் பகுதியான கஜகூத்தத்தில் நடைபெற்ற பட்டியல் சமூகப்பிரிவு கூட்டத்தில் அமித் ஷா கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "கேரளாவுக்கு எதிர்காலம் என்றால் அது பாஜகதான். மோடி ஆட்சியால் மாநிலத்தின் தேவையான மாற்றத்தை கொண்டு வர முடியும். மத்திய பாஜக அரசு வறுமையை ஒழித்து இந்தியாவிற்கு புதிய பாதையை அமைக்க உறுதி பூண்டுள்ளது. ஏழைகளுக்கு எரிவாயு இணைப்புகள், தேவைப்படுபவர்களுக்கு கழிப்பறைகள் போன்ற அரசின் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

ஏழைகள் மற்றும் தலித்துகளைப் பற்றி காங்கிரஸும், கம்யூனிஸ்டுகளும் எப்போதும் பெரிதாகப் பேசி வந்தாலும், அவர்களின் வளர்ச்சிக்காக எதையும் செய்யவில்லை என குற்றம்சாட்டிய அமித் ஷா, "எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தபோது, ​​​​பட்டியல் சமூகத்திலிருந்து (ராம்நாத் கோவிந்த்) ஒரு குடியரசு தலைவரை உருவாக்கினோம்.

இப்போது நாங்கள் ஒரு பழங்குடியின தலைவரான திரௌபதி முர்முவை நாட்டின் மிக உயர்ந்த பதவிக்கு உயர்த்தியுள்ளோம். காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) வார்த்தைகள் மற்றும் செயல்கள் ஒருபோதும் பொருந்தியதில்லை. மாநிலத்தில் தேவையான மாற்றத்தை பாஜகவால் மட்டுமே கொண்டு வர முடியும். ஒரு மாற்றத்திற்காக மக்கள் பாஜகவை ஆதரிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். மேலும் மாநிலத்தில் விரைவில் தாமரை மலரும்" என்றார். ஓணம் பண்டிகையை முன்னிட்டு அவர் மாநில மக்களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். (10 நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஓணம் செப்டம்பர் 8 அன்று கொண்டாடப்படுகிறது). பின்னர் அவர் நகரில் கலந்து கொண்ட கலாசார நிகழ்ச்சிகளின் படங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

கேரள பயணம் குறித்து ட்வீட் செய்த அமித்ஷா, "ஒவ்வொரு இந்தியனும் கேரளாவின் செழுமையான கலாசாரம் மற்றும் பாரம்பரியம் குறித்து பெருமிதம் கொள்கிறான். மங்களகரமான ஓணம் திருநாளில் அழகான நிலையில் இருக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது" என பதிவிட்டுள்ளார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

ISRO: ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி! இனி கவலை இல்லை!
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி! இனி கவலை இல்லை!
10 கிலோ எல்பிஜி சிலிண்டர்: இனி சுமை இல்லை! வணிகர்கள், வீடுகளுக்கு புதிய வசதி.
10 கிலோ எல்பிஜி சிலிண்டர்: இனி சுமை இல்லை! வணிகர்கள், வீடுகளுக்கு புதிய வசதி.
Chennai-Bengaluru Bullet Train: மணிக்கு 320 கி.மீ வேகம்! தமிழ்நாட்டின் முதல் புல்லட் ரயில் பாதை... வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
மணிக்கு 320 கி.மீ வேகம்! தமிழ்நாட்டின் முதல் புல்லட் ரயில்! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Kia Syros EV First Look: “டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
“டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
CM Vijay warning : தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 17-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னை மக்களே.! ஜூலை 17-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
DMK:
DMK: "தேர்தல் வாக்குறுதி vs தவெக-வின் பாசிஸ்ட் ஆட்சி" - விஜய் ஆட்சியை விமர்சிக்கும் திமுக - என்ன காரணம்?
TASMAC: குடிமகன்களுக்கு இனி ஜாலி.! தமிழகம் முழுவதும் Resto - Bar - புதிய பிளான் போட்ட டாஸ்மாக்
குடிமகன்களுக்கு இனி ஜாலி.! தமிழகம் முழுவதும் உணவகத்துடன் கூடிய Resto - Bar - புதிய பிளான் போட்ட டாஸ்மாக்
Embed widget