மேலும் அறிய

KV Viswanathan: மத்திய அரசுக்கு பரிந்துரைத்த கொலிஜியம்.. உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்நாட்டை சேர்ந்த கே.வி. விஸ்வநாதன்..!

கோவை சட்ட கல்லூரியில் சட்ட பட்டப்படிப்பை பயின்ற கே.வி.விஸ்வநாதன், கடந்த 1988 ம் ஆண்டு தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தார்.

ஆந்திரப் பிரதேச தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் மூத்த வழக்கறிஞர் கே.வி. விஸ்வநாதன் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் நேற்று பரிந்துரை செய்துள்ளது. 

தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, தலைமை நீதிபதிகள் மற்றும் உயர்நீதிமன்ற மூத்த நீதிபதிகளில் தகுதி மற்றும் நேர்மை ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்த பிறகே மிஸ்ரா மற்றும் விஸ்வநாதன் ஆகியோரின் பதவிக்கு பரிந்துரைக்க முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா:

 நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 13 ம் தேதி ஆந்திரப் பிரதேச தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். முன்னதாக இவர், சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தின் நீதிபதி மற்றும் செயல் தலைமை நீதிபதியாகப் பணியாற்றினார்.

நீதிபதி கே.வி விஸ்வநாதன்:

கோவை சட்ட கல்லூரியில் சட்ட பட்டப்படிப்பை பயின்ற கே.வி.விஸ்வநாதன், கடந்த 1988 ம் ஆண்டு தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தார். பல்வேறு துறை சார்ந்த வழக்குகளில் ஆஜராகி தனது திறமையை நிரூபித்தார். நாடு முழுவதும் அதிகமாக பேசப்பட்டு வந்த ஒரே பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் கோரும் வழக்கில், மனுதாரர் சார்பில் ஆஜராகி கே.வி. விஸ்வநாதன் வாதாடி வருகிறார். 

உச்சநீதிமன்றம் 34 நீதிபதிகளை கொண்டதாக இருக்கும். இருப்பினும், வருகின்ற ஜூலை 2வது வாரத்தில் நீதிபதிகள் கே.எம். ஜோசப், அஜய் ரஸ்தோகி, கிருஷ்ணா முராரி மற்றும் வி. ராமசுப்ரமணியன் ஆகியோர் ஓய்வுபெற இருக்கின்றனர். மேலும், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் ரவீந்திர பட் இந்த ஆண்டு இறுதியில் ஓய்வு பெற உள்ளனர்.

அதனடிப்படையில், கொலீஜியம் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால், வருகின்ற 2030 ஆண்டு ஆகஸ்டு  மாதம் 11 ம் தேதி நீதிபதி ஜே.பி.பர்திவாலா ஓய்வுபெறும்போது, தமிழ்நாட்டை சேர்ந்த நீதிபதி கே.வி விஸ்வநாதன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்று, 2031 ம் ஆண்டு மே 25ம் தேதி வரை பதவி வகிப்பார். 

இது மட்டும் சாத்தியமானால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகிக்கும் 3வது தமிழர் என்ற பெருமையை கே.வி விஸ்வநாதன் பெறுவார். இதற்கு முன்னதாக பதஞ்சலி சாஸ்திரி மற்றும் பி.சதாசிவம் ஆகியோர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்தனர். 

தலைப்பு செய்திகள்

NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
ஒரே இளைஞரைத் திருமணம் செய்துகொண்ட 3 சகோதரிகள்! வைரலாகும் விசித்திரச் சம்பவம்!
ஒரே இளைஞரைத் திருமணம் செய்துகொண்ட 3 சகோதரிகள்! வைரலாகும் விசித்திரச் சம்பவம்!
SC On CJP: மாணவர்கள் மீது தாக்குதல்..! உச்சநீதிமன்றத்தில் நடந்த வாதம் - தலைமை நீதிபதியின் கருத்து என்ன?
மாணவர்கள் மீது தாக்குதல்..! உச்சநீதிமன்றத்தில் நடந்த வாதம் - தலைமை நீதிபதியின் கருத்து என்ன?
போலீஸ் வாகனத்தை வழிமறித்த இளம்பெண் யார்? நாடு முழுவதும் பேசப்படும் ரியா அஹிரின் பின்னணி!
போலீஸ் வாகனத்தை வழிமறித்த இளம்பெண் யார்? நாடு முழுவதும் பேசப்படும் ரியா அஹிரின் பின்னணி!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN : “Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
“Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
Actress Jyothika : அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
Chengalpattu metro rail : அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
Thirumavalavan:
Thirumavalavan: "தர்மேந்திர பிரதான் பாவம்.." திருமாவளவன் திடீரென ஏன் அப்படி பேசினார்?
Sanam Shetty:
Sanam Shetty: "நான் தளபதி ரசிகை.." சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - நீங்களே பாருங்க
TASMAC SHOP : பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
Embed widget