மேலும் அறிய

KV Viswanathan: மத்திய அரசுக்கு பரிந்துரைத்த கொலிஜியம்.. உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்நாட்டை சேர்ந்த கே.வி. விஸ்வநாதன்..!

கோவை சட்ட கல்லூரியில் சட்ட பட்டப்படிப்பை பயின்ற கே.வி.விஸ்வநாதன், கடந்த 1988 ம் ஆண்டு தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தார்.

ஆந்திரப் பிரதேச தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் மூத்த வழக்கறிஞர் கே.வி. விஸ்வநாதன் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் நேற்று பரிந்துரை செய்துள்ளது. 

தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, தலைமை நீதிபதிகள் மற்றும் உயர்நீதிமன்ற மூத்த நீதிபதிகளில் தகுதி மற்றும் நேர்மை ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்த பிறகே மிஸ்ரா மற்றும் விஸ்வநாதன் ஆகியோரின் பதவிக்கு பரிந்துரைக்க முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா:

 நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 13 ம் தேதி ஆந்திரப் பிரதேச தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். முன்னதாக இவர், சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தின் நீதிபதி மற்றும் செயல் தலைமை நீதிபதியாகப் பணியாற்றினார்.

நீதிபதி கே.வி விஸ்வநாதன்:

கோவை சட்ட கல்லூரியில் சட்ட பட்டப்படிப்பை பயின்ற கே.வி.விஸ்வநாதன், கடந்த 1988 ம் ஆண்டு தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தார். பல்வேறு துறை சார்ந்த வழக்குகளில் ஆஜராகி தனது திறமையை நிரூபித்தார். நாடு முழுவதும் அதிகமாக பேசப்பட்டு வந்த ஒரே பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் கோரும் வழக்கில், மனுதாரர் சார்பில் ஆஜராகி கே.வி. விஸ்வநாதன் வாதாடி வருகிறார். 

உச்சநீதிமன்றம் 34 நீதிபதிகளை கொண்டதாக இருக்கும். இருப்பினும், வருகின்ற ஜூலை 2வது வாரத்தில் நீதிபதிகள் கே.எம். ஜோசப், அஜய் ரஸ்தோகி, கிருஷ்ணா முராரி மற்றும் வி. ராமசுப்ரமணியன் ஆகியோர் ஓய்வுபெற இருக்கின்றனர். மேலும், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் ரவீந்திர பட் இந்த ஆண்டு இறுதியில் ஓய்வு பெற உள்ளனர்.

அதனடிப்படையில், கொலீஜியம் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால், வருகின்ற 2030 ஆண்டு ஆகஸ்டு  மாதம் 11 ம் தேதி நீதிபதி ஜே.பி.பர்திவாலா ஓய்வுபெறும்போது, தமிழ்நாட்டை சேர்ந்த நீதிபதி கே.வி விஸ்வநாதன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்று, 2031 ம் ஆண்டு மே 25ம் தேதி வரை பதவி வகிப்பார். 

இது மட்டும் சாத்தியமானால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகிக்கும் 3வது தமிழர் என்ற பெருமையை கே.வி விஸ்வநாதன் பெறுவார். இதற்கு முன்னதாக பதஞ்சலி சாஸ்திரி மற்றும் பி.சதாசிவம் ஆகியோர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்தனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Kanimozhi Karunanidhi : ‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ முதல்வர் ஸ்டாலினின் திட்டம் என்ன..?
‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ ஸ்டாலினின் திட்டம் என்ன..?
ABP Premium

வீடியோ

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Kanimozhi Karunanidhi : ‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ முதல்வர் ஸ்டாலினின் திட்டம் என்ன..?
‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ ஸ்டாலினின் திட்டம் என்ன..?
Teachers Protest:தொடர் போராட்டம்; ஸ்தம்பித்த காமராசர் சாலை, திடீரெனக் குவிந்த ஆசிரியர்கள்- மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
Teachers Protest:தொடர் போராட்டம்; ஸ்தம்பித்த காமராசர் சாலை, திடீரெனக் குவிந்த ஆசிரியர்கள்- மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
Silver Rate: வெள்ளிய இப்பவே வாங்கிடுங்க.! இன்னும் 3 மாசம் தான்; ஒரு கிராம் இவ்வளவா உயரப் போகுது.?!
வெள்ளிய இப்பவே வாங்கிடுங்க.! இன்னும் 3 மாசம் தான்; ஒரு கிராம் இவ்வளவா உயரப் போகுது.?!
CUET UG 2026: மே மாதத்தில் க்யூட் நுழைவுத் தேர்வு, ஆதார் கட்டாயம்; தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு- முக்கிய அறிவுரை!
CUET UG 2026: மே மாதத்தில் க்யூட் நுழைவுத் தேர்வு, ஆதார் கட்டாயம்; தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு- முக்கிய அறிவுரை!
New Kia Seltos Vs Honda Elevate: புதிய கியா செல்டோஸ்-ஆ.? ஹோண்டா எலிவேட்-ஆ.?; எல்லா விதத்திலும் எந்த SUV அதிக சக்தி வாய்ந்தது.?
புதிய கியா செல்டோஸ்-ஆ.? ஹோண்டா எலிவேட்-ஆ.?; எல்லா விதத்திலும் எந்த SUV அதிக சக்தி வாய்ந்தது.?
Embed widget